News Update :
Powered by Blogger.

பாரதிராஜாவுக்கு காங்கிரஸ் அழைப்பு

Penulis : karthik on Sunday, 22 January 2012 | 20:49

Sunday, 22 January 2012

சென்னையில் நடந்த விழா ஒன்றில் இயக்குநர் பாரதிராஜா பேசும்போது , ''
நான் தீவிர காங்கிரஸ்காரன். காங்கிரஸுக்காக மேடையில் ஏறி தேர்தல்
பிரச்சாரம் செய்திருக்கிறேன். என் தாயின் நகைகளை விற்று காங்கிரஸுக்காக
என் தந்தை பாடுபட்டுள்ளார்.
நேரு போன்ற பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் இன்றுசோனியா தலைவராக
இருக்கிறார். இதனால் காங்கிரஸில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு.
அந்த கருத்து வேறுபாடு அப்பா- அம்மா , அண்ணன்-தம்பிக்கு இடையேயான கருத்து
வேறுபாட்டைப்போன்றது நான் கலைஞனாகவே இருக்கவிரும்புகிறேன் '' என்றார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசுகையில் ,
தமிழகத்தில் எந்த இயக்கத்திற்கும் காங்கிரஸ் சளைத்தது அல்ல. பெரியார்
பிரச்னையாகட்டும் , மீனவர் பிரச்னையாகட்டும் , அணுமின் நிலையமாகட்டும்.
தமிழக மக்களின் நலனுக்காக காங்கிரஸ் போராடும்.
பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும் , சுதர்சன நாச்சியப்பன்
எம்பியும் பாரதிராஜா போன்றவர்கள் காங்கிரஸில் இணைய வேண்டும் என அழைப்பு
விடுத்தனர்.
comments | | Read More...

1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, ஆசிரியர்களை நியமிக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தரம் உயர்த்தப்பட்ட 1,049 நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக, 1,267 பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, ஆசிரியர்களை நியமிக்க, முதல்வர்
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த பணியிடங்கள் இந்த ஆண்டுக்குள்
உருவாக்கப்படும். இந்த அறிவிப்பால், கிராமப்புற பள்ளிகளுக்கு,
ஆசிரியர்கள் அதிகளவில் நியமிக்கப்பட உள்ளனர்.
பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், புதிய
ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கவும் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து
நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பின், இதுவரை 55
ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள்
வெளியிடப்பட்டுள்ளன. இதில், 16,549 பகுதி நேர ஆசிரியர்களை தேர்வு
செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, தற்போது ஆசிரியர்கள் தேர்வு
செய்யப்பட்டு வருகின்றனர். மற்ற ஆசிரியர் பணியிடங்களை பொறுத்தவரை,
போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்களா அல்லது பதிவு மூப்பு
அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்களா என்பது இன்னும் இறுதி
செய்யப்படவில்லை. அவ்வாறு போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட்டாலும்,
இடைநிலைக் கல்வி சட்டப்படி, அந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி,
ஆசிரியராக நியமிக்கப்பட தகுதி பெற்றிருக்க வேண்டும்.
இது தொடர்பான பணிகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்கக்
கூடும். இந்நிலையில், இப்போது தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பு நேற்று
வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு காரணமாக, கிராமப்புற நடுநிலைப்
பள்ளிகளில் அதிகளவு ஆசிரியர்கள் இடம் பெற உள்ளனர். இது, கிராமப்புற
மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு : இந்த அரசு பதவியேற்ற பின்,
பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் அடிப்படையில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், 2009ம்
கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட, 831 நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா, ஒரு
ஆசிரியர்வீதம், 831 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கவும்,
2010-2011ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட, 218 நடுநிலைப்
பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு, இரண்டு ஆசிரியர்கள் வீதம், 436 ஆசிரியர்
பணியிடங்கள் என மொத்தம், 1,267 பணியிடங்களை புதிதாக உருவாக்க, முதல்வர்
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய பணியிடங்கள், இந்த கல்வியாண்டிலே
உருவாக்கப்பட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
வரவேற்பு : அரசு உத்தரவு குறித்து நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியன்
கூறும்போது, ""புதிதாக ஆசிரியர் நியமனம் தொடர்பான
அறிவிப்புகள்வரவேற்கத்தக்கது.
ஆனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய,
அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.""மத்திய அரசின்
விதிக்குட்பட்டு, தகுதித் தேர்வு நடத்தி ஆசிரியர்களை தேர்வு செய்வதா
அல்லது இப்போதைக்கு மாநிலத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும்
தேர்வு மட்டும் போதுமா என்பதில் முடிவு எடுக்கப்படவில்லை. இதில் விரைவில்
முடிவு எடுத்து, காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க
வேண்டும்,'' என்றார்.
மேஜை, நாற்காலிக்கு ரூ.36 கோடி :பள்ளிகளில் கட்டமைப்பு
வசதிகளைமேம்படுத்தும் நோக்கத்தில், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான சாய்வு மேஜை, நீள் இருக்கை,
மேஜை, நாற்காலி முதலான இருக்கை வசதிகளை ஏற்படுத்த, 36 கோடியே 17 லட்சம்
ரூபாய் ஒதுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது
comments | | Read More...

`கொலை வெறி’ பாடல் சிங்களர்களுக்கு எதிரானதா? இலங்கை பாராளுமன்றத்தில் காரசார விவாதம்

தனுஷ் எழுதி பாடிய ஒய்திஸ் கொலைவெறி பாடல் உலகம் முழுவதும் பரவியுள்ளது.
ஜப்பான், பாகிஸ்தான் நாட்டினர் இதை பாடுகின்றனர். இலங்கை
பாராளுமன்றத்தில் ஈழத் தமிழர்களை படுகொலை செய்த சிங்களர்களை மனதில்
வைத்து இப்பாடல் எழுதப்பட்டு உள்ளதாக காரசார விவாதம் நடந்தது.
இலங்கை பாராளுமன்றத்தில் ஊழியர் சகாய நிதியம் திருத்த சட்ட திருத்த மசோதா
மீதான விவாதத்தில் ஆளும் கட்சி எம்.பி.யான அஸ்வர் பங்கேற்று பேசும் போது
ஜே.வி.பி. கட்சி எம்.பி.க்களை பார்த்து `ஒய் திஸ்கொலை வெறி', `ஒய்திஸ்
கொலை வெறி' என்றார்.
பதிலுக்கு ஜே.வி.பி. கட்சி எம்.பி.க்கள் எமக்கு நோ கொலை வெறி என்றனர்.
தொடர்ந்து அஸ்வர்எம்.பி. பேசும் போது தமிழ் நாட்டுகாரர்களுக்கு கொலை வெறி
பிடித்துள்ளது. அதனால் தான் அவர்கள் கொலை வெறி, கொலை வெறி எனபாடலில் கூட
பாடுகின்றனர். எங்கள் மீது உள்ள கொலை வெறியில்தான் நம்மை பார்த்து இந்த
பாடலைபாடியுள்ளனர் என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய ஜோகராஜன் எம்.பி. ஒய் திஸ் கொலை வெறி
பாட்டுக்கு வேறு அர்த்தங்கள் உள்ளன. அஸ்வர் எம்.பி. தமிழகத்தவர்களுக்கு
உள்ள கொலை வெறியில் தான் இந்த பாடல் பாடப்பட்டதாக சொல்வது தவறு. நீங்கள்
பாடலுக்கு தவறான அர்த்தத்தை கற்பிக்க வேண்டாம் என்றார். ஆனால் அஸ்வர்
எம்.பி. குறுக்கிட்டு நான் சொல்வது தான் சரி எங்கள் மீது உள்ள கொலை
வெறியில் தான் இந்த பாடலை பாடி உள்ளனர் என்றார்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger