News Update :
Powered by Blogger.

துருக்கி தீவிரவாத அமைப்பு மீது அரசு படையினர் தாக்குதல்: 500 பேர் பலி

Penulis : karthik on Monday, 17 September 2012 | 18:50

Monday, 17 September 2012

துருக்கி தீவிரவாத அமைப்பு மீது அரசு படையினர் தாக்குதல்: 500 பேர் பலி துருக்கி தீவிரவாத அமைப்பு மீது அரசு படையினர் தாக்குதல்: 500 பேர் பலி
துருக்கி தீவிரவாத அமைப்பு மீது அரசு படையினர் தாக்குதல்: 500 பேர் பலி

அங்காரா, செப். 18 -
 துருக்கி நாட்டில் தனிநாடு கேட்டு தெற்குப் பகுதியில் செயல்பட்டு வரும் பி.கே.கே. என்னும் குர்திஸ்தான் தீவிரவாத அமைப்பு அரசுக்கு எதிராக பல தாக்குதலை நடத்தி போராடி வருகிறது. துருக்கி அரசுப் படையினர் இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கான தாக்குதலை நடத்தினர். கடந்த மாதம் நடந்த இந்த தொடர் தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்ல ப்பட்டனர் என்று அந்நாட்டு பிரதமர் எர்டோகன் அறிவித்துள்ளார்.  ஈராக் எல்லைப்பகுதியில் செயல்பட்டு வரும் இவர்கள் நடத்தும் தாக்குதலில் அரசுப்படையினர், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. 1984ம் ஆண்டுமுதல் இவர்களிடையே நடந்த வரும் சண்டையில் 40,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
comments | | Read More...

மும்பை மனிஷ் மார்க்கெட்டில் தீ: நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் அணைப்பு

மும்பை மனிஷ் மார்க்கெட்டில் தீ: நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் அணைப்பு மும்பை மனிஷ் மார்க்கெட்டில் தீ: நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் அணைப்பு
மும்பை மனிஷ் மார்க்கெட்டில் தீ: நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் அணைப்பு

மும்பை,செப்.17-
 மும்பையின் தென்பகுதியில் அமைந்துள்ள மனிஷ் மார்க்கெட்டில் இன்று மாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்து, நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் பெரிய அளவில் சேதங்கள் எதுவும் இல்லாமல் அணைக்கப்பட்டது. 10 தீயணைப்பு வண்டிகள் சுமார் மூன்று மணிநேரம் போராடி தீயை அணைத்தன.  தீ விபத்து பற்றிய செய்தி அறிந்ததும், தீயணைப்பு வண்டிகளும், ஆம்புலன்சுகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. தீ பரவிய கட்டிடங்களை குளிர்விக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.  மொத்த விற்பனையாளர்களின் முக்கிய மையமான மனிஷ் மார்க்கெட்டில் கடந்த வருடம் நவம்பர் மாதம் பரவிய தீயில் 300 கடைகள் எரிந்தன. அச்சம்பவம் பற்றிய விசாரணை தற்போதும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
comments | | Read More...

பெசன்ட் நகரில் சாமி கும்பிட்டு திரும்பிய பெண் டாக்டரிடம் நகை பறிப்பு

பெசன்ட் நகரில் சாமி கும்பிட்டு திரும்பிய பெண் டாக்டரிடம் நகை பறிப்பு பெசன்ட் நகரில் சாமி கும்பிட்டு திரும்பிய பெண் டாக்டரிடம் நகை பறிப்பு
பெசன்ட் நகரில் சாமி கும்பிட்டு திரும்பிய பெண் டாக்டரிடம் நகை பறிப்பு

திருவான்மியூர், செப்.17-

பெசன்ட்நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி வைஜெயந்தி (57).அமெரிக்காவில் டாக்டராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் சென்னை வந்த வைஜெயந்தி இன்று காலை 9 மணி அளவில் பெசன்ட் நகர் 6-வது குறுக்கு தெருவில் உள்ள சிவன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதில் இருந்த ஹெல்மெட் அணிந்த 2 ஆசாமிகள் வைஜெயந்தி கழுத்தில் இருந்த 9 பவுன் தாலி செயினை பறித்தனர். தாலிசெயினை கையில் பிடித்தபடி அவர், "திருடன்... திருடன்..." என்று கத்தினார்.

இதற்கிடையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், செயினின் பெரும்பகுதியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அவரது கையில் மிஞ்சிய பகுதி சுமார் 2 பவுன் இருக்கும். 7 பவுன் தாலி செயினுடன மர்மநபர்கள் சென்று விட்டதாக சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் வைஜெயந்தி புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger