News Update :
Powered by Blogger.

ஒட்டு போட்ட மக்களுக்கு ஜெயலலிதா தரும் பரிசு பேருந்து கட்டணம்,பால் விலை உயர்ந்தது, மின்கட்டணமும் உயர்த்த முடிவு

Penulis : karthik on Friday, 18 November 2011 | 01:57

Friday, 18 November 2011

 
 
 
தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துமாறு மின்சார ஒழுங்குமுறை வாரியத்திற்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
 
இன்று ஒரே நாளில் பால் விலை, பேருந்துக் கட்டண விலை உயர்வுகளை அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, மின் கட்டணத்தையும் உயர்த்த பரிந்துரை செய்துள்ளார்.
 
கட்டண உயர்வு எவ்வளவு என்பது விரைவில் தெரியவரும்.
 
இது குறித்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், மின் துறையை ப‌ொறுத்த வரை தமிழக அரசு வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கிட ரூ. 550 கோடி ஒதுக்கியது. இன்னும் நிதி ஒதுக்கும் நிலையில் தமிழகத்திற்கு சிரமம் ஏற்படும்.
 
இதனால் மின்சாரம் கட்டணத்தை விரைந்து உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விவசாயிகளுக்கும், நெசவாளருக்கும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.



comments | | Read More...

ஆவின் பால் விலை உயர்வு - இரண்டாவது விலை உயர்வை ஜெயலலிதா அறிவித்தார்

 
 
 
தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஜெயலலிதா பொதுமக்களுக்கு வெளியிட்ட விலை உயர்வு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 6.25 உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 1 லிட்டர் ரூ.17.75-க்கு விற்கப்பட்ட ஆவின் பால் இனி 24 ரூபாயாக விற்கப்படும்.
 
மேலும் உற்பத்தியாளர்களுக்கு தரும் பால் கொள்முதல் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. பசும்பால் கொள்முதல் கட்டணம் 1 லிட்டருக்கு ரூ.18-லிருந்து ரூ.20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எருமைப்பால் கொள்முதல் கட்டணம் 1 லிட்டருக்கு ரூ.26-லிருந்து ரூ.28-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 


comments | | Read More...

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு : ஜெயலலிதா அறிவிப்பு

 
 
 
தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக இன்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
அதன்படி சென்னை நகர பேருந்துகளில் 1 கிலோ மீட்டருக்கு 28 பைசாவிலிருந்து 42 பைசாவாக உயர்த்தியுள்ளது.
 
வெளியூர்களுக்கு செல்லும் புறநகர் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 32 பைசாவிலிருந்து 56 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
வெளியூர்களுக்கு செல்லும் சொகுசு பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 38 பைசாவிலிருந்து 60 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 52 பைசாவிலிருந்து 70 பைசவாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
மேலும் சென்னை தவிர பிற மாவட்டங்களில் குறைந்தபட்ச, அதிகபட்ச பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
 
குறைந்தபட்ச பேருந்து கட்டணங்கள் ரூ. 2 லிருந்து 3 ரூபாயாக அதிகரிக்கப்படுள்ளது. அதிகபட்ச பேருந்து கட்டணம் ரூ.7 லிருந்து 12 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger