News Update :
Powered by Blogger.

சிரிப்பால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் - ஜனனி அய்யர்

Penulis : karthik on Monday, 5 March 2012 | 21:19

Monday, 5 March 2012

 


கோபத்தால் சாதிக்க முடியாததை சிரிப்பால் சாதிக்க முடியும் என்று நடிகை ஜனனி ஐயர் கூறியுள்ளார். பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஜனனி ஐயர். அந்த படத்தைத் தொடர்ந்து தற்போது அவர், அமீரின் மாணவர் அஸ்லாம் இயக்கும் "பாகன் படத்தில் நடித்து வருகிறார்.

எப்போது சிரித்த முகத்துடன் இருக்கும் ஜனனி, அந்த சிரிப்பிற்கான காரணத்தை பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். கோபத்தால் சாதிக்க முடியாததை, புன்னகையால் சாதிக்க முடியும் என நான் நம்புகிறேன். நம்ம குணம் எப்படிப்பட்டது என்பதை சொல்ற விசிட்டிங் கார்டே இந்தப் புன்னைகைதான். சினிமாவில் ஜெயிக்க இந்த விசிட்டிங் கார்டு எப்பவும் என் இதழ்களில் இருந்துக் கொண்டே இருக்கும், என்று கூறியிருக்கிறார் ஜனனி.

டைரக்டர் பாலா குறித்து கூறுகையில், பாலாவை என் லைஃப்ல யாருடனும் ஒப்பிட முடியாது. பாலா சார் இப்ப கூப்பிட்டாலும் அதே நன்றியோடு பேசுகிறேன். என் வீடு, கமிட் ஆகிற படங்கள் என எல்லாவற்றையும் அவரிடம் சொல்றேன். பாகன் பட வாய்ப்பை முதலில் சொல்லி பகிர்ந்துக்கிட்ட நபர் பாலாதான், என்று கூறியுள்ளார்.
comments | | Read More...

கொடுமைடா சாமி ....ஐ.நா. கூட்டத்தில் பேசுகிறார் குஷ்பு!!

 
 
 
இளைய தலைமுறையினரின் ஆற்றல் குறித்து பேச, ஐ.நா. சபையின் அழைப்பை ‌ஏற்று கென்யாவிற்கு பயணம் செய்ய இருக்கிறார் நடிகை குஷ்பு. இதுகுறித்து குஷ்பு கூறியதாவது, நாட்டின் எதிர்காலமே அடுத்த தலைமுறையினரான இளைஞர்களின் கையில்தான் ஒப்படைக்கப்பட உள்ளது. 2013 இளைஞர்களின் தன்னிகரற்றத் திறமையை வெளிக்கொணர வேண்டும். அதற்கான சிறப்புக்கூட்டம் ஐ.நா. சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்ளவும், இளைஞர்களைப் பற்றியும், இளைய தலைமுறையினர் பற்றியும் சிறப்பு‌ரையாற்ற அழைப்பு விடுத்திருந்தனர்.
 
2013ல் இளைய தலைமுறையினரின் 70 சதவீத ஆற்றலை நாட்டின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் உபயோகிப்பது என்பது பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேச வாய்ப்பளித்தமைக்கு ஐ.நா. சபைக்கு தமிழர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் தினமும் 20 டாலருக்கு குறைவாக வருமானம் உள்ள அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்த, இளைஞர்களை எத்தகைய முயற்சியில் ஈடுபட வைக்க வேண்டும் என்று பேச போகிறேன். அதற்கான கூட்டம் மார்ச் 15ம் முதல் 18ம் தேதி வரை ஐ.நா. சபை சார்பில், கென்யாவில் உள்ள நைரோபியில் நடைபெற இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக கென்யாவுக்கு கிளம்புகிறேன்.
 
இன்றைய உலகின் ஒவ்வொருவரின் வெற்றியிலும் இளையதலைமுறையினரின் பங்கு அதிகம் இருக்கிறது. அது தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற கருத்தை பிரதிபலிப்பேன் என்று கூறியுள்ளார்.



comments | | Read More...

சீமான் நடிக்கும் மாறுபட்ட கதைக்களத்தைக்கொண்ட புலனாய்வு படம்


தமிழ் சினிமாவில் எத்தனையோ புலனாய்வுப் படங்கள் வந்திருந்தாலும் ஒரு யதார்த்தமான அதே நேரம் புலனாய்வு அதிகாரிகளின் புலனாய்வுத் தந்திரங்கள், அதற்காக அவர்கள் மெனக்கெடுதல்கள் என புதிதாகச் சொல்லும் படமாக KPKP இருக்கும்.

சீமான், முரளி, ஐஸ்வர்யா தேவன் நடிக்கும் படம் கண்டுபிடி கண்டுபிடி.முரளி- ஐஸ்வர்யா தேவன் இருவருக்கும் நடக்கும் திருமணத்தை அடுத்த ஏற்படும் திகில் நிறைந்த புதிர்கள் அதனை சிபிசிஐடி யாக வரும் சீமான் புலனாய்வு செய்வது தான் படத்தின் விறு விறுப்பான திரைக்கதை.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger