தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்து வரும் தனுஷின் '3' படம் பொங்கல் அன்று திரைக்கு வரலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. பொங்கல் அன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்ட ஐஸ்வர்யா விரைவில் மொத்தப் படத்தையும் முடிக்க முடிவு செய்துள்ளாராம். ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் வரும் முதல் படம் இது. அதனால் பொங்கல் போன்ற பண்டிகை தினத்தில் படத்தை வெளியிட ஆர்வம் காட்டுகிறார் என தெரிகிறது. படத்தின் தலைப்பிற்கு ஓர் அர்த்தம் உள்ளதாகவும், படத்தை பார்த்தால் அர்த்தம் புரியும் எனவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.
விஜயின் நடிப்பில் சங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் நண்பன் திரைப்படமும் பொங்கலுக்கு வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி வெளிவரும் பட்சத்தில் விஜய், சங்கர் என்ற பிமாண்ட கூட்டணியுடன் மோத வேண்டிய நிலைமைக்கு தனுஷ் தள்ளப்படுவார். ஏன்கனவே விஜயின் காவலனுடன் ஆடுகளம் படத்தை மோத விட்டு மதுரையில் ஆடுகளம் திரையிட்ட பல திரையரங்குகள் விஜய் ரசிகர்களால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment