News Update :
Powered by Blogger.

என்னை கொலை செய்துவிடுவேன் என்று கொலைமிரட்டல் விடுத்தார் -ராமதாஸ்

Penulis : karthik on Saturday, 28 January 2012 | 20:40

Saturday, 28 January 2012

வன்னியர் கல்லூரி விவகாரம் பெரிதாகி வருகிறது. டாக்டர் ராமதாஸ் மீது
போலீஸில் புகார் கொடுத்த கல்லூரியின் பேராசிரியர் மாயகிருஷ்ணன்
மீதுகல்லூரி நிர்வாகம் புகார் கொடுத்த நிலையில் தற்போது ஒரு மாணவரும்
புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பச்சைக் கவுண்டர் என்கிற அந்த மாணவர் ஒலக்கூர் காவல்
நிலையத்தில் கொடுத்துள்ளபுகாரில்,
டாக்டர் ராமதாஸுக்கு எதிராக புகார் கொடுத்த உதவிப் பேராசிரியர்
மாயக்கிருஷ்ணன், கல்லூரி மாணவர்களிடையே பிரிவினையைத் தூண்டும்
வகையில்பேசுவார்.
கட்டணம் செலுத்த வேண்டாம், சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகளுக்கு வர
வேண்டும் என்று கூறுவார். இதை எதிர்த்துக் கேட்டதால் என்னை கொலை
செய்துவிடுவேன் என்று கொலைமிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மாணவர்களிடையே வன்முறையைத் தூண்டினார், தட்டிக் கேட்டபோது மிரட்டினார்
என்று மாயகிருஷ்ணன் மீது ஏற்கனவே கல்லூரி அலுவலர் மாமல்லனும் ஒரு புகார்
கொடுத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
முன்னதாக மாயகிருஷ்ணன் ஒலக்கூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில்
தன்னை டாக்டர் ராமதாஸ் தூண்டுதலின் பேரில் கல்லூரி இயக்குநர்
ஹரிகிருஷ்ணன் அவரது உதவியாளர் வெங்கடேசன் தாக்கினர் என்று
கூறியிருந்தார். இதன் பேரில் ராமதாஸ் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீஸார்
வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மாறி மாறி
புகார்களாக வந்தவண்ணம் உள்ளன.
comments | | Read More...

கூகுள் பின்வாங்க ட்விட்டர் ஆயுத்தம் ஆகின்றது

கூகுள் தளங்களில் கிடைக்கும் ஆபாச, மத உணர்வைப் புண்படுத்துகிற,
பயங்கரவாதத்துக்கு துணை போகிற செய்திகள், படங்களை தங்களால் சென்சார்
செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"கூகுள், ட்விட்டர், பேஸ்புக், யாஹூ உள்ளிட்ட 21 இணையதள நிறுவனங்கள்
நடத்தும் அல்லது இவற்றின் துணையுடன் இயங்கும் பல லட்சம் இணையதளங்களில்
கணக்கற்ற ஆபாச தகவல்கள், படங்கள், தீவிரவாதத்துக்கு துணைபோகும்
விஷயங்கள், மத உணர்வை புண்படுத்தும் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.
இந்தியாவின் இணையவெளி தடையற்றதாக உள்ளதால், இளம் தலைமுறை ஆபாசம், வன்முறை
மற்றும் தீவிரவாதத்துக்கு துணைபோக இந்த இணையதளங்கள் துணைபோகின்றன.
இவற்றால் மதக் கலவரம் ஏற்படுகின்றன. எனவே இவற்றை சம்பந்தப்பட்ட
நிறுவனங்கள் அல்லது இந்த இணையதளங்களை வழங்கும் கூகுள் போன்ற நிறுவனங்கள்
சென்சார் செய்ய வேண்டும்", எனக்கோரி டெல்லியைச் சேர்ந்த வினய் ராய்
என்பவர் டெல்லி நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார்.
கூகுளின் ஆர்குட், யு ட்யூப் மற்றும் யாஹூ தளங்களில்தான் அதிக அளவு
மதவெறியைத் தூண்டும் வகையில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ கடவுள்களை
மிக மோசமாக சித்தரித்துள்ளதாக இந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தார்
மனுதாரர்.
இந்த வழக்கு விசாரணையின்போது கூகுள் உள்ளிட்ட 21 நிறுவனங்களும்,
இணையவெளியில் தணிக்கை முறைகளை மேற்கொள்ள முடியுமா... மோசமான விஷயங்களை
தடை செய்ய முடியுமா என்பது குறித்து மார்ச் 13-ம் தேதிக்குள்
பதிலளிக்குமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த சம்மனுக்கு எதிராக கூகுள்,யாஹூ, பேஸ்புக் உள்ளிட்ட 21 நிறுவனங்களும்
சமீபத்தில் பதில் மனு தாக்கல் செய்தன. அதில் இந்தியா சர்வாதிகார நாடல்ல,
ஜனநாயக நாடு. ஆபாசம் உள்ளிட்ட எந்த விஷயத்தையும் இங்கே சட்டப்படி தடை
செய்ய முடியாது என வாதிட்டன.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் பிப்ரவரி 2-ம் தேதி நடக்கவிருக்கிறது.
இந்த நிலையில் சுவிட்ஸர்லாந்துநாட்டின் டாவோஸ் நகரில் நடக்கும் உலக
பொருளாதார மாநாட்டில் இந்தியாவிலிருந்து 113 பேர் கொண்ட குழு
பங்கேற்றுள்ளது. கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த
மாநாட்டுக்கு வந்துள்ளனர்.
Read: In English
இதில் கூகுளின் இந்தியப் பிரிவுக்கான தலைமை விற்பனை அலுவலர் நிகிலேஷ்
அரோரா கூறுகையில், "இந்தியாவில் இணையவெளியை சென்சார் செய்வது இயலாத
காரியம். அப்படிச் செய்தால் உலகம் முழுவதும் உள்ள மக்களின் கருத்து
சுதந்திரத்தில் குறுக்கிடுவது போலாகிவிடும்," என்றார்.
மேலும் கூறுகையில்,"எல்லாவற்றையும் தணிக்கை செய்து, சுத்தமான விஷயமாகத்
தருவது அடிப்படையில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்குப் பாதகமாகப்
போய்விடும். மேலும் இந்தியாவின் இணையவெளியில் கூகுள் மூலம் வரும் ஆபாச-
மத வெறி விஷயங்களுக்கு இந்தியாவில் இயங்கும் அந்த நிறுவனக் கிளை
பொறுப்பாகாது," என்றார்.
மோசமான கருத்துக்களை சென்சார் செய்ய நாங்க ரெடி! - ட்விட்டர் அதிரடி
இந்தியாவில் எந்தவகை மோசமான, ஆபாசமான தகவல்களையும்
சென்சார்செய்யமாட்டோம் என்று கூகுளும் பேஸ்புக்கும் அடம்பிடித்து வரும்
நிலையில், இணைய தள உலகில் முக்கிய நிறுவனமாகத் திகழும் ட்விட்டர், சட்டம்
வலியுறுத்தினால் மோசமான கருத்துக்கள், செய்திகளை நீக்கத் தயார் என
அறிவித்துள்ளது.
இணையதளங்களை இந்தியாவில் சென்சார் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதன்
மூலம் புதிய பலம் கிடைத்துள்ளது.
இணையதளங்களை சென்சார் செய்வது குறித்து இந்தியாவில் இப்போதுதான் புதிய
விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இணையவெளியில் கோடிக்கணக்கான ஆபாச, வன்முறையைத் தூண்டும், மத உணர்வுகளைப்
புண்படுத்தும் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த தகவல்களைத் தாங்கி
வரும் தளங்களுக்கு கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள்
இடமளிக்கின்றன. இந்த நிறுவனங்களின் தேடியந்திரங்கள் (search engines)
எல்லா வகையான தகவல்களையும் கொண்டு வந்து கொட்டுகின்றன. இவற்றை பல நாடுகள்
தடை செய்வதில்லை. ஆனால்சில முக்கிய நாடுகளில் தடை அமலில் உள்ளது.
பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் ஆபாச இணையதளங்கள், மதரீதியான வக்கிரமான
கருத்துக்களைப் பரப்பும் தளங்களை தடை செய்துள்ளனர். இங்கெல்லாம் கூகுளைத்
தட்டினால் இந்த வகைத் தளங்களைப் பார்க்க முடியாது.
சீனாவில் 90 சதவீத சென்சார் அமலில் உள்ளது. இதனை கோல்டன் ஷீல்டு
புராஜக்ட் எனும் சட்டத்துக்கு உட்பட்டு சென்சார் விதிகளை கடைப்பிடித்து
செயல்படுகிறது கூகுள். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த கூகுள், இதற்கு
கட்டுப்படாவிட்டால் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிவிடுவோம் என சீன
அரசு எச்சரித்ததால் அடங்கிப் போனது.
அதேபோல, ஜெர்மனி மற்றும் பிரான்சில் நாஜி கருத்துகளைப் பரப்பும் இணைய
தளஙக்களை சென்சார் செய்ய கூகுள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுமே ஒப்புக்
கொண்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்த நாடுகளின் சட்டங்கள் இதை
வலியுறுத்துவதால் அதை கடுமையாகபின்பற்றுகின்றன கூகுள் போன்றவை.
ஆனால் இந்தியாவில் இணைய வெளியைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட சட்டங்கள்
எதுவும்இல்லை என்பதைக் காரணம் காட்டி, அனைத்து வகை வக்கிர, அநாகரீகக்
கருத்துக்கள், படங்கள் மற்றும் வீடியோக்களை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் உலகின் வக்கிர குப்பைகளைக் கொட்டும்
நாடாக இந்தியா மாறிவிட்டது என்றும், இதுவே சமூகக் குற்றங்கள், வரம்பு
மீறல்கள் மற்றும் மோசமான கலாச்சாரத்துக்கு வழி வகுத்துவிட்டதாகவும் சமூக
ஆர்வலர்கள் கருத்து தெரி்வித்து வருகின்றனர்.
இந்த நிலை அரசுக்கு கவலை அளித்துள்ளது. எனவே, இந்த தளங்கள் அனைத்தையும்
சென்சார் செய்ய வேண்டும், மோசமான content-ஐ தடை செய்ய வேண்டும் என
வழக்கும் தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றங்களும் கூகுள் உள்ளிட்ட
நிறுவனங்களை, ஏன் இந்தகுப்பைகளை இந்தியாவில் தடுக்க முயற்சிக்கவில்லை என
கேள்வி எழுப்பி வருகின்றன.
இணையவெளியை கட்டுப்படுத்துவது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது
என்றும், இந்தியா ஜனநாயக நாடு என்பதால் இங்கே அதைசெய்ய மாட்டோம் என்றும்,
அது இந்தியாவின் வளர்ச்சியை
comments | | Read More...

நயன் காதலுக்கு நாமம் போட்ட பிரவுதேவா

காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறந்து
கொண்டிருக்கிறார்கள் நயன்தாராவும் பிரபுதேவாவும்.
ஆனால் இங்கே என்னடா என்றால், ரெண்டு பேருக்கும் புட்டுக்கிச்சு என்று
கிசுகிசுபரப்புகிறார்கள். அதுவே செய்தியாகவும் கசிவதால் அதையெல்லாம்
படித்துவிட்டு, இந்த பசங்களுக்கு இதே வேலையாப் போச்சு என்று நமுட்டு
சிரிப்பு சிரிக்கிறதாம் ஜோடி.
நயன்தாரா மீண்டும் நடிக்கப் போகிறார் என்று வெளிவரும் செய்திகளிலும்
அவ்வளவு உண்மை இல்லையாம். அவரை தேடிச் சென்று அழைக்கிற சில
இயக்குநர்களிடம், யோசிக்கிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். நேரில்
வருகிறவர்களிடம் முகத்தில் அடித்த மாதிரி பதில் சொல்ல முடியாதல்லவா?
அதனால்தான் இப்படி ஒரு பதில்.
எப்படி இருக்கிறது இப்போதைய நிலவரம்? பிரபுதேவா இந்தியில் இயக்கிக்
கொண்டிருக்கும் ரவுடிரத்தோர் படப்பிடிப்பு பதாமியில் நடந்து வருகிறது.
அவ்வப்போது கிளம்பி பதாமிக்கு சென்றுவிடுகிறார் நயன்தாரா.
சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு மீண்டும் கேரளாவுக்கு
திரும்பிவிடுகிறார். இந்த சந்திப்பும் மிக மிக சுமூகமாகவே இருக்கிறதாம்.
அதுமட்டுமல்ல, இவர்கள் இருவருமே சென்னையின் காஸ்ட்லி பகுதியான போர்ட்
கிளப்பில் வீடு வாங்கியிருப்பதாகவும் தகவல்.
உண்மை இப்படியிருக்கும் போது எதற்காக திரும்ப திரும்ப இவர்களின் காதலை
டெட்டால் ஊற்றி கழுவிக் கொண்டேயிருக்கிறது மீடியா என்பதுதான் புரியவே
இல்லை! சும்மா கௌப்பிவிட்டது சில நேரத்துல உண்மையானது மாதிரி
என்னமாச்சும் நடந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல....
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger