News Update :
Powered by Blogger.

மாணிகளிடம் சில்மிஷம் செய்யும் ஆசிரியர்

Penulis : Tamil on Saturday, 9 March 2013 | 23:01

Saturday, 9 March 2013

தமிழகத்தின் மதுரை அருகே, குலமங்கலத்திலுள்ள அரச மேல்நிலைப்பள்ளியில் சில மாணவிகளிடம் ஒரு சில ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்தது.
இதுபற்றி பாதிப்புக்குள்ளான மாணவிகளின் பெற்றோர்கள் கூடல் புதூர் பொலிசில் புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரில் பள்ளியில் பணியாற்றி வரும் சில ஆசிரியர்கள் மாணவிகளை தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரபு கொடுப்பதாகவும், செல்போனில் ஆபாசமாக படம் எடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.
இதை தொடர்ந்து பொலிசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் ஆங்கில பாட ஆசிரியர் டெரன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட ஆசிரியர் விஜயகுமார் ஆகிய 2 பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
பாதிப்புக்குள்ளான மாணவிகளின் பெற்றோர்கள் அப்பகுதியில் உள்ள இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுத்தாயிடம் தெரிவித்தனர்.
மாணவிகளின் பெற்றோர்கள் சார்பில் பொன்னுத்தாயி பொலிசில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: மாணவிகளிடம் சில்மிசம் செய்த ஆசிரியர்கள்!

comments | | Read More...

கத்திமுனையில் மாணவி கற்பழிப்பு

Penulis : Tamil on Sunday, 3 March 2013 | 01:22

Sunday, 3 March 2013

பூந்தமல்லி, மார்ச். 3-
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயா. இவரது தங்கை தேவி (10) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தாய்-தந்தையை இழந்த இருவரும் போரூர் லட்சுமி நகரில் வசித்து வந்தனர். வீட்டு வேலை செய்து அதில் கிடைக்கும் குறைந்த பணத்தில் விஜயா தங்கையை காப்பாற்றினார். வறுமையில் வாடிய நிலையிலும் தேவியை அருகில் உள்ள பள்ளியில் படிக்க வைத்தார். அவர் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
விஜயா தங்கி இருக்கும் வீட்டின் மாடியில் கட்டுமான பணிகளை உரிமையாளர் மேற்கொண்டார். இதற்காக சில நாட்களாக மணல், ஜல்லி இறக்கி வந்தனர். நேற்று காலை வீட்டு வேலைக்காக விஜயா வெளியில் சென்றார். தேவி மட்டும் தனியாக இருந்தார். அந்த நேரத்தில் லோடு ஆட்டோ டிரைவர் மதுரவாயலை சேர்ந்த மகாதேவன் (34) கட்டுமான பொருட்கள் கொண்டு வந்து இறக்கினார். தேவி தனியாக இருப்பதை அறிந்து அவர் நைசாக பேச்சு கொடுத்தார். தண்ணீர் கேட்பது போல நடித்து வீட்டின் உள்ளே சென்று கதவை பூட்டினார்.
பின்னர் கத்தியை காட்டி மிரட்டி தேவியை கற்பழித்தார். இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி விட்டு தப்பி சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பிய விஜயா, உடலில் காயத்துடன் தங்கை தேவி அழுது கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் கேட்ட போது கற்பழிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இது குறித்து போரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
பூந்தமல்லி உதவி கமிஷனர் அய்யப்பன், இன்ஸ் பெக்டர் ஷேக்பாபு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த டிரைவர் மகாதேவனை பிடித்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மாணவி தேவியை பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் தனியாக இருந்த மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் போரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

comments | | Read More...

தேனிலவு சுற்றுலா திட்டம்: புதுமண ஜோடிக்கு வாய்ப்பு honey moon tour to mars

Penulis : Tamil on Wednesday, 27 February 2013 | 23:44

Wednesday, 27 February 2013

செவ்வாய் கிரகத்துக்கு புதுமண ஜோடி தேனிலவு செல்லும் சுற்றுலா திட்டத்தை தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.

விண்ணில் சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய கிரகம் செவ்வாய் (மார்ஸ்) இது சூரியனில் இருந்து 4-வது இடத்தில் பூமிக்கு அடுத்ததாக காணப்படுகிறது.

பூமிக்கு சந்திரன் துணைக்கோள் இருப்பதுபோல செவ்வாய் கிரகத்துக்கு போபோஸ், டெயிமோஸ் என்ற 2 துணைக் கோள்கள் உள்ளன. தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பி உள்ளது.

இதுபோல் பல்வேறு உலக நாடுகளும் செவ்வாய் கிரகத்தை பற்றியே ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. பூமியைப்போல செவ்வாய் கிரகத்திலும் மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான தண்ணீர் அதிக அளவு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியில் காணப்படுவது போலவே செவ்வாயிலும் பருவ நிலை சுழற்சி நிகழ்கின்றது. மலைகள், பள்ளத்தாக்குகள், கால்வாய்கள், எரிமலைகள், பாலைவனங்கள் உள்ளன.

தற்போது செவ்வாயின் சுற்றுப் பாதையில் அமெரிக்காவின் 3 விண்கலங்கள் சுற்றி வருகின்றன. வருங்காலத்தில் அங்கு மனிதன் குடியேற முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் டிட்டோ என்ற விண்வெளி சுற்றுலா நிறுவனம் எதிர்காலத்தில் விண்வெளிக்கு மனிதன் சுற்றுலா செல்லும் திட்டத்தை ஏற்கனவே அறிவித்தது. இதற்கான ஒப்பந்தத்தை நாசாவுடன் இணைந்து செய்துள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் இது தொடங்கும் என்று அறிவித்தது.

தற்போது செவ்வாய் கிரகத்தில் தேனிலவு பயணம் செல்லும் திட்டத்தையும் அது அறிவித்துள்ளது. இதில் திருமணமான தம்பதி பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மொத்தம் 501 நாட்கள் பயணம். இதற்கான செலவு ரூ. 5,400 கோடி என்றும் இன்னும் 5 வருடத்தில் இந்த திட்டம் தொடங்கும் என்றும் அதன் அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கு தேர்வு செய்யப்படும் தம்பதிக்கு விண்வெளிப்பயணம் பற்றிய பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு செவ்வாய் கிரகத்துக்கு பயணம் தொடங்கும்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger