News Update :
Powered by Blogger.

கூடங்குளம் மக்கள் மீது விமானம் தாக்குதல்:ஒருவர் பலி

Penulis : karthik on Friday, 14 September 2012 | 06:28

Friday, 14 September 2012


கூடங்குளம் மக்கள் மீது விமானம் தாக்குதல்:ஒருவர் பலி கூடங்குளம் மக்கள் மீது விமானம் தாக்குதல்:ஒருவர் பலி

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதை உடனே நிறுத்த வலியுறுத்தி இடிந்தகரை உள்ளிட்ட கிராம மீனவர்கள் நேற்று கடலில் à ��ின்று போராட்டம் நடத்தியபோது, கடற்படை விமானம் போராட்டக்காரர்களை அச்சுறுத்துவது போல தாழ்வாகப் பறந்ததால் பீதியடைந்த 5 போராட்டக்காரர்கள் நிலை தடுமாறி கடலில் விழுந்தனர். அதில் ஒருவர் பலியானார்.

மத்திய பிரதேசத்தில் அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க 15 நாட்களாக கழுத்தளவு நீரில் நின்று விவசாயிகள் நடத்திய போராட்ட முறை இப்பொழுது கூடங்குளத்தில் எதிரொலித்து வருகிறது.

நேற்று முதல் இடிந்தகரையில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக கிராம மக்கள் கடலில் à ��ின்றபடி போராடி வருகின்றனர். இன்று 2வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது.

நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கடலோரக் காவல் படையின் சிறிய ரக விமானம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது படு தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தது. இது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டும் தொனியில் இருந்தது. மத்தியப் பà ��ரதேசத்தில் நடந்த போராட்டத்தின்போது கூட இப்படி நடந்து கொள்ளவில்லை மத்திய பாதுகாப்புப் படை. ஆனால் நேற்று நடந்ததைப் பார்த்த பொதுமக்கள், இது சிங்களப் படையினர், ஈழத் தமிழர்கள் மீது ஏவிய அடக்கà ��முறையை நினைவூட்டுவதாக உள்ளதாக குமுறல் வெளியிட்டனர்.

இந்த நிலையில் இந்தியக் கடலோரக் காவல் படையின் அச்சுறுத்தலால் ஒரு அப்பாவி போராட்டக்காரர் உயிரிழந்துள்ள செய்தி தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மக்கள் பலரும் இப்போராத்தில் கலந்து கொண்ட போது சிலர் தூண்டில் பாலத்தில் நின்றபடி போராட்டத்தை பார்த்தனர். அப்போது பல முறை கடலோரக் காவல்படை விமானம் மிகத் தாழ்வாக பறந்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தி குழந்தைகைகளை பயமுறுத்தியது. விமானம் மிகமிக தாழ்வாக பறக்கும் போ�® �ு பாலத்தில் இருந்து கைக்கு எட்டும் தூரத்தில் விமானம் இருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

அந்த சமயத்தில் தான் பாலத்தில் இருந்து சகாயராஜ் என்பவர் உள்ளிட்ட 5 பேர் கீழே விழுந்துள்ளனர். அதில் சகாயராஜ் தலையில் படுகாயமடைந்தது. இதையடுத்து 5 பேரையும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சகாயராஜ் உயிரிழந்தார். அவருக்குத் திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர்.

இந்த செய்தியை கேட்ட தமிழர்கள் மிகவும் கொதித்து போயுள்ளனர். காரணம், இதுவரை 550 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கப்பல் படையால் கொல்லபட்ட போது பாதுகாப்புக்கு வராத இந் திய கடலோர காவல் படை , இப்போது தங்கள் வாழ்வாதாரத்திற்கு போராட்டும் மக்களை குறிவைத்து வானில் பல நூறுமுறை பறந்து செல்கிறது. எவ்வளவு முறையிட்டும் இந்திய அரசு மக்களை காக்க இது போல விமானம் மூலம் கண்காணிக்கவில்லை . இன்று மட்டும் ஏன் இந்த விமானம் பலமுறை சுற்றிச் சுற்றி வட்டமிட்டது என�¯ �ற கேள்வியை எழுப்புகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.


/

comments | | Read More...

கூடங்குளம் போராட்ட மக்கள் மீது விமானம் தாக்குதல்: வைகோ கண்டனம்



கூடங்குளம் போராட்ட மக்கள் மீது விமானம் தாக்குதல்: வைகோ கண்டனம் கூடங்குளம் போராட்ட மக்கள் மீது விமானம் தாக்குதல்: வைகோ கண்டனம்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெ�® �ியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
தென்தமிழ்நாட்டைப் பேரழிவுக்கு ஆளாக்கும் அபாயம் நிறைந்த, கூடங்குளம் அணு உலையை அகற்ற வேண்டும்; இயக்கக்கூடாது; யுரேனியம் எரிபொருள் நிரப்பக் கூடாது என்று, இந்தியாவில் எங்கும் நடைபெறாதவிதத்தில், அமைதி வழி அறப்போராட்டத்தை, ஓராண்டுக்கு மேலாக இடிந்தகரையில், அனைத்து சமுதாய மக்களும், மதங்களைக் கடந்து நடத்தி வருகின்றனர். 

தங்களது, கடல் வாழ் உயிர் ஆதார வாழ்க்கை அழிந்து போகும் என்று மீனவ மக்கள், குறிப்பாக தாய்மார்கள் வீரமும், தியாகமும் செறிந்த உன்னதமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

செப் 9 ஆம் தேதி அணு உலை முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்தபோதிலும், அணு உலைக்கு அருகில் செல்லாமல், 1/2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால், கடற்கரையில், சாத்வீகப் போராட்டம் நடத்தினர். 

ஆனால், 10 ஆம் தேதி, காலையில், காவல்துறையினர் தடியடியும், கண்ணீர்ப் புகைப் பிரயோகமும் செய்தனர். இதில், குழந்தைகள், பெண்கள், உட்படப் பலர் படுகாயம் உற்றனர். காவல்துறையினர், கூடங்குளத்துக்கு உள்ளே நுழைந்து, வீடுவீடாகப் புகுந்து, அங்குள்ள மக்களை, ஈவு இரக்கம் இல்லாமல் தாக்கினர். 

மணப்பாட்டில், காவல்துறையினர் சுட்டதில், அந்தோணி ஜான் என்ற மீனவர் கொல்லப்பட்டார். இடிந்தகரை, கூத்தன்குழி மீனவ மக்கள், கடலுக்குள் இறங்கி, கழுத்து அளவு தண்ணீரில் அறப்போராட்டம் நடத்தியது, உலகத்தில் எங்குமே நடைபெறாத மகத்தான போராட்டம் ஆகும்.

கூடங்குளம், இடிந்தகரை வட்டாரத்தில், இந்திய விமானப்படையின் சிறிய ரக போர் விமானங்கள் தாழ்வாகப் பறப்பதையும், கடற்படை ரோந்துப் படகுகள், அப்பகுதி கடலில் சுற்றுவதையும் குறித்து, நான் ஏற்கனவே கண்டன அறிக்கை விடுத்து இருந்தேன். 

சிங்களக் கடற்படை, நமது தமிழக மீனவர்கள், 570 பேரைச் சுட்டுக் கொன்றது. அதனை எந்தக் கட்டத்திலும் தடுக்க முடியாத இந்தியக் கடற்படை, சிங்களக் கடற்படையோடு கூட்டுச் சதி செய்கிறது. இந்தச் சூழ்நிலையில், இடிந்தகரை கடற்கரையில், கடல் நீருக்குள் இறங்கி அறப்போர் நடத்திய மீனவர்களை அச்சுறுத்தவும், தாக்க�® �ும் முனைந்து, இந்திய விமானப்படையின் சிறிய ரக போர்விமானம், தாழப் பறந்து இருக்கின்றது. 

அதில், இடிந்தகரையைச் சேர்ந்த சகாயம் என்ற மீனவர், தலை உடைந்து, படுகாயம் அடைந்து உள்ளார். இந்திய விமானப்படை, ஒரு சமர்க்களத்தில் எதிரி நாட்டு மக்களைக் தாக்கிக் கொல்வதைப் போல, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றது. 

இந்தத் தாக்குதல், இந்திய ஒருமைப்பாட்டின் சவப்பெட்டியின் மீது அடிக்கப்பட்ட ஆணி ஆகும். இந்தக் கொடூரத் தாக்குதலுக்குக் காரணமான இந்திய விமானப்படையினர் மீது, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். இந்திய ராணுவ அமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். 

காங்கிரஸ் தலைமை தாங்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக, தமிழக மக்கள் கிளர்ந்து எழுவார்கள். அதற்காக மக்கள் சக்தியை, முழு மூச்சாகத் திரட்டுவோம் என எச்சரிக்கிறேன். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


/

comments | | Read More...

இனி வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே ரூ.386.50 7வது சிலிண்டர் ரூ.733.50


இனி வருடத்துக்கு ஒரு வீட்டுக்கு இப்போதைய விலையான ரூ.386.50க்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வாங்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கேஸ் சிலிண்டரின் விலையும் ரூ.733.50 ஆக இருக்கும். இந்தக் �® �ட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக் கூட்டத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதே போல சமையல் கேசுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. கேஸ் விலையை மத்திய அரசு உயர்த்தாவிட்டாலும், அதன் சப்ளை யில் மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது.

இப்போது 14.2 கிலோ எடை கொண்ட சமையல் ஒரு கேஸ் சிலிண்டரின் உண்மையான விலை ரூ.733.50 ஆகும். ஆனால�¯ , ஒவ்வொரு கேஸ் சிலிண்டருக்கும் மத்திய அரசு ரூ.347 ரூபாய் மானியமாக வழங்குகிறது. இதனால் நமக்கு சிலிண்டர் ரூ.386.50க்கு விற்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் இந்த மானியத்தை ஒரு வருடத்துக்கு முதல் 6 சிலிண்டர்களுக்கு மட்டுமே வழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மேல் வாங்கப்படும் சிலிண்டர்களுக்கு மà ��்கள் உண்மையான விலையைத் தர வேண்டும்.

இதனால் இனி வருடத்துக்கு ஒரு வீட்டுக்கு இப்போதைய விலையான ரூ.386.50க்கு 6 கேஸ் சிலிண்டர்க ள் மட்டுமே வழங்கப்படும். இதையடுத்து வாங்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கேஸ் சிலிண்டரின் விலையும் ரூ.733.50 ஆக இருக்கும்.

இந்தக் கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருகிறது.

சந்தை விலையான ரூ.733.50 கொடுத்து ஆண்டுக்கு எத்தனை சிலிண்டர்கள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். இதற்கு உச்ச வரம்போ, கட்டுப்பாடோ நிர்ணயிக்கப்படவில்லை.

இந்தக் கட்டுப்பாட்டால் வருடத்துக்கு 6 சிலிண்டர்களுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு பாதிப்பு இருக்காது. ஆனால் அதற்கு மேல் பயன்படுத்துபவர்கள் கிட்டத்தட்ட இரு மடங்கு விலை க�¯ �டுத்துதான் ஒவ்வொரு கூடுதல் சிலிண்டரையும் வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.


/

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger