News Update :
Powered by Blogger.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு

Penulis : karthik on Thursday, 20 September 2012 | 05:18

Thursday, 20 September 2012

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு
ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு
[image: ]
புதுடெல்லி, செப். 20-
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 65 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு
வருகிறது. இதை உயர்த்துவது தொடர்பாக கடந்த சில தினங்களாக டெல்லியில்
ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.
சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகம் உயர்ந்து விட்டதால்
அகவிலைப்படியை கணிசமான அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை
விடப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படியை 7
சதவீதம் உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ
அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் தங்களது அடிப்படை
சம்பளத்தில் இனி 75 சதவீதத்தை அகவிலைப்படியாக பெறுவார்கள். இந்த உயர்வு
கடந்தஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும்.
அகவிலைப்படி உயர்வு காரணமாக 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள்
பயன்பெறுவார்கள்.
comments | | Read More...

ரூ.3 1/2 கோடி மோசடி வழக்கு: செல்வி மருமகன் ஜோதிமணியிடம் போலீஸ் இன்று விசாரணை

ரூ.3 1/2 கோடி மோசடி வழக்கு: செல்வி மருமகன் ஜோதிமணியிடம் போலீஸ் இன்று
விசாரணை ரூ.3 1/2 கோடி மோசடி வழக்கு: செல்வி மருமகன் ஜோதிமணியிடம் போலீஸ்
இன்று விசாரணை
ரூ.3 1/2 கோடி மோசடி வழக்கு: செல்வி மருமகன் ஜோதிமணியிடம் போலீஸ் இன்று விசாரணை
சென்னை, செப். 20-
சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரைச் சேர்ந்த நெடுமாறன் என்பவர் தி.மு.க.
தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, அவரது மருமகன் டாக்டர் ஜோதிமணி
ஆகியோர் மீது ரு. 3 1/2 கோடி பண மோசடி புகார் கூறியிருந்தார்.
சோழிங்கநல்லூர் அருகே தாழும்பூர் கிராமத்தில் செல்விக்கு சொந்தமான 2.94
ஏக்கர்நிலம் உள்ளது. ஜோதிமணி மூலம் இந்த நிலத்தை ரூ. 5 கோடியே 14
லட்சத்து 50 ஆயிரத்துக்கு வாங்க விலை பேசி அதில் ரூ. 3 1/2 கோடி முன்
பணம் கொடுத்தேன். ஆனால் நிலத்தை எனக்கு விற்காமலும் பணத்தை திருப்பி
தராமலும் மோசடி செய்து விட்டனர் என்று நெடுமாறன் புகாரில்
கூறியிருந்தார்.
இதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி நெடுமாறன்
கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில் சென்னை மத்திய
குற்றப்பிரிவு போலீசார் செல்வி, ஜோதிமணி ஆகியோர் மீது ஏமாற்றுதல், மோசடி,
கொலை மிரட்டல்ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
புகார்தாரர் நெடுமாறனிடம் குற்றப்பிரிவு போலீசார் முதலில்விசாரணை
செய்தனர். தொடர்ந்து செல்வி, ஜோதிமணி ஆகியோரை விசாரிக்க போலீஸ் முடிவு
செய்தது. இதற்காக இருவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பினர். அதில்
குற்றப்பிரிவு போலீசில் இன்று விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று
கூறப்பட்டு இருந்தது.
இதுபற்றி குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது, செல்வி, ஜோதிமணி
ஆகியோர் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினோம். இன்று
பிற்பகல் ஜோதிமணியிடம் விசாரிப்போம், அதன் அடிப்படையில் செல்வியிடம்
விசாரிப்போம் என்று தெரிவித்தார்.
comments | | Read More...

சென்னையில் 6,500 விநாயகர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு: இந்து முன்னணி சார்பில் 23 ந்தேதி 3 இடத்தில் ஊர்வலம்

சென்னையில் 6,500 விநாயகர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு: இந்து முன்னணி சார்பில் 23 ந்தேதி 3 இடத்தில் ஊர்வலம் சென்னையில் 6,500 விநாயகர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு: இந்து முன்னணி சார்பில் 23 ந்தேதி 3 இடத்தில் ஊர்வலம்
சென்னையில் 6,500 விநாயகர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு: இந்து முன்னணி சார்பில் 23 ந்தேதி 3 இடத்தில் ஊர்வலம்

சென்னை, செப். 20-

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் மொத்தம் 6,500 இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ளன.

வருகிற 22-ந்தேதி முதல் இந்த சிலைகள் கடலில் எடுத்துச் சென்று கரைக்கப்படுகின்றன. இந்து முன்னணி சார்பில் வருகிற 23-ந்தேதி சென்னையில் 3 இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் கரைக்கப்படுகிறது.

திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டை பிள்ளையார் கோவில் அருகில் இருந்து மதியம் 1.30 மணி அளவில் இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுகிறது. சுமார் 500 சிலைகள் இங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது.

இதில் இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாநகர பொதுச்செயலாளர் இளங்கோவன் மற்றும் 3 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த வழியாக தடையை மீறி ஐஸ்அவுஸ் மசூதி வழியாக ஊர்வலம் செல்ல முயன்று ராமகோபாலன் கைதாவார். பின்னர் பாரதி சாலை வழியாக ஊர்வல பாதை திருப்பி விடப்படும்.

இந்த ஆண்டும் வழக்கம் போல இந்து முன்னணி ஊர்வலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் இருந்து, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயகுமார் தலைமையில் இன்னொரு ஊர்வலமும் நடத்தப்படுகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு வழியாக கடற்கரை சாலையை சென்றடையும்.

இந்த ஊர்வலத்தில் 850 சிலைகளுடன் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள். பாரிமுனை முத்துசாமி பாலம் அருகில் இருந்து இந்து முன்னணி மாநில இளைஞர் அணி பிரமுகர் பொன்னையா தலைமையில் மதியம் 2.30 மணிக்கு 3-வது ஊர்வலம் புறப்படும். இதில் 1,600 சிலைகளுடன் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.

இதேபோல சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. விநாயகர் சிலை ஊர்வலம் 23, 24, 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் ஊர்வலத்திலும் ஆயிரக்கணக்கான சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன.

எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு, பட்டினப்பாக்கம், நீலாங்கரை ஆகிய 5 இடங்களில் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். பூஜைக்காக வைக்கப்பட்டுள்ள 6,500 சிலைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger