News Update :
Powered by Blogger.

திருமணம் ஆகாமல் கரீனாகபூர் கர்ப்பமா? இயக்குனர் விளக்கம்

Penulis : karthik on Thursday, 15 March 2012 | 00:21

Thursday, 15 March 2012

 
 
 
பிரபல இந்தி நடிகை கரீனாகபூர். இவர் நடிகர் சயீப் அலிகானை காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கரீனாகபூர் கர்ப்பமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
 
அந்த படங்களில் கரீனாகபூர் வயிறு கர்ப்பவாதிபோல் பெருத்து இருந்தது. திருமணத்துக்கு முன்பே கர்ப்பவாதியாகி விட்டார் என்று இந்தி திரையுலகம் கிசுகிசுத்தது.இதனை இந்திப்பட இயக்குனர் மதூர்பண்டார்கா மறுத்துள்ளனார்.
இவரது ஹீரோயின் படத்தில் கரீனா கபூர் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மதூர் பண்டார்கா கூறியதாவது:-
 
ஹீரோயின் படத்தில் கரீனாகபூர், மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பல நாயகிகள் நடிக்கின்றனர். நடிகைகளின் சொந்த வாழ்க்கையை இந்த படத்தில் சொல்கிறேன். இதில் கரீனாகபூர் கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார்.
 
படத்தை நான்தான் இன்டர்நெட்டில் வெளியிட்டேன். அதை பார்த்தவர்கள் கரீனாகபூர் நிஜமாகவே கர்ப்பமாக இருப்பதாக தவறாக புரிந்து கொண்டு விட்டனர். அவர் கர்ப்பமாக இல்லை.
 
இவ்வாறு அவர் கூறினார்.



comments | | Read More...

சுவிஸ் வலைஸ் மாநில குகை ஊடான பாதையில் பயணிகள் பஸ் விபத்து- 28பேர் பலி!

 

சுவிட்சர்லாந்து வலைஸ் மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 28பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 22பேர் சிறுவர்களாவர். இச்சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை இரவு 9.30மணியளவில் வலைஸ் மாநிலத்தின் இத்தாலி நாட்டு எல்லைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஏ9 அதிவேக பாதையிலேயே இந்த விபத்து இடம்பெற்றிருக்கிறது.

குகை ஊடான பாதை ஒன்றிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பெல்ஜியத்திலிருந்து இத்தாலிக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கி உள்ளனர். 52பேர் பயணம் செய்த இந்த பஸ்ஸில் 28பேர் பலியானதுடன் ஏனைய அனைவரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் இடம்பெற்று காயமடைந்தவர்கள் உலங்குவானூர்தி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர்.
குகைக்குள் இந்த விபத்து ஏற்பட்டதால் மீட்பு பணிகள் இன்று காலை வரை இடம்பெற்றது. தற்போது இப்பாதை போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் லவுசான், பேர்ன் பல்கலைக்கழக போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

comments | | Read More...

சாலை ஆத்திச்சூடி

Penulis : karthik on Tuesday, 13 March 2012 | 21:12

Tuesday, 13 March 2012

 
 
இந்தியாவில் மட்டும் ஒரே ஆண்டில் 1.30 இலட்சம் பேர் சாலைவிபத்தில் பலியாகியிருக்கின்றனராம்.

சாலையைக் கடக்கும்போது கண்ணில்பட்ட விழிப்புணர்வளிக்கும் ஆத்திச்சூடி ஒன்றை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

படிப்போம் கொஞ்சம் பின்பற்ற முயற்சிப்போம்...
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger