News Update :
Powered by Blogger.

Fw: பவர் ஸ்டாருக்கு நோஸ் கட் கொடுத்த நித்யா மேனன்!

Penulis : karthik on Wednesday, 12 October 2011 | 23:05

Wednesday, 12 October 2011

 
 
பவர் ஸ்டார் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் நடிகர் டாக்டர் சீனிவாசன், நடிகை நித்யா மேனனுக்கு குறி வைத்து மூக்குடை பட்டிருக்கிறார். நித்யா மேனனுக்கு கேரளாவில் ரெட் கார்ட் போட்டிருக்கிறார்கள் என்பதால் தான் கூப்பிட்டவுடன் வந்து நடிப்பார் என்ற எதிர்பார்ப்பாலோ என்னவோ, நடிகை நித்யாவை தொடர்பு கொண்ட பவர் ஸ்டார், நான் ஹீரோவா நடிக்கிற ஒரு படத்தில் என்னுடன் ஜோடியா நடிக்க நீங்க ரெடியா? அப்படி ரெடி என்றால் ஒரு கோடி சம்பளம் தருகிறேன் என்றாராம். ஐம்பதே தாண்டாத நித்யா, ஒரு கோடி என்றதும் ஒரேயடியாக தாண்டிக்குதித்து வந்துவிடுவார் என்பது அவரது கால்குலேஷன்.
 
ஆனால் அதற்கு நித்யா மேனன் சொன்ன பதில்தான் கோடம்பாக்கமே கூடி நின்று பேசும் மேட்டர். சாரிங்க... நான் சீனியர் சிட்டிசனுடன் நடிப்பதில்லை, என்று கூறி நோஸ் கட் கொடுத்திருக்கிறார் நித்யா மேனன். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மூன்றாவது அணியாக போட்டியிட்டு 50க்கும் குறைவான ஓட்டுக்களை வாங்கி தோற்றபோது வருத்தப்படாதவரா, நித்யாவின் பேச்சைக் கேட்டு வருத்தப்பட போகிறார். வழக்கம்போலவே சிரித்த முகத்துடன் வேறு நாயகியை தேட ஆரம்பித்து விட்டாராம்.



comments | | Read More...

விஜய்யுடன் நடித்தபோது ஜெனிலியாவுடன் மோதலா? -ஹன்சிகா

 
 
விஜய்யின் "வேலாயுதம்" படத்தில் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா இணைந்து நடித்துள்ளனர். ராஜா இயக்கி உள்ளார். இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. படப்பிடிப்பில் ஹன்சிகாவுக்கும் ஜெனிலியாவுக்கும் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இருவரும் தனக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று ராஜாவை நிர்ப்பந்தப்படுத்தியதாகவும் கூறப்பட்டது. யார் பெரியவர் என்பதில் இருவருக்கும் ஈகோ இருந்ததாக ராஜாவும் உறுதிப்படுத்தினார்.
 
இதுபற்றி ஹன்சிகாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:- "வேலாயுதம்" படத்தில் விஜய்யுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெனிலியாவுக்கும் எனக்கும் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதாக வெளியான செய்தி எனக்கு அதிர்ச்சி அளித்தது. இயக்குனர் ராஜாவே இதை தெரிவித்தார் என்று என்னால் நம்ப முடியவில்லை. அவர் என்ன சொன்னார் என்பது எனக்கு முழுமையாக தெரியாது. நானும் ஜெனிலியாவும் நல்ல தோழிகள். அவருடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
 
"வேட்டை மன்னன்" படத்தில் சிம்புவுடன் நடிக்க என்னை அணுகினர். கதை பிடித்து இருந்தது. அதில் எனது கேரக்டர் என்ன என்பதை வெளிப்படுத்த முடியாது. சித்தார்த்துடன் தெலுங்கு படமொன்றிலும் நடிக்கிறேன். உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக "ஒரு கல் ஒரு கண்ணாடி" படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இவ்வாறு ஹன்சிகா கூறினார்.



comments | | Read More...

இந்தாங்க ஐம்பது லட்சம்… -விமல் செய்த பேரூதவி

 

விரலை பிடித்து உருவினால் கூட, விலகி ஓடும் நடிகர்களுக்கு மத்தியில் விமல் செய்த ஒரு காரியம் இன்டஸ்ட்ரியையே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. பொதுவாக தான் நடிக்கும் படங்கள் ஓடாவிட்டால் அந்த படத்தின் தயாரிப்பாளரை சந்திக்கவே அஞ்சுவார்கள் பெரும்பாலான ஹீரோக்கள். படம் நல்லா ஓடுனா நமக்கா கொடுக்க போறாரு? என்றொரு கேள்வியையும் கேட்பார்கள் கூடவே.

இவர்களுக்கு மத்தியில்தான் இப்படி ஒரு காரியத்தை செய்து கண்கலங்க வைத்திருக்கிறார் விமல். என்னவாம்?

வாகை சூடவா படத் தயாரிப்பாளர் முருகானந்தம் அப்படத்தின் தோல்விக்கு பின்பு படு சிக்கலுக்குள்ளாகியிருக்கிறார். அவருக்கு உதவும் விதத்தில், தான் வாங்கிய ஐம்பது லட்ச ரூபாய் சம்பளத்தையும் சுளையாக திருப்பி கொடுத்துவிட்டார் விமல்.

தன் கையில் பணமில்லாத நிலையிலும் இரண்டு படங்களை ஒப்புக் கொண்டு அதில் கிடைத்த அட்வான்சுடன், மிச்ச மீதி தொகையை நாலு இடத்தில் புரட்டியும் கொடுத்தாராம். இதோடு நிறுத்தியிருந்தால் கூட ஆச்சர்யமில்லை. ஒரு படத்தில் இலவசமாகவே நடிச்சு தர்றேன். கவலைப்படாதீங்க என்றும் கூறியிருக்கிறாராம்.

ஈசான்ய மூலையில் எப்பவாவது மேகம் திரளுதுன்னா அது இவங்களை மாதிரி ஆட்களால்தான்…

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger