Sunday, 15 January 2012

அரசியல் பிரமுகரை ரகசியமாக திருமணம் செய்து குடித்து கும்மாளம் அடிக்கும் கவர்ச்சி நடிகை ?

நடிகை ஷகிலா ஆசாமி படத்தில் பீர் குடித்து குறிசொல்லும் போலி சாமியார்
வேடத்தில் வருகிறார்.
மேலும் நடிகை ஷகிலாவுக்கு நிஜமாகவே பீர் குடிக்கும் பழக்கம்
இருப்பதாகவும், படப்பிடிப்பில் இயக்குனரிடம் தினமும் பீர் வாங்கித்
தரும்படிதொல்லை செய்ததாகவும் செய்தி பரவியது.
மேலும் இவர் அரசியல் பிரமுகர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு
குடித்தனம் நடத்துவதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து, ஷகிலா கூறுகையில், ஆசாமி படத்தில் நடித்த போது இயக்குனரிடம்
பீர் வாங்கித் தரும்படி நான் கேட்கவில்லை. என்னைப் பற்றி தவறான வதந்திகள்
பரப்பப்பட்டு உள்ளது.
எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. இப்படத்தில் வில்லி
கதாபாத்திரத்தில் வருகிறேன், அது எனக்கு பிடித்துள்ளது.
நான் அரசியல் பிரமுகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக வெளியான
செய்தியும் வதந்திதான்.இதுவரை எனக்கு திருமணம் நடக்கவில்லை தனியாகத்தான்
இருக்கிறேன்.
முதுமலைக்கு சுற்றுலா சென்ற போது கோவையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை
சந்தித்தேன். அவர் எனக்கு நெருக்கமான நண்பராக இருக்கிறார் என்று
கூறியுள்ளார்

சகநடிகை தொந்தரவால் தற்கொலைக்கு முயன்ற புது ஹீரோயின்!

சக நடிகையின் டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்றதாக புதிய நடிகை அங்கீதா
புகார் கூறியுள்ளார்.
சுற்றுலா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளவர் அங்கீதா. இவர் புதுமுகம்
ஆவார். இவருக்கு தோழியாக சான்ட்ரா நடிக்கிறார். இவர்தான் படப்பிடிப்பு
தளத்திலிருந்து கணவர் நடிகர் பிரஜனோடு நேற்று காணாமல் போனவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சான்ட்ரா மீது ஹீரோயின் அங்கீதா புகார் கூறியுள்ளார்.
சான்ட்ரா தொல்லையால் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "நடிகைசான்ட்ரா தினமும் என்னை அவதூறாக
பேசிவந்தார். மன உளைச்சலுக்கு ஆளாகும் வகையில் ஒரு கட்டத்தில் அதிக மன
உளைச்சலுக்கு ஆளாகி என் சாவுக்கு காரணம் சாந்த்ராதான் என கடிதம் எழுதி
வைத்து விட்டு தற்கொலைக்கு முயன்றேன் என்றார்.
அப்போது அவர் எழுதிய கடிதத்தையும் காண்பித்தார்.
படப்பிடிப்புக்கு வந்த பிரஜின்- சான்ட்ரா மாயம், புது நடிகை அங்கீதா
தற்கொலை முயற்சி போன்றவற்றால், இதுவரை பெயரே தெரியாமலிருந்த சுற்றுலா
படம் பிரபலமாகிவிட்டது.
ஒருவேளை இதெல்லாம் திட்டமிட்ட விளம்பர முயற்சியோ என்றும் திரையுலகில்
கிசுகிசுக்கிறார்கள்.

ஓடும் பேருந்தில் வன்புணர்ந்து கொல்லப்பட்டார் மாணவி

ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் பேருந்தில் கல்லூரி சென்று வந்த பெண்ணை
பேருந்திலேயே வன்புணர்ந்து கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
இது பற்றி கூறப்படுவதாவது:
ஒடிசாவின் ராணிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது
கிராமத்திலிருந்துஅருகிலுள்ள பத்ராக் நகரிலுள்ள கல்லூரியில்
படித்துவந்தார். தினமும் பேருந்தில் சென்றுவரும் பழக்கமுடைய அம்மாணவியை
நேற்று மாலை ஓடும் பேருந்திலேயே ஒரு கும்பல் மிரட்டி வன்புணர்ந்துள்ளது.
அந்தப் பேருந்தின் நடத்துனரும்இக்கொடூரச் செயலுக்கு உடந்தையாய்
ஈடுபட்டார். மயங்கி விழுந்த அந்த மாணவியை 2 வாலிபர்கள் பத்ராக் நகரில்
உள்ள மருத்துவமனைக்கு மயங்கிய நிலையில் தூக்கி வந்தனர். மாணவியை
பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினார்.
இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அந்த 2 வாலிபர்களும் ஆஸ்பத்திரியில்
இருந்து தப்பி ஓடி விட்டனர். அதன் பிறகே அந்த மாணவி வன்புணர்ந்து
கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இது பற்றி தகவல் பரவியதும், அந்த மாணவியின் பெற்றோர் சாலை மறியலில்
ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறை அதிரடி வேட்டை நடத்தி பேருந்தின்
ஓட்டுநர், நடத்துனர் இருவரையும் கைது செய்தனர். மாணவியை வன்புணர்ந்து
கொன்ற கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

அனுஷ்காவுடன் பணிபு‌ரிய நடிகர்கள் இயக்குனர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அனுஷ்காவுடன் பணிபு‌ரிய நடிகர்கள் மட்டுமல்ல, இயக்குனர்களும் ஆர்வமாக
இருக்கிறார்கள். தயா‌ரிப்பாளர்களுக்கும் அனுஷ்கா என்றால் ஆனந்தம்.
அனுஷ்காவின் அதிகபடியான அழகு மட்டும் இதற்கு காரணம் இல்லை. முக்கியமான
விஷயம் அவரது டெடிகேஷன். பெ‌ரிய ஹீரோயின் என்ற பந்தா இல்லாமல் ஷுட்டிங்
தொடங்கும் முன்பே மேக்கப்புடன்முதல் ஆளாக ஆஜராகிவிடுவார். அதுவும்
சுரா‌ஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா நடிக்கும் படத்தின்
படப்பிடிப்பில் பெரும்பாலும் முதலில் மேக்கப்புடன் தயாராவது அனுஷ்காதான்.
படப்பிடிப்புக்கு இவ்வளவு டெடிகேட்டாக எந்த நடிகையும் வருவதில்லை என்று
சுரா‌ஜ் அனுஷ்காவை புகழ்கிறார். நெ.1 கனவில் இருப்பவர்கள்
அனுஷ்காவைபின்பற்றுவது நலம்.

என்ன கொடுமை சார் இது...! - கிரிகெட் ஜோக்ஸ்

என்னப்பா இந்த சேவாக் டிவி-யை போடறதுக்கு முன்னாலேயே அவுட் ஆயிடறார்?
இது பரவாயில்லை போன இன்னிங்ஸ்ல இறங்கறதுக்கு முன்னாலயே அவுட் ஆயிட்டார்னா
பாத்துக்கயேன்.
******************************
தோனி: பீ கேர் ஃபுல் அடுத்த டெஸ்ட்ல ஜெயிச்சு...
கிளார்க்: என்ன சொன்னீங்க?
தோனி: நான் உங்களச் சொன்னேன்!
*******************************
நிருபர்: உள்நாட்டுல பயங்கரமா ஆடி சூரப்புலி கணக்கா இருக்கீங்க?
வெளிநாட்டுலன்னா பதுங்கற பூனையாயிடறீங்களே ஏன்?
தோனி: உள்நாட்டுல ஜெயிக்கறதுனாலதான இப்படி கேக்கறீங்க, இனிமே
உள்நாட்டுலையும் தோத்து நாங்க யார்னு உங்களுக்கு கூடிய விரைவில்
நிரூபிக்கிறோம்!
*******************************
தோனி: இங்கிலாந்துல ஒரு 11 பேர் கூட்டிட்டுப் போயி கும்கும்முனு
கும்மினாங்க, அடுத்து ஆஸ்ட்ரேலியாகாரன் அவங்க ஊருக்கு கூட்டிட்டு போயி
மாறி மாறி டயர்ட் ஆக வரைக்கும் அடிச்சாங்க...
"இவ்வளவு அடி வாங்கினீங்களே உங்களுக்கு கோபமே வரலியா?
"அங்கதான் என்ன "கேப்டன் கூல்"னு சொல்லி அடக்கிட்டாங்களே...
*********************************
சச்சின் டெண்டுல்கர் 100வது செஞ்சுரியை எப்பத்தான் அடிப்பாரு?
100வது வயசுல 100வது சதம் எடுக்கறது ஒரு சாதனைன்னு அவர் கிட்ட யாராவது
சொல்லித் தொலைச்சுட்டாங்களோ என்னவோ!
***********************************
நிருபர்: எதிர் அணி பேட்ஸ்மென்களை நீங்க ரொம்ப சுலபமா ரன் எடுக்க
அனுமதிக்கிறீங்கன்னு உங்க மேல ஒரு குற்றச்சாட்டு இருக்கே?
தோனி: அவங்கதான் சின்னப்பிள்ளத்தனமா நம்ம பேட்ஸ்மென்களுக்கு ரன் தர
பிடிவாதம் பிடிக்கறாங்கன்னா நம்மளும் அப்படியா இருக்கறது, அப்பறம்
அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?
************************************
தோனியிடம் அணி மேலாளர்: தோனி! சச்சின், லஷ்மண் அவுட் ஆயிட்டாங்க!
தோனி: என்னடா லஞ்ச் முடிஞ்சுடுச்சே இன்னும் எதுவும் நடக்கலையேன்னு பார்த்தேன்!
**************************************
கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா: தோனி! நீங்க செய்யறது உங்களுக்கே நியாயமா இருக்கா?
தோனி: நீங்க ஜெயிக்கறா மாதிரிதானே விளையாடறேன்?
கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா: பாண்டிங், ஹஸ்ஸியையெல்லாம் நாங்க
தூக்கறதாயிருந்தோம் இப்ப நீங்க ரன் எடுக்க விட்டுட்டீங்க!
தோனி: அது உங்களுக்கு நல்லதுதானே!
கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா: மண்ணாங்கட்டி! கிரெக் சாப்பல், ரிச்சி பெனோ,
ஆலன் பார்டர், கிம் ஹியூஸ் எல்லாரும் நானும் தயாராத்தான் இருக்கேன்
எனக்கும் வாய்ப்பு கொடுங்கன்னு கேட்டு தொந்தரவு பண்றாங்க அதுக்குக்
காரணம் நீங்கதான?
***************************************
தோனி: டாஸ் ஜெயிச்சு பேட்டிங் செஞ்சேன்; 191ரன்னுக்கு ஆல் அவுட் ஆனா நான்
என்ன செய்ய முடியும்?
மேலாளர்: அவங்கள முதலில் பேட் செய்யச் சொல்லவேண்டியதான?
தோனி: அவங்க 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தா நாம ஜெயிக்கறமாதிரி
வந்துடும். ஜெயிக்கறதுனாலே பசங்க ரொம்ப பயப்படறாங்க!
***************************************
என்ன சார் இது ரோஹித் ஷர்மாவை உக்கார வச்சுட்டு கோலியை விளையாட
வைக்கிறீங்க, அவருக்கு பேட்டிங் வரல்லியே சார்!
தோனி: எனக்கு மட்டும் வருதா என்ன? அதையெல்லாம் பார்த்தா முடியுமா பாஸ்!
*****************************************
நன்றி: வெப்துனியா

செல்போன் தத்துவங்கள்..!!

சில மொக்கைகள் செல்போனிலும் வரும் அப்படி என்னக்கு வந்த சில மொக்கைகள்
உங்கல் பார்வைக்கு தந்துள்ளேன்.
செல்போனில் வந்த தத்துவங்கள்.
1. நமக்கே தெரியாத
நம்மை பற்றிய ரகசியங்களை
நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும்
சிறந்த கருவிதான்.....
........
சரக்கு...!
2. உயிரோட இருக்குறப்ப என்னதான்
காம்ப்ளான், போன்விட்டா,
ஹார்ளிக்ஸ், பூஸ்ல்ன்னு குடிச்சாலும்
உயிர் போனால்
எல்லோர்க்கும் 'பால்'தான்!
இதுதான் கன்னா வாழ்க்கை!
3. பல நாட்டு குட்மார்னிங்
யூ.கே - ஹை... டியர்
யூ.எஸ்.ஏ - குட் மார்னிங்
சைனா - மிஹெள
ஜப்பான் - ஸேஹெள
இத்தாலி - மணிச்சி
ஃப்ரான்ஸ் - ஸான்சே
ஆனா
தமிழ்நாட்ல..?
- சனியனே 8.30 மணி ஆச்சு எழுந்திருடா...!
4. ஒரு மரத்தில 6 பறவை உட்கார்ந்திருந்தது.
வேடன் சுட்டான். 5 பறவை பறந்திருச்சி
ஒண்ணு மட்டும் பறக்கலை ஏன்? ஏன்?
..........
.......என்னா அதுக்கும் உன்ன மாதிரி கொழுப்பு!
நோ..... நோ..... டென்ஷன் ஆகப்பிடாது கண்ணா!
5. தத்துவம் நெ. 1161
நமக்கு பிரச்னை இல்லைன்னா கடவுளுக்கு அர்ச்சனையே இல்ல...
...........
ஹாஹாஹா.... இது எப்படி இருக்கு?

நன்பேண்டா...!: இவிங்க தொல்லை தாங்க முடியலப்பா..! - கிரிகெட் ஜோக்ஸ்

நிருபர்: சார் போன இங்கிலாந்து டூரும்
இந்த ஆஸ்திரேலிய டூர் பத்தின உங்க கருத்து என்ன சார்?
தோணி: இங்கிலாந்துக்கு கூட்டிட்டு போயி ஒரு குரூப்பு டெஸ்ட் மேட்ச்ன்ற
பேர்ல மரண அடி அடிச்சானுங்க அடிச்சிட்டு,
ஒரு விமானத்துல ஏத்தி அனுப்புனாங்க. சரி இந்தியாக்கு தான்
அனுப்புறாங்கன்னு நம்பி ஏறுனேன்.
அந்த விமானம் நேரா ஆஸ்திரேலியாவுக்கு போச்சுப்பா அங்க ஒரு பதினோரு பேரு
நாலு டெஸ்ட் மேட்ச் சும்மா தெனற தெனற அடிச்சானுங்க சரி அடிச்சிட்டு
போங்கடான்னு விட்டுட்டேன்.

காதல் வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை- ஸ்ருதிஹாசன்

நடிகர் தனுஷ்சுடன் காதல் என்ற செய்திக்கு நடிகை ஸ்ருதிஹாசன் மறுப்பு
தெரிவித்துள்ளார். என்னைப் பற்றி வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை
எடுப்பேன், என்று ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். தனுஷ்-சுருதி ஹாசன் ஜோடி 3
படத்தில் நாயகன் & நாயகியாக நடித்துள்ளனர். இந்த படத்தை தனுஷின் மனைவி
ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ்க்கும்,
ஸ்ருதிஹாசனுக்கும் இடையே காதல் என்ற செய்தி கோடம்பாக்கத்தையே
பரபரப்புக்குள்ளாக்கியது. இருவரும் ஜோடியாக பார்ட்டிகளில்
பங்கேற்றதாகவும்செய்திகள் வெளியாயின.
இந்த காதல் வதந்தியை ஏற்கனவே ஸ்ருதி மறுத்துள்ள நிலையில், மீண்டும்
ஒருமுறை மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள புதிய
பேட்டியொன்றில், `என்னையும், தனுஷையும் இணைத்து வெளியான தகவல்கள்
எதுவும் உண்மை இல்லை. அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. அதை படித்தபோது,
காமெடியாக இருந்தது. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எந்த சாட்சியும் இல்லை.
ஆதாரம் இல்லாமல், சாட்சி இல்லாமல் எழுதுவது சட்டப்படி குற்றம். எனவே
அப்படி எழுதியவர்கள் மீது
சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்,என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இரண்டு பேர் குடும்பத்தினருக்கும் சமூகத்தில்
மரியாதை இருக்கிறது.அப்படி மரியாதைக்குரிய இரண்டு குடும்பத்தினரை பற்றி
மட்டரகமான வதந்திகளை பரப்புவது,நாகரீகம் அல்ல. இதற்கு மேல் அந்தவிஷயம்
பற்றி எதுவும் பேச விரும்பவில்லை, என்றும் கூறியிருக்கிறார்.

ஓவியா இயற்கையிலேயே ரொம்ப அழகு- – பசங்க பாண்டிராஜ்

நடிகை ஓவியாக இயற்கையிலேயே ரொம்ப அழகு என்று டைரக்டர் பாண்டிராஜ்
கூறியுள்ளார். பசங்க, வம்சம் படங்களைத் தொடர்ந்து டைரக்டர் பாண்டிராஜ்
இயக்கியிருக்கும் புதிய படம் மெரினா. முழுக்க முழுக்க சென்னை கடற்கரை
சிறுவர்களின் பின்னால் உள்ள கதைதான் இப்படத்தின் மொத்தகளமும்.
படத்தின் நாயகனாக சின்னத்திரை புகழ் சிவகார்த்திகேயனும், நாயகியாக நடிகை
ஓவியாவும் நடித்துள்ளனர். ஓவியா பற்றி பாண்டிராஜ் அளித்துள்ள பேட்டியில்,
"ஓவியா பொதுவாகவே மேக்கப் பிரியை. எப்போதும் மேக்கப் மயம்தான். என்
படங்களின் ஹீரோயின்களுக்கு மேக்கப் போட விடவே மாட்டேன். ஓவியா
இயற்கையிலேயே அழகானவர்தான். பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள்.
அவர்களுக்கு மேக்கப் அவசியமில்லை. ஆனால் இந்தப் படத்துக்காக
விட்டுவிட்டேன். என்று கூறியுள்ளார்.

த்ரிஷா, தமன்னாவுடன்- விதார்த்தின் ஆசை

த்ரிஷா, தமன்னாவுடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக
கூறியிருக்கிறார் நடிகர் விதார்த். கொள்ளைக்காரன் படம் ரிலீசான
மகிழ்ச்சியில் இருக்கும் விதார்த், தனது வருங்கால திட்டம் மற்றும் ஆசைகளை
கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில். எனக்கு த்ரிஷா, தமன்னா
போன்ற நடிகைகளுடன் ஜோடி போட்டு நடிக்கஆசையாக இருக்கிறது. ஆனால் அதெல்லாம்
தானாக நடக்கும் என்கிற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது, என்று
கூறியுள்ளார்.
மைனா என்ற வெற்றிப்படத்தில் நடித்த பிறகும் விதார்த் இன்னமும்
யதார்த்தமான நாயகனாகவே ரியல் லைப்பிலும் இருக்கிறாராம். கதை சொல்ல வரும்
புதுமுக இயக்குனர்கள் கூட, அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை என்றாலும்
பரவாயில்லை, மனசு கோணாமல் நடந்து கொண்டார். நம்மையும் மதித்து கதை
கேட்டார், என்று திரையுலகைச் சேர்ந்த பலரும் விதார்த்தை பாராட்டி
வருகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

தலையும் உலக நாயகனும் இணையும் படம் – கோடம்பாக்கத்தில் பரபரப்பு

கூட்டல் கழித்தல் மாதிரிதான் கோடம்பாக்கத்தில் நடைபெறும் முட்டல்
மோதல்களும்! தசாவதாரம் படம் வெளியான நேரத்தில் உச்சக்கட்ட மிர்ச்சியாக
இருந்தார்கள் அப்படத்தின் ஹீரோவான கமலும், தயாரிப்பாளரான ஆஸ்கர்
ரவிச்சந்திரனும் படத்தின் ரிலீஸ் திகதியை கூட பேப்பர் விளம்பரத்தை
பார்த்தே அறிந்து கொள்ள முடிந்தது கமலால். அப்படியெல்லாம் தள்ளி நின்ற
இருவரும் இப்போது மீண்டும் கை கோர்த்திருக்கிறார்கள்.
இந்த கூட்டணி கூண்டுக்குள் அடைக்கலமாகியிருப்பது கமல் மட்டுமல்ல, ஒரு
காலத்தில் ஆஸ்கர் பிலிம்சில் அடுத்தடுத்த படங்களில் நடித்த
அஜீத்தும்தான். அந்த நேரத்தில் அஜீத்துக்கும் ஆஸ்கருக்கும் கூட மயிரிழை
அளவுக்கு மனக்கசப்பு இருந்தது.
ஒரு சின்ன புன்னகை எல்லாவற்றையும் வென்று விடுமல்லவா? இப்போது மீண்டும்
அந்த அதிசயம் நிகழப்போவதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
கமல் நடிக்கவிருக்கும் இந்த புதிய படத்தில் ஒரு முக்கியமான ரோலில்
அஜீத்தையும் நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் ஆஸ்கர்
ரவிச்சந்திரன். இவரும் ஆகட்டும்பார்க்கலாம்… என்று கூறியிருக்கிறாராம்.