News Update :
Powered by Blogger.

Rajini fans rooting for Saidai Duraisamy as Mayor?

Penulis : karthik on Friday, 7 October 2011 | 02:08

Friday, 7 October 2011

 

Superstar Rajinikanth has often told his fans to vote for whichever party they liked in the Assembly, Parliament and local body polls. He has also told them that he'd seek their 'help' only when he needed one. The star doesn't instruct them to vote for any particular party and has told them on more than on occasion that they're free to express their political affiliations during the elections.

Saidai Ravi, an important office-bearer of Rajini's fan club, has openly expressed his support to Saidai Duraisamy, ex-legislator and the ruling AIADMK's Mayoral candidate in the upcoming local body polls.

Ravi's supporters and many fans of the superstar are said to be working overtime in ensuring the success of Duraisamy at the electoral field.

Ravi is said to have taken 'prior permission' from the chief fan club managed by the superstar's assistant Sathynarayana. Talking about his campaigning, Ravi says "We don't see Duraisamy Anna as a candidate from a particular party. He has done many good things to the people of Saidapet on his own without us seeking help from him.

"Ask any resident of the area and he'd vouch for the fact that whatever the issue is, Duraisamy Anna is always there to render a helping hand. If he becomes Mayor, Chennai city would be spruced up like never before and would reclaim its original glory," said Ravi.

It may be noted that Duraisamy had earlier met Rajinikanth and sought his blessings!

comments | | Read More...

ரேஸில் நம்பர் ஒன்னான 'ரா ஒன்'.... தயங்கும் தமிழ்ப் படங்கள்!

 
 
 
முன்பெல்லாம் தமிழகம் முழுக்க 20 திரையரங்கில் ஒரு இந்திப் படம் வெளியானாலே பெரிய சாதனை. சென்னையில் மூன்று அரங்குகளில் வெளியாகும். இப்போது நிலைமை வேறு.
 
தமிழ்ப் படங்களுக்கு இணையாக இந்திப் படங்களும் அதிக திரையரங்குகளில் வெளியாகின்றன. அதுவும் ரஜினி நடித்துள்ளார் என்றால் கேட்க வேண்டுமா... கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட அரங்குகளில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெளியாகிறது ரா ஒன். இந்தியில் மட்டுமல்லாது, தமிழிலும் 'டப்பாகி' இந்தப் படம் வெளியாவதால் தியேட்டர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
 
தீபாவளிப் படங்களில் இப்போதைக்கு ஏழாம் அறிவு மட்டுமே வெளியாவது உறுதியாகியுள்ளது. இப்போதைக்கு ரா ஒன்னுக்கு தீபாவளிப் போட்டி ஏ ஆர் முருகதாஸின் இந்த நேரடி தமிழ்ப் படம்தான்!
 
ஒஸ்தி வரலாமா வேண்டாமா என தயங்கி நிற்கிறது. ரா ஒன்னுக்கு நல்ல திரையரங்குகள் பெருமளவு ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்தப் படம் வெளிவராது என்றே தெரிகிறது.
 
தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாக கட்டாயம் ரிலீசாகிவிடும் என்று சொல்லப்பட்ட விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு இன்னமும் நல்ல அரங்குகள் கிடைக்கவில்லை என்கிறார்கள். இதனால் அந்தப் படம் குறித்த தேதியில் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், சொன்னபடி வெளியாகும் வேலாயுதம் என தயாரிப்பாளர் தரப்பில் உறுதியாக உள்ளனர்.
 
மயக்கம் என்ன படம் ஏற்கெனவே ரேஸிலிருந்து விலகிக் கொண்டது நினைவிருக்கலாம்.



comments | | Read More...

கல்லூரி மாணவர்களுக்கு "இலவச வெப்சைட்'

 
 
 
மதுரை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு "இலவச வெப்சைட்' ஏற்படுத்தித்தர மைக்ரோ இந்தியா கம்ப்யூட்டர் நிறுவனம் முன்வந்துள்ளது. மாவட்டத்தில் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், ஆசிரியர்களுக்கு பயிற்சி, மாணவர்களுக்கு, இமெயில் வசதியை ஏற்படுத்தியது இந்நிறுவனம். தற்போது கல்லூரி மாணவர்களுக்கு இலவச
வெப்சைட் வசதியை ஏற்படுத்தித் தர முன்வந்துள்ளது. இலவச வெப்சைட்டில் மாணவர்கள் தங்கள் சுயவிபரங்கள்
(பயோடேட்டா) பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். போட்டோக்கள், வீடியோ பதிவுகள், சான்றிதழ்களை ஸ்கேன் செய்தும் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் ஒரிஜினல் தொலைந்தாலும்கூட, அவற்றை எங்கிருந்தும் தேவைக்கேற்ப டவுன்லோடு செய்து நகலை பெற வசதி கிடைக்கும். மேலும் பல வெளிநாட்டு வெப்சைட்டுகள் மூலம் சம்பாதிக்கவும் வாய்ப்புள்ளதால், அதற்கும் இன்டர்நெட் பயிற்சி அளிக்கப்படும். இதுதவிர தற்காலத்திற்கு தேவையான ஆங்கில பேச்சுப் பயிற்சி, நெட் பாங்கிங், டிக்கெட் ரிசர்வேஷன் உட்பட போன்றவற்றை மாணவர்கள் தானாகவே செய்யும் வகையில் பயிற்சி அளிக்கப்படும். மாணவர்கள் இணையதளத்தை பொறுத்தவரை "அப்டேட்' செய்யும் வகையில் அவர்களுக்கு இலவச பயிற்சியாகவே அளிக்கப்படும். மைக்ரோ இந்தியா அமைப்பின் இயக்குனர் நரேஷ் கூறியதாவது: இதில் சிறந்த மாணவர்களை கண்டறிந்து வேலைவாய்ப்பு வழங்கவும் திட்டம் உள்ளது. இன்டர்நெட்டை முறைப்படி பயன்படுத்த தெரிந்தால் எளிதாக சம்பாதிக்கவும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அமெரிக்காவின் டாலருக்கு நிகரான இந்திய பணமதிப்பு வீழ்ச்சி அடைவதால், அமெரிக்க முதலீடு அதிகரிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் இன்டர்நெட்டை பயன்படுத்தி சம்பாதிக்கவும் வழி ஏற்படும். இதுபோன்ற பயிற்சிகளுக்கு அணுகும் கல்லூரிகளுக்கு சென்று பயிற்சியை துவக்க உள்ளோம். "இயக்குனர், இளைஞர் வேலைவாய்ப்பு பயிற்சி அமைப்பு, 5, பைபாஸ் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை-16' என்ற முகவரியில் அணுகலாம். 94433-64567 அல்லது www.yetbo.org என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.
 

 


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger