News Update :
Powered by Blogger.

நயன்தாரா வின் மேனி பஞ்சர்

Penulis : Tamil on Sunday, 11 August 2013 | 06:51

Sunday, 11 August 2013

இடைவிடாத படப்பிடிப்பு. சுற்றியிருக்கும்
லைட்களின் வெப்பம். கொஞ்சமாக
டயர்டாகிவிட்டார் தாடி தந்த காதல்
தோல்வியால் துவண்டு எழுந்த
கற்புகரசி நடிகை. நம்மாட்கள் அதனை,
நடிகைக்கு தோலில் பிரச்சனை,
சமர்த்து நடிகையைப் போல
சருமத்துக்கு சிகிச்சை எடுக்கிறார் என
எழுதிவிட்டனர்.
இத்தனைக்கும் நடிகை படப்பிடிப்பில்
தொடர்ந்து பங்கு கொண்டுதான் இருக்கிறாராம்.
அப்புறம் எப்படி இந்த
மாதிரி ஒரு செய்தி வெளியானது? விஷயம்
கேள்விப்பட்ட நடிகை, மேனி கொதிக்கும்
அளவுக்கு கோபப்பட்டிருக்கிறார்.
நடிகை கோபப்பட்டால் மேலும் அழகாக
இருப்பார். அதற்காக
இப்படியா அடிக்கடி கோபப்படுத்திப் பார்ப்பது

comments | | Read More...

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: பயஸ் ஸ்டெபானிக் ஜோடி வெளியேறியது Rogers cup tennis paes stepanek jodi exited

Penulis : Tamil on Friday, 9 August 2013 | 07:02

Friday, 9 August 2013

கனடாவில் நடைபெற்று வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இன்று ஆடவர் இரட்டையர் 2-ம் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் 4-ம் தரநிலை ஜோடியான லியாண்டர் பயஸ்-ஸ்டெபானிக் ஜோடி, இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே-கோலின் பிளெமிங் ஜோடியை எதிர்கொண்டது.

இந்திய-செக் குடியரசு ஜோடியான பயஸ்-ஸ்டெபானிக் ஜோடி, 3-6, 3-6 என்ற செட்கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதன்மூலம் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

போபண்ணா-ஆண்ட்ரே பெக்மேன் ஜோடி ஏற்கனவே வெளியேறியது. சீனாவின் ஜீ ஜெங்குடன் இணைந்து விளையாடிய சானியா மிர்சா, 2-வது சுற்றில் தோல்வியடைந்தார். 

comments | | Read More...

பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களை காக்க அதிநவீன ஆயுதம்

Penulis : Tamil on Wednesday, 7 August 2013 | 21:33

Wednesday, 7 August 2013

இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள், கற்பழிப்புகள், மானபங்கப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றுக்கு எதிராக சட்டங்கள் பல கொண்டு வந்தும், இந்த சமூகக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியவில்லை. இந்தக் கொடுமையே பெண்களுக்கு நேராமல் தடுப்பதற்கு ஏற்ற வகையில் ஒரு அதிநவீன ஆயுதம் ஒன்றை ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கி உள்ளது.

அசாம் மாநிலத்தில்தான் உலகிலேயே அதிக காரம் உள்ள மிளகாய் விளைவிக்கப்படுகிறது. இந்த மிளகாய்ச்சாறில் இருந்துதான் இந்த தெளிப்பான் (ஸ்பிரே) உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடக்கக்கூடிய தருணத்தில் இந்த தெளிப்பானை எதிர் தரப்பினர் மீது தெளிக்க ஆயுதமாகப் பயன்படுத்தலாம்.

டெல்லி மேல்-சபையில் ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்தபோது இந்த தகவலை ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி வெளியிட்டார். இந்த தெளிப்பான் சோதனைகளில் பயன்படுத்தப்பட்டபின்னர், டி.ஆர்.டி.ஓ. அமைப்பே இதை பிரபலப்படுத்தும் எனவும் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger