News Update :
Powered by Blogger.

'கடிதம் மூலம் வருத்தம்'... சரணுடன் நடிகை சோனா 'சமரசம்'!

Penulis : karthik on Wednesday, 28 September 2011 | 00:08

Wednesday, 28 September 2011

 
 
எஸ்.பி.பி.சரண் கடிதம் மூலம் வருத்தம் தெரிவித்ததால் அவருடன் நான் சமரசம் செய்து கொண்டேன் என்று நடிகை சோனா கூறினார்.
 
நடிகர் வைபவ் வீட்டில் நடந்த மது விருந்துக்கு நடிகை சோனா சென்றபோது அவரிடம் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் பாலியல் பலாத்காரத்துக்கு முயன்றதாக புகார் செய்தார்.
 
சரண் 10 நாட்களுக்குள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் என் சாவுக்கு அவர்தான் காரணமாக இருப்பார் என்று சோனா கூறியிருந்தார்.
 
அத்துடன் எஸ்.பி.பி.சரண் மீது சென்னை பாண்டிபஜார் போலீசிலும் புகார் செய்தார்.
 
இந்த புகார் தொடர்பாக தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக எஸ்.பி.பி.சரண் கோர்ட்டில் முன்ஜாமீனுக்கு மனு செய்தார்.
 
மேலும் தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி, போலீஸ் மூலம் சோனாவை மிரட்டியதாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் சோனா-எஸ்.பி.பி.சரண் விவகாரம் நேற்று முடிவுக்கு வந்தது. எஸ்.பி.பி.சரண் வருத்தம் தெரிவித்து கடிதம் மூலம் என்னிடம் மன்னிப்பு கேட்டதால் நான் அவருடன் சமரசம் செய்து கொண்டேன் என்று சோனா கூறினார்.
 
ஆனால் இதுபற்றி சரண் வெளிப்படையாக எதுவுமே கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
நிர்ப்பந்தம்?
 
சோனா தன் வழக்கை வாபஸ் பெற முக்கிய காரணம், அவருக்கு திரையுலக மற்றும் அரசியல் புள்ளிகளிடமிருந்து வந்த நெருக்கடிகள்தான் என்று கூறப்படுகிறது.
 
சரணுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யாமல் சோனா அமைதியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உள்ளே தூக்கிப் போட்டுவிடுவோம் என போலீசாரே சோனாவை மிரட்டியது நினைவிருக்கலாம். இதைத் தொடர்ந்து, திரையுலக முக்கிய பிரமுகர்கள், நடிகர் சங்க நிர்வாகிகள் சிலர் கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக சோனா இந்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டாராம்.



comments | | Read More...

எங்களால் இப்போது என்ன செய்ய முடியும்?- விஜயகாந்த் கேள்வி

 
 
இப்போது எங்களால் என்ன செய்யமுடியும்? தமிழகத்தின் முன்னேற்றம் மற்றும் திமுக-வை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-வுடன் நாங்கள் கூட்டணி வைத்தோம். நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக ஆளுங் கட்சிக்குத்தான் ஓட்டளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தேமுதிக-வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
 
அதிமுகவால் தூக்கி எறியப்பட்டு விட்ட தேமுதிக, வேறு வழியில்லாமல் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. தற்போது சிபிஎம்முடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுகிறது. கூட்டணி அரசியலுக்குப் புகுந்த குறுகிய காலத்திலேயே இன்னொரு கூட்டணியில் அந்த கட்சி இணைந்துள்ளது.
 
இந்த நிலையில், சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்த பிராசரக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
 
உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து தேமுதிக போட்டியிடுகிறது. இப்போது மற்றொரு கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புகிறது. ஆனால், இப்போது எங்களால் என்ன செய்யமுடியும்? தமிழகத்தின் முன்னேற்றம் மற்றும் திமுக-வை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-வுடன் நாங்கள் கூட்டணி வைத்தோம்.
 
நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக ஆளுங் கட்சிக்குத்தான் ஓட்டளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தேமுதிக-வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். யாருக்கும் பயப்பட மாட்டேன். தவறு நடந்தால் தட்டிக் கேட்பேன்.
 
தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்ல பல திட்டங்களை தேமுதிக வைத்துள்ளது. ஆட்சி அதிகாரம் இருந்தால்தான், இத்திட்டங்களை செயல்படுத்த முடியும். எனவே, தேமுதிக-வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.



comments | | Read More...

மாஜி அமைச்சர் கே.என்.நேருவுக்கு இதுதான் கடைசி தேர்தல்: அமைச்சர் வைத்தியலிங்கம்

 
 
 
தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேருவுக்கு இது கடைசி தேர்தலாக இருக்கலாம். அவரது அரசியல் சாம்ராஜ்ஜியத்திற்கு சமாதி கட்ட வேண்டும் எனறு அமைச்சர் வைத்தியலிங்கம் பேசினார்.
 
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.சார்பில் வழக்கறிஞர் சார்பில் பரஞ்சோதியும், தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.செயல்வீரர் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ரோஷன் மஹாலில் நடந்தது.
 
இந்த கூட்டத்திற்கு அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க வேட்பாளர் பரஞ்சோதியை ஆதரித்து அமைச்சர் வைத்தியலிங்கம் பேசியதாவது, கடந்த தி.மு.க.ஆட்சியின் போது தி.மு.க.வினர் திருமங்கலம் பார்முலாவை கடைபிடித்தனர். நாம் ஜெயலலிதா பார்முலாவை பின்பற்றினாலே இந்த தேர்தலில் இமாலய வெற்றி பெற முடியும்.
 
ஜெயலலிதா பார்முலா என்றால் கடந்த 4 மாத தமிழக அரசு அறிவித்த மக்கள் நலத்திட்டங்கள், மிக்ஸி, கிரைண்டர், பேன், தங்கத்தாலி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இவைகளை எல்லாம் மக்கள் இடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
 
இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் கே.என்.நேரு, கடந்த 5 ஆண்டில் செய்த ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகம், கோடிக்கணக்கில் சுருட்டிய சொத்துகள், அவரது குடும்பத்தினர் சேர்த்த சொத்துக்கள், கட்டப்பஞ்சாயத்து மூலம் நிலங்கள், கட்டிடங்கள் வாங்கி குவித்தது, உள்ளிட்டவை குறித்து வாக்காளர்களுக்கு தெரிவித்தலே அ.தி.மு.க.வின் வெற்றி உறுதியாகிவிடும்.
 
இந்த தேர்தலை பொறுத்தவரை கே.என். நேருவுக்கு இது கடைசி தேர்தலாக இருக்க வேண்டும். அவரது அரசியல் சாம்ராஜ்ஜியத்திற்கு இதோடு சமாதி கட்ட வேண்டும். இனி அவர் காலம் முழுவதும் ஜெயிலிலேயே இருக்க வேண்டிய அத்தியாயத்தை திருச்சி மக்கள் உருவாக்கி தரும் வகையில் பாடம் புகட்ட வேண்டும், என்றார்.
 
இந்த கூட்டத்தில், செல்லூர் ராஜூ, உதயகுமார், கோகுலஇந்திரா, வேட்பாளர் பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger