Sunday, 15 January 2012

காதல் வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை- ஸ்ருதிஹாசன்

நடிகர் தனுஷ்சுடன் காதல் என்ற செய்திக்கு நடிகை ஸ்ருதிஹாசன் மறுப்பு
தெரிவித்துள்ளார். என்னைப் பற்றி வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை
எடுப்பேன், என்று ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். தனுஷ்-சுருதி ஹாசன் ஜோடி 3
படத்தில் நாயகன் & நாயகியாக நடித்துள்ளனர். இந்த படத்தை தனுஷின் மனைவி
ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ்க்கும்,
ஸ்ருதிஹாசனுக்கும் இடையே காதல் என்ற செய்தி கோடம்பாக்கத்தையே
பரபரப்புக்குள்ளாக்கியது. இருவரும் ஜோடியாக பார்ட்டிகளில்
பங்கேற்றதாகவும்செய்திகள் வெளியாயின.
இந்த காதல் வதந்தியை ஏற்கனவே ஸ்ருதி மறுத்துள்ள நிலையில், மீண்டும்
ஒருமுறை மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள புதிய
பேட்டியொன்றில், `என்னையும், தனுஷையும் இணைத்து வெளியான தகவல்கள்
எதுவும் உண்மை இல்லை. அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. அதை படித்தபோது,
காமெடியாக இருந்தது. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எந்த சாட்சியும் இல்லை.
ஆதாரம் இல்லாமல், சாட்சி இல்லாமல் எழுதுவது சட்டப்படி குற்றம். எனவே
அப்படி எழுதியவர்கள் மீது
சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்,என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இரண்டு பேர் குடும்பத்தினருக்கும் சமூகத்தில்
மரியாதை இருக்கிறது.அப்படி மரியாதைக்குரிய இரண்டு குடும்பத்தினரை பற்றி
மட்டரகமான வதந்திகளை பரப்புவது,நாகரீகம் அல்ல. இதற்கு மேல் அந்தவிஷயம்
பற்றி எதுவும் பேச விரும்பவில்லை, என்றும் கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment