ஆயுத முனையில் சிரிய ஆயுதக் குழுவால் உயிருடன் புதைக்கப்படும் நபர்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு
Penulis : karthik on Friday, 27 April 2012 | 05:20

அலெக்ஸ்பால் மேனனை குறிவைத்து கடத்தியது ஏன்? மாவோயிஸ்டுகள் விளக்கம்!
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்ட ஆட்சியரான தமிழ்நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ்பால் மேனனை குறிவைத்து கடத்தியது ஏன் என்பத ு குறித்து மாவோயிஸ்டுகள் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மாவோயிஸ்டு அமைப்பதின் தென் பஸ்தான் பிராந்திய கமிட்டியின் செயலாளர் கணேஸ் உகியின் பெயரில் வெளியாகியுள்ள அந்த அறிக்கையில் பஸ்தார் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரால் பழங்குடி மக்கள் எதிர்கொண்ட சித்தரவதைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அலெக்ஸ்பால் மேனன் ஆட்சியராகப் பொறுப்பேற்ற காலத்தில் காவல்துறையால் சித்ரவதை செய்யப்பட்டோரின் பட்டியலையும் படுகொலை செய்யப்பட்டோர் விவரமும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழங்குடி மக்களை சித்ரவதை செய்த முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் அங்கித் க� �ர்க்கு குடியரசுத் தலைவரின் விருது வழங்கப்பட்ட போதும்கூட அலெக்ஸ்பால் அமைதியாகவே இருந்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் அந்த காவல்துறை கண்காணிப்பாளர் எத்தனை அப்பாவிகளை சித்தரவதைக்குள்ளாக்கினார் என்பது அலெக்ஸ்பால் மேனனுக்குத் தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உலக வங்கியின் ஆலோசனையின் பேரில் தொடங்கப்பட்டுள்ள கிராம் சுராஜ் திட்டத்தைக் கைவிடுமாறு ஏற்கெனவே தாங்கள் எச்சரித்திருந்த போதும் மாவட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசாங்க நிர்வாகமானது அதை புறக்கணித்ததுடன் பஸ்தார் பிராந்தியத்தின் பெருமளவு இயற்கை கனிமவளத்தை ப ன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கவும் முயற்சித்தனர் என்றும் மாவோயிஸ்டுகள் குறிப்பிட்டுள்ளனர்.
தண்டேவாடா சிறையில் 150 பேரைத்தான் அடைத்து வைக்க முடியும்... ஆனால் 700க்கும் மேற்பட்டோரை அடைத்து வைத்துள்ளனர். இதேபோல் மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பழங்குடி மக்களை சிறையில் அடைத்துள்ளனர் என்றும் மாவோயிஸ்டுகள் அதில் தெரிவித் துள்ளனர்.
மாவோயிஸ்டுகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கடத்தல் சம்பவங்களை மேற்கொள்வது வழக்கம். ஆனால் தற்போது தங்களது கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகக் கூறி ஆட்சியரைக் கடத்தியிருப்பதற்கு மாவோயிஸ்டுகள் விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்காலை நிர்மூலமாக்கினோம்- ராணுவ தளபதி
முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான் ஈழப் போரில் வெல்ல முடிந்தது அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரியா தெரிவி்ததுள்ளார்.
ஜெயசூரியாவின் இந்தப் பேச்சு, ராஜபக்சேவுக்கு எதிரான போர்க்குற்றசாட்டுக்கு தேவையான வலுவான ஆதாரமாக பின்னர் உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஈழத்தில் நடந்த இறுதிகட்டப்போரின்போது முள்ளிவாய்க்காலில் விஷ கொத்துக்குண்டுகள் வீசி 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் இலங்கை அரசு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இலங்கையின் குருநாகல் பகுதியில் நடந்த ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரியா ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்கால் பகுதியை ராணுவம் நிர்மூலமாக்கியதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
கடந்த 2009ம் ஆண்டு இலங்கையின் வடக்கு பகுதியில் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளின் உதவியோடு போர் நடத்தினோம். கடைசியாக முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் நடத்துவதா வேண்டாமா என்று தோன்றியது. ஏனென்றால் அந்த பகுதியில் 45,000க்கும் அதிகமான தம ிழர்கள் வசித்து வந்தனர். அங்கு குண்டு போட்டால் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்களே என்று நினைத்தோம். மேலும் இறுதிகட்டப் போரை நடத்தக் கூடாது என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின.
இதையடுத்து அதிபர் ராஜபக்சேவிடம் ஆலோசனை நடத்தினோம். அப்போது அவர் எக்காரணம் கொண்டும் போரை நிறுத்த வேண்டாம் என்றும் சர்வதேச மிரட்டல்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்து திட்டமிட்டபடி தாக்குதல் நடத்துங்கள் என்று என்னிடம் தொலைபேசி மூலம் உத்தரவிட்டார்.
அவர் கொடுத்த தைரியத்தில் தான் போரை வெற்றிகரமாக நடத்த முடிந்தது. மேலும் போர்காலத்தில் அவர் தான் எங்களுக்கு பலமாக இருந்தார். அவர் மட்டும் மனிதாபிமான அடிப்படையில் இரக்கம் காட்டியிருந்தால் நம்மால் இறுதிகட்டப்போரில் வென்றிருக்க முடியாது. இறுதிகட்டப் போரில் நாம் வெல்ல உறுதுணையாக இருந்த நாடுகளையும், � �வர்கள் செய்த உதவிகளையும் மறக்கவே முடியாது என்றார் ஜெயசூர்யா.
ஜெயசூர்யாவின் இந்தப் பேச்சு மூலம் கடைசிக் கட்ட போரின்போது மிகக் கொடூரமாக தமிழர்கள் கொலை செய்யப்பட்டது உண்மைதான் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் ராஜபக்சே சொல்லித்தான் தாங்கள் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்றோம் என்பதையும் இந்த ஜெயசூர்யா கூறியுள்ளதால் இது ராஜபக்சேவின் போர்க்குற்ற செயல்பாடுகளுக்கான வலுவான ஆதாரமாக, வாக்குமூலமாக உருவெடுக்கும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.
Subscribe to:
Posts (Atom)
Followers
Popular Posts
-
போக்குவரத்து, இல்லாத மலைகள் சூழ்ந்த கிராமங்களில் உள்ள பொம்பிள பிள்ளைங்க நான்கைந்து மைல்கள் நடந்து போய் படிப்பது என்பது அவ்வளவாக கடைப்பிடி...
-
இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர் வீரரான ...
-
தட்டார்மடம் அருகே திருமணமான 35 நாளில் கணவரே தன்னுடைய மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்தாக நாடகமாடியது அம்பலமானத...
-
ராணுவ வீரரை கடத்தி அவரிடம் பலவந்தமாக உடலுறவில் ஈடுபட்ட 2 பெண்கள் ஆண் கற்பழிப்பு ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த 1...
-
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியே பெரும் பரபரப்பாகிக் கிடக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுடன்...
-
நடிகை வித்யாபாலனின் கவர்ச்சி வீடியோ ஒன்று You Tube இல் வெளியாகியுள்ளது. இவரைப் புகைப்படம் எடுக்கச் சென்ற புகைப்படக்காரர்கள் இவரை எவ்வாறு...
-
சென்னை மாநகரில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் சென்னை...
-
தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம் சென்னையில் தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் வந்தாலும் வந்தது எடுப்பார் கை ப...
-
சமீப கால தமிழ் திரைப்படங்களில் மோசமான காம வெறிக்காட்சிகள் இடம்பெறுகின்றன. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி படமான மகதீரா இங்கு ...
-
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஸ்ரீராமலு நகரை சேர்ந்தவர் லட்சுமி (40). இவரது கணவர் தேவேந்திரன். ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவர்களுக்கு திவ...