News Update :
Home » » மனைவி முன்னால் ரயிலில் அடிபட்டு கணவன் பலி

மனைவி முன்னால் ரயிலில் அடிபட்டு கணவன் பலி

Penulis : karthik on Sunday 1 January 2012 | 19:21

ஆவடி:ரயிலுக்கு காத்திருந்த மத்திய அரசு ஊழியர், ரயிலில் ஏற முயற்சித்த
போது, கால் தடுமாறி, தண்டவாளத்தில் விழுந்து, மனைவி கண் முன் ரயிலில்
அடிபட்டு பலியானார்.சென்னை அடுத்த திருநின்றவூர் அருகே உள்ள
வேப்பம்பட்டு, மல்லிகை தெருவைச் சேர்ந்தவர் பாபு சிங்,56. இவர், சென்னை
அண்ணா நகரில் உள்ள மத்திய கலால் வரித்துறை அலுவலகத்தில் துணை
கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் மாலை,தனது மனைவி
கோமல் சிங்குடன், முகப்பேரில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றார்.
பின், அங்கிருந்து ரயில் மூலம் ஆவடிக்கு வந்தார்.அங்குள்ள
மார்க்கெட்டில், வீட்டிற்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டு,
வீட்டிற்கு செல்ல மனைவியுடன் ஆவடி ரயில் நிலையத்தில் காத்திருந்தார்.
நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்த ரயிலில் ஏற, பிளாட்பாரத்தில்
நின்றிருந்த பாபு சிங் தயாரான போது, அவரது கால் தடுமாறி தண்டவாளத்தில்
விழுந்தார். அப்போது, அங்கு வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே
பலியானார். இது குறித்து, ஆவடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு
செய்துள்ளனர்
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger