News Update :
Powered by Blogger.

டீசல் விலை உயர்வு மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ரூ.50 கோடி கூடுதல் செலவு

Penulis : karthik on Saturday, 15 September 2012 | 03:46

Saturday, 15 September 2012

டீசல் விலை உயர்வு மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ரூ.50 கோடி கூடுதல் செலவு டீசல் விலை உயர்வு மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ரூ.50 கோடி கூடுதல் செலவு
டீசல் விலை உயர்வு மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ரூ.50 கோடி கூடுதல் செலவு

சென்னை, செப். 15-

மத்திய அரசு டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது. இதையடுத்து ஆம்னி பஸ், ஆட்டோக்கள், வாடகை கார்கள், கால் டாக்சி ஆகியவற்றின் கட்டணம் உடனடியாக உயர்ந்தது. ஆம்னி பஸ்களில் ரூ.30 கட்டணம் உயர்த்தப்பட்டது. அரசு போக்குவரத்து கழக பஸ்களில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தமிழ் நாட்டில் 20,000 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து கழகங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது. அரசு போக்குவரத்து கழகத்திற்கு குறைந்த விலையில் டீசல் விற்பனை செய்யப்பட்டாலும் கூட ரூ.500 கோடிக்கு மேல் கூடுதல் செலவு ஏற்படுகிறது.

இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் பெரும் சவாலை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.50 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. டீசல் விலையேற்றத்தால் மாதத்திற்கு ரூ.4 1/2 கோடி இழப்பு ஏற்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மற்ற போக்குவரத்து கழகங்களும் டீசல் விலை உயர்வை எப்படி சமாளிக்க போகிறது என்று தெரியவில்லை அதிகாரிகள் விழி பிதுங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு ஓரளவிற்கு வருவாயை எட்டிப் பார்த்த அரசு போக்கு வரத்து கழகங்கள் மீண்டும் நஷ்டத்திற்கு தள்ளப்படும் நிலை உருவாகி உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
comments | | Read More...

விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா

விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா
விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா

சென்னை, செப். 15-

முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாகப்பட்டினம் மாவட்டம், வாய்மேடு காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த சு.ராஜேந்திரன்10.9.2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது  மாரடைப்பால் காலமானார். தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில், தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த சு.சங்கர் 12.9.2012 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இந� ��த செய்திகளை அறிந்து நான் மிக்க துயரம் அடைந்தேன். ராஜேந்திரன் மற்றும் சங்கர் ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது  குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இருவரின் குடும்பங்களுக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதேபோல், மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டம், துவரிமான் கிராமம் அருகே 9.9.2012 அன்று அரசுப் பேருந்தும் இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த கந்தன் மற்றும் சுவாமிநாதன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், புக்கத்துறை கிராமம் அருகே 10.9.2012 அன்று பழையனூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சுப்பிரமணி மீது சென்� ��ையிலிருந்து மதுரை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த செய்திகளை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த சாலை விபத்துகளில் அகால மரணமடைந்த 3 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், புக்கத்துறை கிராமம், பழையனூர் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் சின்னைய்யன் பலத்த காயமடைந்துள்ளார் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்ட நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.மேலும், அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த கந்தன், சுவாமிநாதன் மற்றும் சுப்பிரமணி ஆகியோரின் குடும்பங்களுக்கு  தலா ஒரு லட்சம்  ரூபாயும், விபத்தில் பலத்த காயமடைந்த சின்னைய்யனுக்கு 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
comments | | Read More...

உத்தரபிரதேசத்தில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி மறுப்பு: அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேசத்தில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி மறுப்பு: அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேசத்தில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி மறுப்பு: அகிலேஷ் யாதவ்
உத்தரபிரதேசத்தில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி மறுப்பு: அகிலேஷ் யாதவ்

லக்னோ, செப்.15-

நாடுமுழுவதும் சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு எதிர்க் கட்சிகள் மட்டுமின்றி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உத்திர பிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது,

சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை சமாஜ்வாதி கட்சி ஆதரிக்கவில்லை. எனவே, உத்தரபிரதேசத்தில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger