News Update :
Powered by Blogger.

தனுஷ் மீது 'கொலவெறி...'யில் சிம்பு!

Penulis : karthik on Tuesday, 3 January 2012 | 09:04

Tuesday, 3 January 2012

 
 
தனுஷ் பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாட்டுக்கு படத்தில் அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ... அந்த முதல் வரிக்கு அர்த்தம் கொடுத்துவிட்டார் போட்டி நடிகரான சிம்பு. குறிப்பாக கொலவெறி பாட்டு தாறுமாறாக ஹிட்டாகி உலகப் பாடலாகிவிட்டதைக் கண்டு வெந்து வெதும்பிப் போயிருக்கின்றனர்.
 
அதுவும் இந்திய - ஜப்பானிய பிரதமர்களுடன் விருந்து சாப்பிடும் அளவுக்கு தனுஷ் சிகரத்துக்குப் போய்விட்டதை சிம்பு போன்றவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்துவிட்டது.
 
அதற்கு போட்டியாக ஒரு பாட்டை உருவாக்கினால்தான் ஆச்சு என்று கூறிக் கொண்டு ஒரு வீடியோவை வெளியிடும் முயற்சியில் உள்ளார் சிம்பு.
 
அவர் கொலவெறி என்று பாடிவிட்டார் அல்லவா... இதோ நான் காதல் பாட்டு பாடுகிறேன் என்று கூறிக்கொண்டு, காதல் என்ற ஒரே வார்த்தையை, பலமொழிகளில் எழுதி பாட்டு என்ற பெயரில் படுத்தியிருக்கிறார்.
 
இந்தப் பாட்டை பிரபலமாக்க அவரும் படாத பாடுபட்டு வருகிறார். ஃபேஸ்புக்கை திறந்தால், ஒரே நாளில் நான்கைந்து முறை இந்தப் பாடலின் லிங்கைப் போட்டு வைத்திருக்கிறார்கள்.
 
யுட்யூபிலோ சோனிமியூசிக் மூலம் காசு கொடுத்து புரமோட் செய்து வருகிறார்கள் (Promoted video).
 
இதுகுறித்து திரையுலகில் இளம் நடிகர்கள் இருவரிடம் கருத்துகேட்டோம். பெயரைச் சொல்ல விரும்பாத அவர்கள் கூறுகையில், "சினிமாவில் போட்டி சகஜம். அதைவிட சகஜம் பொறாமை. அதன் விளைவுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. வெறும் போட்டியாக இருந்தால் ரசிக்கும்படி இருக்கும். முன்பெல்லாம் ரஜினி - கமல், பாக்யராஜ் - ராஜேந்தர் மாதிரி. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள பொறாமை முயற்சிகள் சகிக்கவில்லை. தனுஷ் தன் படத்துக்காக ஒரு பாட்டை எழுதிப் பாடினார். காட்சியின் சூழலுக்கு தேவைப்பட்ட பாட்டு அது. அந்தப் பாட்டு ஹிட்டானதும் அதை சூப்பர் ஹிட்டாக்கும் முயற்சியில் இறங்கியதால், உலகப் புகழ் பெற்றது. இதை தாங்க முடியாமல், இந்த காதல் பாட்டு உருவாகியுள்ளது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்தப் பாடலுக்கு அவசியமிருக்கிறதா என்பதுதான் கேள்வி!," என்றனர்.
 
முடிஞ்சா இதை நேரிலும் சொல்லுங்கப்பா!



comments | | Read More...

தமிழர்களை பிளவுபடுத்த சதி: கருணா ரகசியமாக கனடா பயணம்

 
 


விடுதலைப்புலிகள் அமைப்பில் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரன். சிங்களர்கள் கொடுத்த பணத்துக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு இவர் விடுதலைப்புலிகள் அமைப்பை பிளவுபடுத்தி ஈழத்தமிழர்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை செய்தார். துரோகத்துக்கு பரிசாக இவருக்கு ராஜபக்சே மந்திரி பதவி கொடுத்தார்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்த போது, சிங்கள படைகளுக்கு உதவியாக இருந்தார். தற்போது அவரை தங்களது சதி செயல்களுக்கு ராஜபக்சே பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் ஈழத் தமிழர்கள் ஒன்றுப்பட்டு நாடு கடந்த தமிழீழத்தை உருவாக்கியுள்ளனர். அதை உடைக்கும் குள்ளநரி வேலையில் ராஜபக்சே ஈடுபட்டுள்ளார்.இதற்கு அவர் தமிழர்களுக்கு துரோகம் செய்த கருணாவை பயன்படுத்துகிறார்.

ஈழத் தமிழர்கள் மிக அதிக அளவில் கனடாவில் வசித்து வருகிறார்கள். கனடா நாட்டு அரசும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள ராஜபக்சே, தற்போது கருணாவை கனடாவுக்கு அனுப்பியுள்ளார்.

ராஜபக்சேயின் ஆலோசகருடன் மிக, மிக ரகசியமாக கருணா கனடா சென்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கனடா அரசாங்கத்திடம், வடக்கு-கிழக்கு பகுதியில் உள்ள தமிழர்கள் இணைந்து வாழ்வது சாத்தியம் அல்ல என்பதை வலியுறுத்த கருணா அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உலக அளவில் ஈழத் தமிழர்களிடம் பெரும் பிளவை உண்டாக்கும் வகையில் கருணாவை முன் நிறுத்தி இந்த சதி நடப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு கருணா பல தடவை அனுமதி கேட்டும், கனடா அவரை தன் நாட்டுக்குள் வர அனுமதிக்கவில்லை. இதனால் ராஜபக்சே சில நாடுகள் துணையுடன் கனடாவுக்கு நெருக்குதல் கொடுத்து கனடாவில் கருணாவுக்கு அனுமதி பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. கருணா மேலும் மேலும் துரோக செயலில் ஈடுபடுவது, சர்வதேச ஈழத் தமிழர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



comments | | Read More...

நார்வே தமிழ்த் திரைப்பட விழா 2012

 

சர்வதேச அளவில் தமிழ்த் திரைப்படங்களுக்காக நடத்தப்படும் நார்வே தமிழ்த் திரைப்பட விழா, நார்வே தலைநகரான ஆஸ்லோவில் வரும் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி தொடங்குகிறது.

ஏப்ரல் 25 முதல் 29-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஐந்து நாள் திரைப்பட விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான திரைப்படங்கள் கலந்துகொள்ளும். அவற்றில் 15 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழர் விருது வழங்கப்படும்.

தமிழ் மொழி, கலை, கலாசாரம் ஆகியவற்றை அடையாளப்படுத்தும் படங்கள், தமிழ்ச் சமூகத்தை நல்வழிப்படுத்தும் கருத்துகளை உள்ளடக்கிய படங்கள், தமிழ் வரலாறு சார்ந்த படங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

திரைப்படங்களின் கால அளவு மூன்று மணி நேரத்துக்குள்பட்டதாக இருக்க வேண்டும். போட்டியில் கலந்துகொள்ளும் படங்கள் 01.01.2011 முதல் 31.12.2011 தேதிக்கு முன் வெளியிடப்பட்டதாக இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் அனைத்துப் படங்களும் ஆங்கில சப் டைட்டில்களுடன் இருக்க வேண்டும்.

அதே போல போட்டியில் பங்கேற்க விரும்பும் குறும்படங்கள் 25 நிமிடங்களுக்குள்பட்டதாகவும் இதுவரை வேறு எங்கும் வெளியிடப்படாததாகவும் இருக்க வேண்டும்.

மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களும் வேற்று மொழியில் இருந்து தழுவி எடுக்கப்பட்ட படங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தங்களுடைய திரைப்படங்கள் அல்லது குறும்படங்களின் இரண்டு டி.வி.டி.க்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

படங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.02.2012.

அனுப்ப வேண்டிய முகவரி NORWAY TAMIL FILM FESTIVAL, Tante Ulrikkes Vei 11, 0984 Oslo 9, NORWAY. மேலும் தகவல்களுக்கு 00 47 913 70 728 என்ற தொலைபேசி எண்ணையும் www.ntff.no என்ற இணையதளத்தையும் அணுகலாம்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger