News Update :
Powered by Blogger.

ஐ.பி.எல். கிரிக்கெட்: கடைசி பந்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை

Penulis : karthik on Sunday, 6 May 2012 | 08:48

Sunday, 6 May 2012




ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டியில் 174 ரன்களை சேஸ் செய்து வந்த மும்பை இந்தியன்ஸ் துவக்க வீரர் சச்சின், ரோஹித் சர்மா ஜோடியின் சிறப்பான ஆட்டம் மூலம் வெற்றிப் பாதையில் சென்றது. அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததாலும், கடைசியில் ஸ்மித்தின் அதிரடி ஆட்டத்தால் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெ� �்றிப் பெற்றது.

ஐபிஎல் 5 தொடரில் இன்று மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் துவக்க வீரர் முரளி விஜய்யின் மூலம் அதிரடி துவக்கத்தை பெற்றது.

வழக்கமாக வானவேடிக்கை காட்டும் துவக்க வீரர் டு பிளசிஸ் இன்று 9 ரன்களில் எதிர்பாராத வகையில் ரன் அவுட்டானார். துவக்கம் முதலே அதிரடியாக ஆடி முரளி விஜய், 4வது ஓவரில் 3 சிக்ஸ்< /span>, 1 பவுண்டரிகள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அதிரடியாக ரன்களை எடுத்து வந்த முரளிவிஜய் அரைசதத்தை நெருங்கிய நிலையில், ஆர்.பி.சிங்கின் பந்தில் போல்டானார். 29 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 41 ரன்களை எடுத்தார் முரளிவிஜய்.

அதன்பிறகு துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, பிராவோ ஜோடி அணியின் ஸ்கோரை பொறுமையாக உயர்த்தியது. அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தி வந்த சுரேஷ் ரெய்னா 21 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 36 ரன்களை எடுத்து ஆர்.பி.சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பொறுப்பாக ஆடி வந்த பிராவோ உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் டோணி அதிரடியை தொடர்ந்தார். ஆனால் 1 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 40 ரன்களை குவித்த பிராவோ போல்டானார். அடுத்த ஓவரிலேயே க� ��ப்டன் டோணியும் பவுண்டரி லைனில் கேட்சாகி ஆட்டமிழந்தார். 15 பந்துகளில் 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 25 ரன்களை சேர்த்தார் டோணி.

அடுத்து வந்த அல்பி மார்கல்(3), ஜடேஜா(9), அஸ்வின்(0) ஆகியோர் வரிசையாக அவுட்டாகினர். � �றுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்களை இழந்து 173 ரன்களை குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தரப்பில் மலிங்கா, ஆர்.பி.சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

174 ரன்களை எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் துவக்கத்திலேயே பிராங்க்ளினின்(1) விக்கெட்டை இழந்தது. அதன்பிறகு ஜோடி சேர்ந்த சச்சின், ர ோஹித் சர்மா அணியின் ஸ்கோரை பொறுப்பாக உயர்த்தினர்.

துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய சச்சின் 44 பந்துகளில் 1 சிக்ஸ், 11 பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்தார். சச்சின் 74 ரன்கள் எடுத்த நிலையில், டு பிளசிஸிடம் கேட்சாகி வெளியேறினார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் அவுட்டானார். அதே ஓவரில் ராயுடு டக் அவுட்டானார்.

ரோஹித் சர்மா 46 பந்துகளில் 2 சிக்ஸ், 6 பவுண்டரிகள் அடித்து 60 ரன்களை குவித்த நிலையில் ஜடேஜாவின் பந்தில் போல்டானார். அதன்பிறகு வந்த ராபின் பீட்டர்சன்(0), ஹர்பஜன் சிங்(0), மலிங்கா(0) ஆகியோர் வரிசையாக அவுட்டாகினர்.

மும்பை இந்தியன்ஸின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களமிறங்கிய ஸ்மித் அதிரடியாக 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஸ்மித் 9 பந்துகளில் 2 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 24 ரன்களை குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி வெற்றிப் பெற்றது.



comments | | Read More...

பாதுகாப்பாளர்கள் 2 பேர் சுட்டுக்கொலை அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை: கலெக்டர் அலெக்ஸ் பேட்டி




சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டராக பணி புரிந்து வந்த அலெக்ஸ் பால்மேனன் கடந்த மாதம் 21-ந் தேதி, மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். அப்போது கலெக்டரை காப்பாற்ற முயன்ற அ� ��ரது பாதுகாவலர்கள் இருவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்றனர். 13 நாள் பிணைக் கைதியாக இருந்த அலெக்ஸ் பால்மேனன், மாவோயிஸ்டுகளின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக சத்தீஸ்வர் அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டு, வீடு திரும்பினார். 

மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்த அனுபவத்தை அலெக்ஸ் பால்மேனன், இணைய தளத் தில் `பேஸ் புக்'கில் எழுதி இருப்பதாவது:- 

சுக்மா மாவட்டத்தில் மஞ்சிபாரா என்ற இடத்தில் சாதாரண ஏழை பழங்குடியின மக்கள் என்னை சூழ்ந்து நிற்க, திடீரென ஒரு கும்பல் என்னை கடத்த முயன்றது. அவர்கள் மாவோயிஸ்டுகள் என்பதை பின்புதான் தெரிந்து கொண்டேன். என்னை அவர்களிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் எனது பாதுகாவலர்கள் ஈடுபட்டனர். 

பாதுகாவலர்கள் இருவரையும் மாவோயிஸ்டுகள் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர். இதுபோன்ற மோசமான ஆள் கடத்தல் நிகழும் என்று நான் கற்பனை கூட செய்து பார்த்தது கிடையாது. எனது பாதுகாவலர்கள் அம்ஜத், கிஸுன் ஆகியோர் என் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இன்னும் மனதை விட்டு அகல வில்லை. அது ஒரு வலிகள் நிறைந்த நினைவுகள் ஆகும். 

அந்த நினைவுகள் என்னை தூங்க விடாமல் செய்கின்றன. இயல்பு நிலைக்கு திரும்பிய உடன் அந்த பாதுகாவலர்களின் குடும்பத்துக்கு என்ன செய்ய முடியும்ப என யோசித்து, அதை செய்து கொடுக்க முயற்சி எடுப்பேன். 

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.








comments | | Read More...

மணமகன் வர தாமதம்: மணப்பெண்ணுக்கு, மணமகனின் சகோதரி தாலி கட்டினார்

Penulis : karthik on Saturday, 5 May 2012 | 22:11

Saturday, 5 May 2012




கேரள மாநிலம் காயங்குளம� � பகுதியை சேர்ந்த கமலேஷ், கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.
 
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவருக்கு சாரிகிரிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், திருமணத்திற்குச் செல்ல கமலேஷின் கடை உரிமையாளர் அவருக்கு விடுமுறை அளிக்க மறுத்துவிட்டார்.
 
அங்குள்ள தொழிலாளர் துறை அமைச்சகத்தின் மூலம் சமரசம் பேசியும், குறிப்பிட்ட நேரத்தில் கமலேஷின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க அவர் மறுத்துவிட்டார்.
 
இதனால் விமான நிலையத்தில் காத்திருந்த மாப்பிள்ளை கமலேஷ், குறிப்பிட்ட நேரத்தில் ஊருக்கு வர முடியவில்லை. என்றாலும், சுபமுகூர்த்த நேரத்தை தவறவிட விரும்பாத இரு வீட்டாரும் துணிச்� �லான முடிவை எடுத்தனர்.
 
அதன்படி, கமலேஷின் சகோதரி தகவிதா மணமகன் சார்பில் மணப்பெண்ணுக்கு தாலி கட்டினார். திருமண விருந்து முடிந்ததும், புதுப்பெண் சாரி கிரிஷா, மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger