News Update :
Powered by Blogger.

அன்னக்கொடியும் கொடிவீரனும்: அமீர் ஜோடியாக இனியா; கார்த்திகா ஜோடியாக புதுமுகம்

Penulis : karthik on Tuesday, 15 November 2011 | 22:17

Tuesday, 15 November 2011

 
 
 
மண் சார்ந்த, மக்கள் சார்ந்த படமாக எடுக்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய கனவு படமான அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தை கையில் எடுத்துள்ளார். படத்தில் ஹீரோவாக முதலில் பார்த்திபன் தான் நடிக்க இருந்தார். ஆனால், ஏனோ சில காரணங்களால் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டைரக்டர் அமீர் நடிக்க இருக்கிறார். கூடவே மற்றொரு ஹீரோவாக பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரின் மகன் அச்சன் நடிக்க இருக்கிறார். நாயகிகளாக வாகைசூட வா இனியாவும், கோ கார்த்திகாவும் நடிக்கின்றனர். இதில் இனியா, அமீருக்கு ஜோடியாகவும், கார்த்திகா புதுமுகம் அச்சனுக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளனர்.
 
பொதுவாக பாரதிராஜா அந்தகாலத்திலிருந்தே தன்னுடைய படத்தின் அறிமுக ஹீரோ, ஹீரோயின்களின் பெயரை சினிமாவிற்காக மாற்றுவார். அதுபோல் இந்தபடத்திலும் அறிமுகமாக இருக்கும் புதுமுகம் அச்சனின் பெயரையும் மாற்ற உள்ளாராம். இதனிடையே அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் சூட்டிங் வருகிற 17ம் தேதி அதாவது நாளை வியாழக்கிழமை, தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் கோலாகலமாக துவங்க இருக்கிறது. படத்தின் துவக்க விழாவுக்கு இயக்குநர் சிகரம் பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் உள்ளிட்ட டைரக்டர் பங்கேற்க இருக்கின்றனர்



comments | | Read More...

மேலும் தள்ளிப் போனது 'மயக்கம் என்ன'!

 
 
 
நவம்பரில் வெளியாகிவிடும் என்று சொல்லப்பட்ட செல்வராகவனின் மயக்கம் என்ன திரைப்படம் டிசம்பருக்கு தள்ளிப் போனது.
 
தனுஷ் - ரிச்சா நடித்துள்ள படம் மயக்கம் என்ன. தீபாவளிக்கே வருவதாக அறிவிக்கப்பட்ட படம் இது. ஆனால் ஏழாம் அறிவு, வேலாயுதம் படங்கள் அதிக திரையரங்குகளில் வெளியானதால், இந்தப் படம் இரு வாரங்கள் தள்ளிப் போடப்பட்டது.
 
நவம்பர் 25-ம் தேதி மயக்கம் என்ன வெளியாகும் என்று கூறப்பட்டது. இதே தேதியில் சிம்பு நடித்துள்ள ஒஸ்தியும் ரிலீசாகும் என்றனர்.
 
ஆனால் இப்போது மேலும் ஒரு வாரத்துக்கு மயக்கம் என்ன தள்ளிப் போய்விட்டது. டிசம்பர் 2-ம் தேதி வெளியாகிறது. இதற்கான தியேட்டர் புக்கிங் வேலைகளில் ஜெமினி நிறுவனம் பிஸியாக உள்ளது.
 
இயக்குநர் செல்வராகவனும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்




comments | | Read More...

தூக்கு தண்டனை காட்டுமிராண்டித்தனமானது ; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கருத்து

 
 
 
மரண தண்டனை விதிப்பது காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது, ஜனநாயக விரோதமானது, பொறுப்பற்றது என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி தெரிவித்துள்ளார்.
 
டெல்லியில் நடந்த இந்தியாவில் தூக்குத் தண்டனை ஒழிப்பு என்ற பெயரிலான 2 நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும்போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
நீதிபதி ஏ.கே.கங்குலி பேசுகையில், நமது சட்டத்தில் தூக்குத் தண்டனை இடம் தரப்பட்டுள்ளது. ஆனால் ஒருவருக்குத் தூக்குத் தண்டனை தருவது என்பது காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது, ஜனநாயக விரோதமானது, பொறுப்பற்றது என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.
 
வெற்று அனுமாங்களால் ஒருவருக்கு நமது அரசியல் சட்டம் அளித்துள்ள வாழ்வதற்கான உத்தரவாதத்தை இது கேள்விக்குறியாக்கி விடக் கூடாது.
 
மிக மிக அரிதான சம்பவங்களில் மட்டுமே தூக்குத் தண்டனை என்ற சொல் மிகவும் பலவீனமாக உள்ளது. எது அரிய செயல் என்பதை தீர்மானிப்பது சுலபமல்ல. ஒவ்வொரு நீதிபதியின் மன நிலையைப் பொறுத்து, அவர் முடிவெடுப்பதைப் பொறுத்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. அரசியல் சாசனச் சட்டம் நிர்ணயித்துள்ள, வழங்கியுள்ள அனைத்து அம்சங்களையும் அப்போது நீதிபதிகள் கருத்தில் கொண்டாக வேண்டும்.
 
ஒருவரை மரணக் குழியில் தள்ளுவது எனபது நமது சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு தண்டனைதான் என்றாலும், அது காட்டுமிராண்டித்தனமானது. ஒருவரின் வாழும் உரிமையை நிராகரிப்பதாக அது அமையும்.
 
எந்தவித சந்தேகமும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட நிலை இதுவரை உருவாகவில்லை.
 
எனவே ஒரு நீதிபதி யாருக்காவது மரண தண்டனை கொடுக்க தீர்மானித்தால், முதலில் அதற்கான சூழல்களை மிக மிக கவனமாக ஆராய்வது அவசியம். அந்த குற்றவாளி மீண்டும் திருந்த வாய்ப்பே இல்லை என்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கோர்ட்களில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் மரண தண்டனை குறித்த பரிசீலனைகளைச் செய்யலாம் என்றார் கங்குலி.
 
இந்தியாவில் தூக்குத் தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், தூக்குத் தண்டனைக்கு எதிராக வலுவாக குரல் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூக்குத் தண்டனைக்கு எதிரான போராட்டங்களுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.


 


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger