செல்போன் காதலர்கள் தற்கொலைக்கு முயற்சி-காதலி பலி, காதலர் 'சீரியஸ்'
Penulis : karthik on Tuesday, 11 October 2011 | 23:47
அணு உலைப் பணிகளை நிறுத்தும் வரை உண்ணாவிரதம்- கூடங்குளம் போராட்டக் குழு
ஆன்லைனில் துணியை தொட்டு பார்த்து வாங்கலாம்
10 லட்சம் வாடிக்கையாளர்கள் தவிப்பு - பிளாக்பெர்ரி மெசேஜ் சேவை துண்டிப்பு
அம்மாவான சிம்ரன்!
தெலுங்குப் படம் ஒன்றில் அம்மா வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை சிம்ரன்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் கனவு தேவதையாகத் திகழ்ந்த சிம்ரன், திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம் வந்தால் நடிப்பேன் என்று அடம் பிடித்துவந்தார்.
ஆனால் அக்கா, அண்ணி வாய்ப்புகளே வந்தன. அந்த வேடங்களிலும் சில படங்களில் நடித்தார். அப்போது அம்மா வேடத்தில் நடிக்க பலர் அழைத்தனர். அம்மாவாக நடிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகி விடவில்லை. அம்மா வேடத்தில் நடிக்கவே மாட்டேன் என்று மறுத்து வந்தார்.
தொடர்ந்து வாய்ப்புகளே இல்லாமல் போனதால் தற்போது அவர் பிடிவாதம் தளர்ந்துள்ளது.
தெலுங்கு படமொன்றில்அம்மா வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம். இவருக்கு மகனாக நடிப்பவர் உபேந்திரா. இருவரும் ஏற்கனவே சத்யம் படத்தில் நடித்துள்ளனர். உபேந்திராவுக்கு ஐம்பது வயதுக்கு மேல்! அவருக்கு அம்மாவாக நடிக்க சிம்ரன் ஒப்புக்கொண்டது திரையுலகில் ஒரு சின்ன ஆச்சர்யம்தான். ஆனால் பெரிய தொகையை இதற்கு சம்பளமாகப் பேசியுள்ளார் சிம்ரன் என்ற தகவல் தெரியவந்ததும் அந்த ஆச்சர்யமும் காணாமல் போய்விட்டது.
சினிமா உலகில் பணத்துக்குதானே முதலிடம்!
விஷாலுக்கு வந்த பக்குவம்!
தோல்விகள்தான் மனிதனை நிதானத்துக்கு கொண்டு வருகின்றன என்பது எத்தனை உண்மையாது, என்கிறார்கள் விஷாலின் இப்போதைய முடிவைக் கேட்ட சிலர்.
அவன் இவன் படத்தில் விஷாலுக்கு கிடைத்த நல்ல பெயரை மொத்தமாக துடைத்துவிட்டதாம் பிரபு தேவா இயக்கத்தில் உருவான வெடி. இந்தப் படத்துக்கு நல்ல பப்ளிசிட்டி,ஏக எதிர்ப்பார்ப்பு இருந்தும், படம் அதற்கேற்ப இல்லாததால் தோல்வியைத் தழுவிவிட்டது.
இதனால் தனது மார்க்கெட் நிலையை நன்கு உணர்ந்த விஷால், தனது அடுத்த படத்துக்கு சம்பளத்தை கணிசமாகக் குறைத்துக் கொண்டார் என கோலிவுட்டில் பரபரக்கிறார்கள்.
இத்தனைக்கும் வெடி அவர்களது சொந்தத் தயாரிப்புதான். இந்தப் படத்தின் லாப நஷ்டம் விஷால் குடும்பத்தினருக்குதான். என்றாலும் நடைமுறை யதார்த்தத்தை புரிந்து நடந்து கொண்ட விஷாலைப் பாராட்டுகிறார்கள்.
இந்தப் பக்குவம் மற்றவர்களுக்கும் வராதா என ஏக்கத்தோடு கேட்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
அப்படின்னா… எல்லார் படமும் தோல்வியைத் தழுவ வேண்டி வருமே பரவால்லயா என எதிர்க்கேள்வி கேட்கிறார்கள் சில வாய்த் துடுக்கு நாயகர்கள்!
தீவிர சிகிச்சை பிரிவில் டி.எம்.எஸ் அனுமதி
அனுஷ் நெருக்கமாக நடிப்பதற்கு தயங்க மாட்டேன்! – அனுஷ்
நடிகை அனுஷ்கா ஹைதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் நடிகையாவேன் என்று
கனவிலும் நினைக்கவில்லை. எதிர்பாராமல் அது நடந்தது. அறிமுகமானபோது ரொம்ப கஷ்டப்பட்டேன்.
சினிமாவோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை. சினிமாவை விட்டு ஓடிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்போது சினிமாவை முழுமையாக புரிந்துகொண்டேன். இனி சினிமாதான் வாழ்க்கை என்று முடிவு செய்துவிட்டேன். நான் நடித்த பல படங்கள் ஹிட்டாகி உள்ளன. வெளியில்
செல்லும்போதெல்லாம் ரசிகர்கள் சூழ்ந்து நின்று பாராட்டுகிறார்கள். இந்த புகழ் சினிமா மூலம் கிடைத்தது என்று நினைக்கும்போது திரையுலகம்மேல் மரியாதை ஏற்படுகிறது. நான் இருக்க வேண்டிய இடம் சினிமா என்பதை புரிந்துகொண்டேன்.
நல்லவேளை சினிமாவை விட்டு ஓடவில்லை. ஓடிப்போய் இருந்தால் சந்தோஷங்களை இழந்து இருப்பேன். காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதற்கு நான் தயங்குவது இல்லை. எந்த கேரக்டர் என்றாலும் ஈடுபாட்டோடு நடித்தால்தான் ஜெயிக்க முடியும். நான் ஈடுபாட்டுடன் நடிப்பதால்தான் முதல் நிலைக்கு வந்து இருக்கிறேன்.
ஸ்வீட்டியின் நம்பர் ஒன் ரகசியம் இதாம்பா… நல்லா நோட்
அரசியல் அனுபவமும்! குத்து ரம்யாவின் புலம்பலும்!!
5ம் வகுப்பு மாணவியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற பாதிரியார்
உள்ளாட்சி தேர்தல்: 17, 19 தேதிகளில் அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை
ராத்திரியில் நர்ஸிடம் செக்ஸ் பேச்சு, எஸ்.எம்.எஸ் அனுப்பியவர் கைது
home









Home