News Update :
Home » » ஜல்லிக்கட்டுக்கு பாலிவுட் நடிகர் ஜான்ஆபிரகாம் எதிர்ப்பு!!

ஜல்லிக்கட்டுக்கு பாலிவுட் நடிகர் ஜான்ஆபிரகாம் எதிர்ப்பு!!

Penulis : karthik on Friday 20 January 2012 | 09:39

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பிரபல பாலிவுட்
நடிகர் ஜான்ஆபிரகாம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின்
பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
தமிழர்களின் வீர விளையாட்டான இந்த போட்டிக்கு விலங்குகள் நல வாரியம் தடை
விதித்துள்ள நிலையில், மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் கடும்
நிபந்தனைகளுடன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போட்டியில் பங்கேற்க காளைகளும்,
காளையர்களும் தயாராகி வரும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இந்தி
நடிகர் ஜான் ஆபிரகாம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகமத்திய
சுற்றுச்சூழல் மற்றும் வன இலாகா அமைச்சர் ஜெயந்தி நடராஜனுக்கு அவர்
அனுப்பியுள்ளகடிதத்தில், ஒரு நடிகன் என்ற முறையில் ஜல்லிக்கட்டு
பிடிக்கும். ஆனால் விலங்குகளை அதில் பயன்படுத்துவதில் உடன்பாடு இல்லை.
ஜல்லிக்கட்டில் காளையை அடக்குதல், மாட்டு வண்டி போட்டிகள்
நடத்தப்படுகின்றன. அப்போது காளைகள் சித்ரவதை செய்யப்படுகின்றன. ஆணி
பதித்த கம்பால் காளை மாட்டை குத்துகின்றனர். பொழுது போக்குக்காக அவற்றை
துன்புறுத்துகின்றனர். கூட்டத்துக்குள் செல்லும் மாடுகளை அடிக்கின்றனர்.
எனவே மிருகவதை தடுப்பு சட்டத்தை தமிழகத்தில் அமுல்படுத்த நடவடிக்கை
எடுக்கவேண்டும், என்று கூறியுள்ளார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger