News Update :
Powered by Blogger.

என் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்

Penulis : karthik on Thursday, 24 November 2011 | 01:57

Thursday, 24 November 2011

 
 
என் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவிப்பாக சேர்த்துள்ளது தவறு என்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.




ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசராணை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் கடந்த அக்டோபர் மாதம் 21,22 மற்றும் நேற்றும், இன்றும் ஆஜரான முதல்வர் ஜெயலலிதா இந்த வழ்ககு தொடர்பான 1,339 கேள்விகளுக்கு பதில் அளித்தார். இத்துடன் ஜெயலலிதாவிடம் விசராணை முடிந்துள்ளது.

இன்று ஆஜரான ஜெயலலிதா 192 கேள்விகளுக்கு பதில் அளித்ததுடன் எழுத்துப்பூர்வமான விளக்கமும் தந்துள்ளார்.

விசாரணையின் போது ஜெயலலிதா கூறியது குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா விளக்குகையில்,

மக்கள் மத்தியில் எனக்கு இருக்கும் மதிப்பைக் குறைக்கவே இந்த சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு. இது குறித்து ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கொடுத்த புகார் தவறானது.

நான் அந்த காலத்தில் 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். அப்படி நடிக்கையில் வகை, வகையான சேலைகள், அதற்கு மேட்சிங்காக செருப்புகள், நகைகள் எல்லாம் வாங்கினேன். சினிமாவில் ஒரு முறை பயன்படுத்தியதை மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள்.

அப்படி நான் நடிக்கும் காலத்தில் வாங்கிய பொருட்களை எல்லாம் சொத்துகுவிப்பு வழக்கில் சேர்த்துள்ளனர். கடந்த திமுக ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர்கள் மாதவன் மற்றும் ஆற்காடு வீராசாமி ஆகியோர் இந்த வழக்கு விசாரணையில் தலையிட்டு வழக்கை திசைதிருப்ப முயன்றனர். போயஸ் கார்டனில் உள்ள வீட்டைத் தவிர நான் வேறு எந்த சொத்தையும் வாங்கவில்லை.

அரசு அதிகாரிகளை நான் என் சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்தினேன் என்ற கலெக்டரின் சாட்சியமும் பொய்.

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் எனது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தின்போது இசை நிகழ்ச்சி நடத்தினார். ஆனால் அவர் அதற்கு பணம் எதுவும் வாங்கவில்லை. மேலும் இந்த சொத்து குவிப்பு தொடர்பான நல்லம்ம நாயுடுவின் விசாரணையும் உண்மையன்று என்று ஜெயலலிதா கூறியதாக ஆச்சார்யா தெரிவித்தார்.
comments | | Read More...

மீண்டும் ரஜினி பட ரீமேக்கா - அஜித்

 

ரஜினிக்கு செல்வாக்கை பலப்படுத்திய பல படங்களின் தலைப்புகளை கோடம்பாக்கத்தில் நல்ல விலைக்கு விற்று வருகிறார்கள். இந்த வியாபாரம் ஒருபுறம் இருக்க, ரஜினியின் பழைய படங்களை ரீமேக் செய்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். இங்கே ரஜினி நடித்த கதாபாத்திரங்களை ரீபிளேஸ் செய்வதற்கு அஜித்தை விட்டால் ஆள் இல்லை என்கிறார்கள்.



ஏற்கனவே ரஜினியின் பில்லா ரீமேக்கில் நடித்த அஜித்துக்கு அந்தப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்! அந்த வெற்றி தந்த உற்சாகத்தில் பில்லா பாகம் இரண்டில் தற்போது நடித்து வருகிறார் அஜீத். அஜித் நடித்து வரும் பில்லா - 2 ல், தூக்குடு படம் மூலம் பிரபலமான நடிகை மீனாக்ஷி தீட்சித் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். கடந்த 2007ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பில்லா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் 2ம் பாகமாக பில்லா 2 எடுக்கப்பட்டு வருகிறது. படத்தின் நாயகனாக அஜித்தும், நாயகியாக பார்வதி ஓமணக்குட்டனும் நடித்து வருகின்றனர். சக்ரி டோல்டி இப்படத்தை இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பில்லா 2 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது. முதற்கட்ட சூட்டிங் ஐதரபாத்தில் 30நாளும், 2ம் கட்ட சூட்டிங் கோவாவில் 39நாளும் முடிந்து, தற்போது 3ம் கட்ட சூட்டிங் ஜார்ஜியாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் தூக்குடு படம் மூலம் பிரபலமான மீனாக்ஷி தீட்சித், அஜித்துடன் சேர்ந்து ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். ஏற்கனவே பில்லா படத்தில் "செய் ஏதாவது செய்...." என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது யாவரும் அறிந்ததே.
comments | | Read More...

அப்ப 'பகலவன்' ?

 
 
 
விஜய் ' வேலாயுதம் ' படத்தினை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தினை ஜெமினி நிறுவனத்துடன் இணைந்து விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பதாக இருந்தது.
 
இந்நிலையில் இப்படம் ஜெமினி நிறுவனத்திடம் இருந்து கலைப்புலி தாணுவிற்கு கை மாற இருக்கிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விஜய், ஜெனிலியா நடித்த 'சச்சின்' படத்தினை தயாரித்தவர் தாணு.
 
இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நவம்பர் 26-ம் தேதி துவங்கும் என்றும், அங்கு தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.
 
படத்திற்கான காஜல் அகர்வால், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்தினை தயாரிக்க இருந்த தாணு இப்போது இந்த படத்தின் தயாரிப்பாளராக மாறி இருப்பது சீமான் படத்தினை கேள்விக்குறியாக்கி உள்ளது என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.




comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger