News Update :
Powered by Blogger.

பத்திரிகைகளுக்கு பயப்படமாட்டேன் - 'அஞ்சா நெஞ்சன்' ராஜபக்சே!!

Penulis : karthik on Wednesday, 9 November 2011 | 07:54

Wednesday, 9 November 2011

 
 
 
பத்திரிகைகளுக்கு நான் பயப்பட மாட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் செவிலியருக்கான படிப்பை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார்.
 
பல்வேறு விதமான பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். அவ்வாறு பயந்துகொண்டிருந்தால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார்.
 
மேலும் இலங்கையில் ஏராளமான குப்பை பத்திரிகைகள் வெளியாகின்றன என்று அவர் கூறினார்.
 
பொதுமக்கள் பத்திரிகைகளில் வரும் செய்திகளை அப்படியே நம்பிவிடாமல் அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வது அவசியம் என்றார் அவர்.
 
இலங்கையில் சமீப காலமாக பல பத்திரிகைகளை ராஜபக்சே அரசு தடை செய்துவிட்டது. பத்திரிகையாளர்களைத் துன்புறுத்துவதில் உலகிலேயே முன்னணியில் உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று.
 
அரசை எதிர்த்து எழுதியதற்காக சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்கே கொடூரமாக கொல்லப்பட்டதில் ராஜபக்சே மற்றும் அவரது தம்பி கோத்தபாயவுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.
 
புலிகளை ஆதரித்ததாகக் கூறி திசநாயகம் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்களை ராஜபக்சே அரசு துன்புறுத்தியது.
 
இரு தினங்களுக்கு முன்பும்கூட 5 செய்தி இணையதளங்களை மூட உத்தரவிட்டது ராஜபக்சே அரசு என்பது நினைவிருக்கலாம்.



comments | | Read More...

தீவிரவாத இயக்கங்களின் 'ஹிட்' லிஸ்ட்டில் சச்சின்!

 
 
 
தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 18 வி.ஐ.பி.க்கள் பெயர் உள்ளது என்று புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளது.
 
மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேச மாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட புலனாய்வுத் துறை அதிகாரிகள் லஷ்‌கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகளால் வி.ஐ.பி.களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று எச்சரித்தனர்.
 
தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த தயாரித்துள்ள பட்டியலில் 18 வி.ஐ.பிக்களின் பெயர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. போலீசாரோ, புலனாய்வுத் துறை அதிகாரிகளோ அந்த தாக்குதல் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டனர்.
 
பாஜக மூத்த தலைவர் அத்வானி, பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக் கான், ஆமிர் கான், கிரிக்கெட் வீரர் சச்சின், மும்பையின் மிகப் பெரிய தொழில் அதிபர்கள் 2 பேர், பூனே தொழில் அதிபர்கள் 3 பேர் இந்த பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.
 
இதனால் பட்டியலில் உள்ள வி.ஐ.பி.க்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்ப அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரத யாத்திரை மேற்கொண்டுள்ள பாஜக தலைவர் அத்வானிக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.



comments | | Read More...

செக்ஸ் ரோபோ – விற்பனைக்குத் தயார்!

Penulis : karthik on Monday, 7 November 2011 | 23:56

Monday, 7 November 2011

அமெரிக்காவை சேர்ந்த டக்ளஸ் ஹைன்ஸ் ஒரு செக்ஸ் ரோபோவை உருவாக்கி இருக்கிறார். இந்த ரோபோவுக்கு ராக்கி என்று பெயர் சூட்டி இருக்கிறார். இது 5 அடி 6 அங்குலம் உயரம் உள்ளது. சிலிகானை கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ரோபோ பேசவும் செய்யும். இந்த ரோபோவை இங்கிலாந்து நாட்டுக்கு விற்பனை செய்ய எண்ணியுள்ளார் இவர்.

ஸ்காட் மெக்லீன் என்னும் அமெரிக்கரும் செக்ஸ் ரோபோ தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் செக்ஸ் ரோபோட் தயாரிப்பதை அறிந்ததும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பலர் இவரை தொடர்பு கொண்டு தங்களுக்கு வேண்டும் என்று கேட்டனர். அவர்களுக்காகசெக்ஸ் ரோபோட்டுக்களை உருவாக்கி வருகிறார் இவர்.

ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், ரஷியா, தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்தும் செக்ஸ் ரோபோ வேண்டும் என்று கேட்டு அவரிடம் ஆர்டர்கள் குவிந்தன. சிலர் எங்களுக்கு ஏஞ்சலீனா ஜோலி போல பமீலா ஆன்டர்சன் போல மைக்கேல் ஜாக்சன் போல ரோபோட்டுக்கள் வேண்டும் என்று கேட்டனர். பிரபலங்களின் அனுமதி இல்லாமல் அவர்களை போன்ற மாடல்களை செய்து தர முடியாது என்று கூறி விட்டாராம் அவர்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger