News Update :
Powered by Blogger.

இயக்குநர் சரணை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!!

Penulis : karthik on Thursday, 29 December 2011 | 08:20

Thursday, 29 December 2011

 
 
ரூ 6 லட்சம் பணத்துக்காக கொடுத்த காசோலைகள் பணமின்றி திரும்பிய வழக்கில் பிரபல இயக்குநர் சரணை கைது செய்ய சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான மோகன், ஜார்ஜ் டவுன் 7-வது கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "பால கிருஷ்ணன் என்ற ஆடிட்டர் மூலமாக சினிமா தயாரிப்பாளரும், இயக்குநருமான சரண் எனக்கு அறிமுகமானார்.
 
சில வழக்குகள் சம்பந்தமாக என்னுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டனர். அவர் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்காக நான் வாதாடியுள்ளேன். இதற்காக அவர் எனக்கு ரூ.6 லட்சம் பணம் தர வேண்டியுள்ளது. இந்த பணத்தை பலமுறை நான் திருப்பிக் கேட்டும் அவர் தரவில்லை.
 
இதற்காக அவர் கொடுத்த செக்குகளும் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டன. எனவே அவர் மீது செக் மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கோரியிருந்தார்.
 
இந்த வழக்கு விசாரணை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் நடந்து வருகிறது. 3 முறை சரண் சார்பில் அவரது வக்கீல் கோர்ட்டில் ஆஜராகி அவகாசம் கேட்டார். ஆனால் சரண் ஆஜராகவில்லை.
 
இதையடுத்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சரணுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
 
வளசரவாக்கம் போலீசார் சரணை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 3-ந்தேதி மீண்டும் விசார ணைக்கு வருகிறது. இதையடுத்து சரண் எந்த நேரத்திலும் நீதிமன்றத்தில் சரணடையக்கூடும் எனத் தெரிகிறது.



comments | | Read More...

ரூ.100 கோடிக்கு வீட்டை இன்சூரன்ஸ் செய்த சச்சின்

 
 
 
இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், மும்பையில் தான் புதிதாகக் கட்டி குடியேறியுள்ள வீட்டிற்கு ரூ.100 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார்.
 
கிரிக்கெட் உலகில் முன்னணி வீரராக திகழ்பவர் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்து அசத்தி வரும் இவர் பல நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றி, மாதந்தோறும் பல கோடி ரூபாய்களை சம்பாதித்து வருகின்றார்.
 
இந்த நிலையில் சச்சின் மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள பெரிகிராஸ் சாலையில் 5 மாடிகளை கொண்ட வீட்டை கட்டினார். இந்த வீட்டின் மதிப்பு ரூ.80 கோடி ஆகும். அடித்தளத்தில் கார் பார்க்கிங், வீட்டு பணியாளர்களுக்கு அறை, நீச்சல் குளம் உள்ளிட்ட பல வசதிகளுடன் செய்யப்பட்டுள்ள இந்த வீட்டில், சச்சின் கடந்த செப்டம்பர் மாதம் குடியேறினார்.
 
இந்த வீட்டை சச்சின் ரூ. 100 கோடி அளவுக்கு இன்சூர் செய்துள்ளார். 2 பாலிசிகள் மூலம் அதை இன்சூரன்ஸ் செய்துள்ளார். முதல் இன்சூரன்ஸ் பாலிசி ரூ.75 கோடிக்கு செய்யப்பட்டு உள்ளது. இந்த பாலிசி தீ விபத்து, தீவிரவாத செயல்கள், இயற்கை பேரழிவு, குண்டு வெடிப்பு உள்ளிட்ட சேதஙகளை உள்ளடக்கியது.
 
முதல் பாலிசி மூலம் சச்சினின் வீடு, வீடு அமைந்து உள்ள நிலம், சுற்றுச் சுவர், மின் சாதனங்கள், பாதுகாப்பு சாதனங்கள், தண்ணீர் ஆதாரம் உள்ளிட்டவற்றையும் உள்ளடங்கியுள்ளதாம்.
 
2வதாக ரூ.25 கோடிக்கு எடுக்கப்பட்டு உள்ள இன்சூரன்ஸ் பாலிசி மூலம் சச்சின் வீட்டில் வைக்கப்பட்டு உள்ள கிரிக்கெட் சாதனங்கள், சுவர் படங்கள், கடிகாரங்கள், மர சாமான்கள், மின்சக்தி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளது.
 
இந்த 2 பாலிசிகளையும் சேர்த்து மொத்தம் ரூ.100 கோடிக்கு சச்சின் தனது வீட்டை இன்சூரன்ஸ் செய்து உள்ளார். இந்த இன்சூரன்ஸ் பாலிசிகளுக்காக சச்சின் ஆண்டுத்தோறும் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் தொகையை பிரீமியமாக செலுத்த வேண்டும் என்று தெரிகிறது.
 
பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி தனது வீட்டை ரூ.150 கோடிக்கும், நடிகர் ஷாருக்கான் தனது வீட்டை ரூ.110 கோடிக்கும், நடிகர் அமிதாப்பச்சன் தனது வீட்டை ரூ.100 கோடிக்கும் இன்சூரன்ஸ் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

ரஜினியை விட காங்கிரசாரிடம் தான் அதிக கறுப்பு பணம் உள்ளது- இல. கணேசன்

 
 
 
இந்தியாவிலேயே காங்கிரஸ் கட்சியினர்தான் அதிக கறுப்பு பணம் வைத்திருக்கின்றனர் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.
 
ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம் கறுப்பு பணத்தால் கட்டப்பட்டது என்று ஈவிகேஸ் இளங்கோவன் தெரிவித்த கருத்துக்கு அவர் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
 
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பவர்களுக்காக ரஜினிகாந்த் தனது திருமண மண்டபத்தை இலவசமாக அளித்திருந்தார். இது கருத்து தெரிவித்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்,
 
'அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருந்து வரும் ராகவேந்திரா திருமண மண்டபம் கறுப்பு பணத்தால் கட்டப்பட்டது'' என கூறியிருந்தார். அவரது கருத்துக்கு பதிலடி தரும் வகையில் தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பேசியுள்ளார்.
 
புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் அவர் இதுகுறித்துக் கூறுகையில்,
 
ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்துக்கு இலவசமாக மண்டபம் வழங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த் தான் நிறைய கறுப்புப் பணம் வைத்துள்ளார் என, காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது பற்றி, ரஜினிகாந்த் தான் முடிவெடுக்க வேண்டும்.
 
காங்கிசாரிடம் அதிக கருப்பு பணம்
 
அதேசமயம், இளங்கோவன் இருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சி தான், மத்தியில் ஆட்சி நடத்துகிறது.
 
கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, "அவர் வைத்திருக்கிறார், இவர் வைத்திருக்கிறார்' என, இளங்கோவன் புலம்புவது ஏன்? காரணம், காங்கிரஸ்காரர்கள் தான், நாட்டிலேயே அதிக கறுப்புப் பணம் வைத்துள்ளனர். அதனால் தான், தங்களிடம் முதலீடு செய்திருப்போரின் பட்டியலை வெளியிட சுவிஸ் வங்கிகளே தயாராக உள்ளபோதும், காங்கிரஸ் அரசு தயங்குகிறது என்றார் அவர்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger