News Update :
Powered by Blogger.

சினிமா அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: டாக்டர் ராமதாஸ்

Penulis : karthik on Thursday, 13 October 2011 | 04:58

Thursday, 13 October 2011

 
 
சினிமாவில் நடித்த அம்மையார் தான் இன்று தமிழக முதல்வர். சினிமாவில் நடித்த நடிகர் தான் இன்று தமிழக எதிர்கட்சி தலைவர். எனவே, சினிமா அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
 
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, கம்மாபுரம், விருத்தாசலம், நெய்வேலி, வடலூர் போன்ற பல்வேறு பகுதிகளில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார்.
 
அப்போது அவர் பேசியதாவது, திராவிட கட்சிகளான தி.மு.க.-அ.தி.முக. ஆகிய கட்சிகள் தமிழகத்தை கடந்த 44 ஆண்டுகளாக கொள்ளை கூடாரமாக மாற்றிவிட்டனர். திராவிட கட்சிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், திராவிட கட்சிகளை உதறவிட்டு வெளியில் வந்தோம்.
 
திராவிட கட்சிகள் தான் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர். மக்களுக்கு மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு வழங்குவதால் வறுமையை ஒழித்துவிட முடியாது. சினிமாவில் நடித்த அம்மையார் தான் இன்று முதல்வர். சினிமாவில் நடித்த நடிகர் தான் எதிர்கட்சி தலைவர். எனவே சினிமா அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
 
நாட்டின் வளர்ச்சியைத் தடுத்த திராவிட கட்சிகளை வேரறுப்பது தான் பா.ம.க.வின் முக்கிய பணியாகும். 2016 ல் தமிழகத்தில் பா.ம.க.ஆளும் கட்சியாக உயர்த்தி காட்டுவோம். தமிழகத்தை ஆளும் தகுதி பா.ம.க.விற்கு மட்டுமே உள்ளது, என்றார்.



comments | | Read More...

ஜெ. அரசை மக்களே தூக்கி எறிவார்கள்: வைகோ

 
 
 
தொடர்நது மக்களுக்கு எதிராக செயல்பட்டால் அவர்களே அதிமுக அரசை தூக்கி எறிவார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 
புளியங்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு மதிமுக சார்பில் டாக்டர் சதன் திருமலைக்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர்
 
வைகோ புளியங்குடியில் பிரசாரம் செய்தார்.
 
அப்போது அவர் பேசுகையில்,
 
கடந்த 5 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய சதன் திருமலைக்குமார், புளியங்குடி நகராட்சி பகுதியில் விவசாயிகள் பயன்படுத்துவதற்காக பெரும்பாதை, பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் மற்றும் கூடுதல் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துள்ளார். இவரை நகராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் மேலும் பல நல்ல திட்டங்கள் நகராட்சிக்கு கொண்டு வருவார்.
 
பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 7 ஆதி திராவிடர்கள் பரிதாபமாக இறந்தனர். ஒரு வனவிலங்கை கொன்றால் கூட பெரிய அளவில் தண்டனை கொடுக்கப்படும் நிலையில் 7 மனித உயிர்களை சுட்டு வீழ்த்திய போலீசார் யாரையும் அதி்முக அரசு சஸ்பெண்ட் செய்யவில்லை. அதற்கு மாறாக மறியல் போராட்டம் என்றால் இது போன்ற நிகழ்வு நடைபெறத்தான் செய்யும் என தமிழக அரசு சப்பை கட்டு கட்டுகிறது. இது மனித தன்மையற்ற செயலாகும். இதே போல் தொடர் சம்பவங்கள் நடந்தால் அதிமுக அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் என்றார்.



comments | | Read More...

Fw: பவர் ஸ்டாருக்கு நோஸ் கட் கொடுத்த நித்யா மேனன்!

Penulis : karthik on Wednesday, 12 October 2011 | 23:05

Wednesday, 12 October 2011

 
 
பவர் ஸ்டார் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் நடிகர் டாக்டர் சீனிவாசன், நடிகை நித்யா மேனனுக்கு குறி வைத்து மூக்குடை பட்டிருக்கிறார். நித்யா மேனனுக்கு கேரளாவில் ரெட் கார்ட் போட்டிருக்கிறார்கள் என்பதால் தான் கூப்பிட்டவுடன் வந்து நடிப்பார் என்ற எதிர்பார்ப்பாலோ என்னவோ, நடிகை நித்யாவை தொடர்பு கொண்ட பவர் ஸ்டார், நான் ஹீரோவா நடிக்கிற ஒரு படத்தில் என்னுடன் ஜோடியா நடிக்க நீங்க ரெடியா? அப்படி ரெடி என்றால் ஒரு கோடி சம்பளம் தருகிறேன் என்றாராம். ஐம்பதே தாண்டாத நித்யா, ஒரு கோடி என்றதும் ஒரேயடியாக தாண்டிக்குதித்து வந்துவிடுவார் என்பது அவரது கால்குலேஷன்.
 
ஆனால் அதற்கு நித்யா மேனன் சொன்ன பதில்தான் கோடம்பாக்கமே கூடி நின்று பேசும் மேட்டர். சாரிங்க... நான் சீனியர் சிட்டிசனுடன் நடிப்பதில்லை, என்று கூறி நோஸ் கட் கொடுத்திருக்கிறார் நித்யா மேனன். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மூன்றாவது அணியாக போட்டியிட்டு 50க்கும் குறைவான ஓட்டுக்களை வாங்கி தோற்றபோது வருத்தப்படாதவரா, நித்யாவின் பேச்சைக் கேட்டு வருத்தப்பட போகிறார். வழக்கம்போலவே சிரித்த முகத்துடன் வேறு நாயகியை தேட ஆரம்பித்து விட்டாராம்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger