News Update :
Powered by Blogger.

தம்புள்ளை மஸ்ஜித் விவகாரம்; ஜெனிவாவில் சுவிஸ் பிரதம சங்கநாயக்கருடன் BRN அமைப்பு சந்திப்பு! சுமூக தீர்வுக்கு முயற்சிப்பதாக உத்தரவாதம்!!

Penulis : karthik on Thursday, 3 May 2012 | 05:46

Thursday, 3 May 2012



Thursday ,May, 03, 2012
ஜெனிவா::இலங்கையில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் தம்புள்ளை ஜும்ஆ பள்ளிவாசல் விவகாரத்தை சுமுகமாக பேசித் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜெனிவா நகரில் அமைந்துள்ள சர்வதேச பௌத்த விகாரையின் பிரதம வி காராதிபதியும் சுவிற்சலாந்தின் பிரதம சங்கநாயக்கருமான மதிப்பிற்குரிய தவலம தம்பிக்க தேரர், ஜெனிவாவில் இயங்கும் Brotherhood Rights Network எனும் அமைப்பின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
ஜெனிவா பௌத்த நிலையத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதம சங்கநாயக்கர் மதிப்பிற்குரிய தவலம தம்பிக்க தேரர் இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.

Brotherhood Rights Network அமைப்பின் தலைவர் முயீஸ் � ��ஹாப்தீன் மற்றும் அதன் பிரதித் தலைவரான அஹ்சன் ஜுனைதீன் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

தம்புள்ளை ஜும்ஆ பள்ளிவாசல் தாக்கப்பட்டு அதன் இருப்பும் பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள இந்நிலையில் அதனைப் பாதுகாப்பதற்கும் அதன் மூலம் இன ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவதற்கும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஜெனிவா சர்வதேச பௌத்த வ� ��காரையின் பிரதம விகாராதிபதி தவலம தம்பிக்க தேரரிடம் வலியுறுத்திய இவர்கள் அதற்கு அவரது ஒத்துழைப்பையும் கோரியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த தம்பிக்க தேரர் துரதிருஷ்டவசமாக இடம்பெற்ற மஸ்ஜித் தாக்குதல் சம்பவத்திற்கு கவலை வெளியிட்டதோடு இந்த விவகாரத்தை சுமுகமாக பேசித் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தம்புள்ளை ரங்கிரி விகாராதிபதி மற்றும் அரச உயர் மட்டத்தினரு டன் இது தொடர்பாக தான் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்ததோடு அதன் மூலம் நல்லதொரு தீர்வை எட்ட முடியும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.

இந்த நல்லெண்ண சந்திப்பும் கலந்துரையாடலும் மிகவும் திருப்திகரமாக இடம்பெற்றதாக Brotherhood Rights Network அமைப்பின் தலைவர் முயீஸ் வஹாப்தீன் ஜெனிவாவில் இருந்து தெரிவித்தார்.


http://worldtamilnews7.blogspot.com





comments | | Read More...

மதுரை ஆதீனம் மடத்தில் தங்கியிருந்த இளம் பெண் வைஷ்ணவி மாயம்?




மதுரை ஆதீன மடத்தில் தங்கியிருந்த வைஷ்ணவி என்ற இளம் பெண்ணைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர் கடத்தப்பட்டாரா அல்லது எங்காவது போய் விட்டாரா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

இதுவரை எந்தவிதமான மெகா சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வந்த மதுரை ஆதீனம் இன்று அல்லோகல்லப்பட்டுக் கிடக்கிறது. நடக்கக் கூடாது நடந்து விட்டதாக பக்தர்கள் கருதுகின்றனர். பெரும் சர்ச்சையில் மாட்டியுள்ள மதுரை ஆதீனத்தில் தற்போது புதிததாக ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. இந்த ஆதீனத்தில் தங்கியிருந்த வைஷ்ணவி என்ற இளம் பெண்ணைக் காண வில்லை என்று புதுப் பரபரப்பு கிளம்பியுள்ளது. இவரை யாரேனும் சிறை வைத்துள்ளனரா என்ற கேள்வியும் பரபரப்பாக பரவி வருகிறது.

ஆதீன மடத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கீர்த்திகா, செல்வி என இரண்டு பேர் சில மாதங்களுக்கு முன்பு சமையலுக்காக வந்தனர். இவர்களை ஆளுக்கு ஒரு ஊரில் மதுரை ஆதீனம் தங்க வைத்துக் கவனித்து வந்தாராம்.

இதேபோல ஆதீனத்திற்குள் காலடி எடுத்து வைத்தவர்தான் வைஷ்ணவி. இவர் தஞ்சை மாவட்டம் கச்சனத்தைச் சேர்ந்த இளம் பெண். இவருடன் இவருடைய தங்கை கஸ்தூரியும் இங்கு வந்து சேர்ந்தார். வைஷ்ணவியின் வருகைக்குப் பின்னர் அவரது கைதான் மடத்தில் ஓங்கியிருந்ததாம்.

இவர்களுக்காக பெருமளவில் மதுரை ஆதீனம் செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. பெரும் செல்வாக்குடன் திகழ்ந்து வந்தவரான வைஷ்ணவியை இப்போது மடத்தி்ல காணவில்லையாம். சமீபத்தில்தான் இவர்கள் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆதீனத்தின் உதவியாளராக செயல்பட்டு வந்தார் வைஷ்ணவி. இவர் எங்கு போனார் என்பது தெரியவில்லை என்கிறார்கள். போலீஸிலும் இதுதொடர்பாக இதுவரை எந்தப் புகாரும் போகவில்லையாம். ரகசியமாக அவரை மடத்தினரே தேடி வருவதாக கூறப்படுகிறது.

அவர் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது சிலரால் சிறை வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது அவரே உயிருக்கோ அல்லது வேறு எதற்கோ பயந்து தலைமறைவாகியிருக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

வைஷ்ணவி தங்களது வீட்டுக்கு வரவில்லை என்றும் அவர் மடத்தில்தான் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனால் மடத்தில் அவர் இல்லை என்று கூறுகிறார்கள். வைஷ்ணவியிடம் சில ரகசியங்கள் இருக்கலாம் என்றும் அதை தெரிந்து கொண்டவர்களால் ஆபத்து ஏற்படும் என்று பயந்து அவர் தலைமறைவாகியிருக்கலாம் அல்லது அந்த ரகசியத்தை வைஷ்ண� �ி வெளிப்படுத்தி விடக் கூடாது என்பதற்காக சம்பந்தப்பட்டவர்கள் அவரை சிறை வைத்திருக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

திருஞானசம்பந்தர் உருவாக்கிய மடத்தில் இப்படியா அடுக்கடுக்கான சோதனைகள்...



comments | | Read More...

கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலை!




மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு கடந்த 13 நாட்களாக சிறை வைக்கப்பட்டிருந்த சட்டிஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான அலெக்ஸ் பால் மேனன் இன்று பிற்பகலுக்கு மேல் விடுவிக்கப்பட்டார். அவர் தற்போது வனப்பகுதியிலிருந்து வெளியே வந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர் சுக்மா நகருக்குச் செல்லவுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் ராய்ப்பூர் அழைத்துச் செல்லப்படுகிறார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலை பிபிசிக்கு மாவோயிஸ்டுகள் அளித்த அறிக்கையில், மே 3ம் தேதி கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை, தங்களுடன் சட்டிஸ்கர் மாநில அரசு சார்ப� �ல் பேச்சு நடத்திய இரண்டு தூதுவர்களிடமும் ஒப்படைக்கவிருப்பதாக தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து இன்று காலை அரசுத் தரப்புக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே தூதர்களாக செயல்பட்ட பி.டி.சர்மா மற்றும் பேராசிரியர் ஹர்கோபால் ஆகிய இருவரும் ஹெலிகாப்டர் மூலம் கிளம்பிச் சென்றனர்.சிந்தால்னார் என்ற இடத்திற்கு அவர ்கள் முதலில் சென்றனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் மூலம் டட்மெத்லா என்ற இடத்திற்குச் சென்றனர். இது மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியாகும்.

இங்குதான் கலெக்டரை அவர்கள் சிறை பிடித்து வைத்திருந்தனர். அங்கு சென்ற பின்னர் இரு தரப்பும் சந்தித்துக் கொண்டனர். அதன் பின்னர் பிற்பகலுக்கு மேல் கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை தூதர்களிடம் மாவோயிஸ்ட் தலைவர்கள் ஒப்படைத்தனர். அப்போது கிராமப் பழங்குடியின மக்கள் பெருமளவில் திரண்டிருந்தத ாக கூறப்படுகிறது.

இதையடுத்து கலெக்டருடன், அரசுத் தூதர்கள் வனப்பகுதியிலிருந்து வெளியேறினர். இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர்கள் சிஆர்பிஎப் முகாமுக்குச் செல்லவுள்ளனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சுக்மா மாவட்டத் தலைநகர் சுக்மாவுக்கு� �் செல்கின்றனர். பின்னர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூருக்கு அலெக்ஸ் அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு முதல்வர் ரமன் சிங்குடன் இணைந்து செய்தியாளர்கள் கூட்டத்தில் அலெக்ஸ் பங்கேற்பார் என்று தெரிகிறது.

ஏப்ரல் 21ம் தேதி அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்டார். 13 நாள் வனவாசத்திற்குப் பி்ன்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger