News Update :
Powered by Blogger.

மணி அடிச்சா சோறு நகைச்சுவை

Penulis : Tamil on Sunday, 24 February 2013 | 00:41

Sunday, 24 February 2013

துப்புரவு பணியாளர்களை புதிதாக நியமிக்க வேண்டும் மன்னா!
-
ஏன்...பழைய பணியாளர்கள் சரியாக துப்புறதில்லையா..?
-
>சி.அரசன்
-
--------------------------------------------
-
என்ன சொல்றீங்க, இருபது வருஷமா சைக்கிளில் போயும்
உடம்பு குறையலையா..?
-
ஆமாங்க டாக்டர்...நான் கேரியர்ல உட்கார்ந்துக்குவேன்...!
-
>ஜே.தனலட்சுமி
-
-------------------------------------------
-
ஜெயிலில் மணியடிச்சா சோறுன்னு தலைவரிடம் சொன்னது
தப்பா போச்சு..!
-
ஏன் என்ன செய்யறார்?
-
ஜெயிலுக்குப் போகும்போது, கையில் ஒரு மணியை கொண்டு
போறார்...!
-
எஸ்.சக்திகனி

comments | | Read More...

பிரபாகரன் மகனை பிணைக்கைதியாக வைத்து சுட்டு கொன்ற ராணுவம்: சானல் 4 திடுக்கிடும் தகவல் prabhakaran son shot killed srilanka army channel 4 release

Penulis : Tamil on Monday, 18 February 2013 | 22:11

Monday, 18 February 2013



இலங்கையில் விடுதலை புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இறுதிகட்ட போர் நடந்தது. அதில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். அவரது மனைவி, மூத்த மகன் மற்றும் மகள் மற்றும் இளைய மகன் பாலசந்திரன் ஆகிய அனைவரும் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டனர்.

மேலும், இறுதிகட்ட போரின் போது, 1 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் குண்டுவீசி கொல்லப்பட்டனர். பிடித்து செல்லப்பட்ட விடுதலைப் புலிகள் கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டனர்.

இலங்கை ராணுவத்தின் கொடூர தாண்டவங்களை தொகுத்து இங்கிலாந்தின் ‘சானல் 4’ என்ற டி.வி. ஆவணப்படமாக தயாரித்து வெளியிட்டது. இது உலகம் முழுவதும் மக்களை பதைபதைப்பில் ஆழ்த்தியது. இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை அந்நாட்டு அரசு ஏற்க மறுத்தது. ‘கிராபிக்ஸ்’ செய்து மிகைப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியது.

இறுதிகட்ட போர் முடிவின்போது பிரபாகரனின் இளைய மகன் 12 வயது பாலசந்திரன் சுட்டுகொல்லப்பட்ட படம் வெளியாகி இருந்தது. ஆனால் அவன் எப்படி இறந்தான் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், அவனை பிணைக் கைதியாக பிடித்து சென்ற சிங்கள ராணுவம் ஈவு இரக்கமின்றி 5 தடவை மார்பில் துப்பாக்கியில் சுட்டு கொன்றது தெரிய வந்துள்ளது. அதற்கான போட்டோக்களை ஆதாரத்துடன் ‘சானல் 4’ டி.வி. நேற்று வெளியிட்டது.

பிணைக் கைதியாகும் முன்பு பாலச்சந்திரனுக்கு 5 விடுதலைப்புலிகள் காவலாக இருந்துள்ளனர். பாலச்சந்திரனுடன் சேர்ந்து அவர்களையும் இலங்கை ராணுவம் பிடித்து சென்றுள்ளது. பின்னர் விடுதலைப்புலிகள் 5 பேரின் கைகளை கட்டி தலையில் சுட்டு கொடூரமாக கொன்றுள்ளனர்.

பின்னர் பாலசந்திரனை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் மணல் மூட்டைகளுக்கு நடுவில் உட்கார வைத்தனர். சட்டை கூட அணியாமல் லுங்கியை போர்த்திய நிலையில் காயங்களுடன் பரிதாபமாக அமர்ந்திருக்கும் பாலசந்திரனுக்கு சாப்பிட பிஸ்கட் வாங்கி கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்டு கொண்டிருக்கும் பாலசந்திரனை ராணுவ வீரர்கள் டிஜிட்டல் காமிராவில் போட்டோ எடுத்துள்ளனர்.

அதன் பின்னர் 2 மணி நேரம் கழித்து பாலசந்திரனை கொடூரமாக சுட்டு கொன்றுள்ளனர். அதையும் அதே டிஜிட்டல் காமிராவில் படம் பிடித்துள்ளனர். பிணமாக கிடக்கும் பாலசந்திரனின் மார்பில் 3 துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளன. அவனை 2 அடி தூரத்தில் இருந்தே சுட்டு கொலை செய்யப்பட்டிருப்பார் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
prabhakaran son shot killed srilanka army channel 4 release

அதே நேரத்தில் அவரின் பாதுகாவலர்கள் அவரது கண் முன்னாலே சுட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த போட்டோக்களை வெளியிட்டுள்ள ‘சானல் 4’ பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன் கொடூரமாக சொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், ‘நோ வார் ஷோன்’ என்ற பெயரில் விரைவில் புதிய ஆவணபடம் ஒன்றையும் சானல் 4 வெளியிட உள்ளது. ஏற்கனவே, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது அமெரிக்கா கொண்டு வந்த போர்க்குற்றம் சம்பந்தப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இலங்கை அரசு சிக்கலில் உள்ளது.

இந்த நிலையில் சானல் 4 தற்போது வெளியிட்டுள்ள பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரனின் போட்டோக்கள் மற்றும் வெளியாக இருக்கும் சானல் 4 ஆவணப்படம் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் அதிபர் ராஜபக்சேவும் அவரது தம்பியும் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சேவும் கடும் நெருக்கடிக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
comments | | Read More...

கடுமையான மின்பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க மின்சாரவாரியம் முடிவு

Penulis : karthik on Thursday, 4 October 2012 | 21:19

Thursday, 4 October 2012




கடுமையான மின்பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க மின்சாரவாரியம் முடிவு கடுமையான மின்பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க மின்சாரவாரியம் முடிவு
மின்சார வாரியத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
 
தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தில் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் மூலம் 1,905 மெகாவாட், புனல் மின்நிலையங்கள் மூலம் 370 மெகாவாட், எரிவாயு மின்நிலையங்கள் மூலம் 150 மெகாவாட், தனியார் மின்நிறுவனங்கள் மூலம் 740 மெகாவாட் பெறப்படுகிறது.
 
மத்திய அரசின் தேசிய அனல்மின் கழகம் மூலம் 850 மெகாவாட், தேசிய அணுமின்கழகம் மூலம் 375 மெகாவாட், நெய்வேலி அனல் மின்நிலையம் மூலம் 850 மெகாவாட், தமிழகம் மற்றும் பிறமாநிலங்களிலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. இதன் மூலம் 5,740 மெகாவாட் மின்சாரம் தற்போது கிடைத்து வருகிறது.  
 
காற்றாலைகள் மூலம் சராசரியாக 2,400 மெகாவாட் உட்பட 8,140 மெகாவாட் மின்சாரம் தான் தற்போது கிடைக்கிறது. ஆனால் நமக்கு சராசரியாக 12 ஆயிரம் மெகாவாட் தேவைப்படுகிறது. இதனால் 3,860 மெகாவாட் வரை பற்றாக்குறை ஏற்படுகிறது. காற்றாலைகளில் உறுதியாக 3 ஆயிரம் மெகாவாட் வரை கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையும் உள்ளது.
 
காற்று வீசும் காலமும் ஓரிரு நாட்களில் முடிவடைய இருப்பதால் நிலைமை மேலும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் 10 மணி நேரத்திற்கு மேல் மின்தடை செய்யப்படுகிறது. 
 
அணைக்கட்டு மற்றும் நீர்நிலைகள் மூலம் கடந்த ஆண்டு ஜுன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவ மழை பெய்த காலகட்டத்தில் 214 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் தற்போது நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனதால் ஜுன் முதல் செப்டம்பர் வரை 85 கோடி யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
 
இதனால் 129 கோடி யூனிட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டதன் மூலம் சராசரியாக 60 சதவீதம் மின்சாரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.   மின்பற்றாக்குறைக்கு மத்திய தொகுப்பிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு குறைவு உட்பட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் தமிழகத்தில் தனிநபர் மின் நுகர்வு 8 சதவிதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
 
அதேபோல் தமிழகத்தில் வழக்கமாக அதிகபட்சமாக மின்நுகர்வு நேரம் மாலை 6 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை இருந்தது. தற்போது அந்த நேரம் மாற்றப்பட்டு இரவு 11 மணிக்கு மேல் அதிகம் மின்நுகர்வு செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் 2,500 மெகாவாட் வரை மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.  
 
தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையை போக்க 2012-2013-ம் ஆண்டில் தமிழக அரசு 3020 கோடியே 25 லட்சம் ரூபாய் மானிய அளித்துள்ளது. அத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உடனடித் தேவைக்காக தற்போது முன்பணமாக 1,000 கோடி ரூபாயை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு வழங்கி உள்ளது.
 
தென்மேற்கு பருவ மழைக்கும், வடகிழக்கு பருவ மழைக்கும் இடைப்பட்ட இரண்டு முதல் மூன்று வாரத்திற்கு மின்சார நிலைமையை சமாளிக்க அதாவது செப்டம்பர் கடைசி வாரத்திலிருந்து அக்டோபர் முதல் இரண்டு வாரங்களுக்கு தேவையான மின்சாரத்தை சமாளிக்க போர்க்கால நடவடிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்து வருகிறது.  
 
நிலைமையை வெளிமாநிலங்களிலிருந்து 10,300 மில்லியன் யூனிட் வாங்க கடந்த மே மாதம் ஒப்புதல் கேட்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ஒப்புதல் கோரப்பட்டது. இதனை பரிசீலித்த ஆணையம் 2012 மே மாதத்திலிருந்து வரும் 2013 மே மாதம் வரை 4 ஆயிரம் மில்லியன் யூனிட் வரை மின்சாரம் வாங்க அனுமதி அளித்தது. இதில் 500 மில்லியன் யூனிட் மின்சாரம் பெறப்பட்டுள்ளது.
 
மீதம் உள்ள 3,500 மில்லியன் யூனிட் அதாவது 600 மெகாவாட் மின்சாரத்தை நடப்பு மாதமான 2012 அக்டோபர் மாதத்திலிருந்து 2013 மே மாதம் வரை எட்டு மாதத்திற்கு யூனிட் ரூ.4.13 முதல் ரூ.5 வரை கட்டணத்தில் வாங்கி கொள்ள அனுமதித்துள்ளது. ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது.
 
இவ்வாறு மின்துறை அதிகாரிகள் கூறினர்.   
 
 
/

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger