Saturday, 14 January 2012

போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடிகள் தஞ்சம்

உடுமலை நகர போலீஸ் ஸ்டேஷனில் நேற்று நகரப்பகுதியைசேர்ந்த இரண்டு காதல்
ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். நேற்று காலை உடுமலை தனியார்
கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பிரியங்கா (21); ராமசாமி நகரை
சேர்ந்தவர். இதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (23) தனியார்நிறுவனத்தில்
பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாககாதலித்து வந்த இருவரும் நேற்று
முன்தினம் திருமணம் செய்து கொண்டனர். காதல் ஜோடிகள்நேற்று பாதுகாப்பு
கேட்டு உடுமலை போலீசில் மனு அளித்தனர்.இருவரின் பெற்றோருக்கும் போலீசார்
தகவல் அளித்து கவுன்சிலிங் நடத்தினர்.
இதே போல், உடுமலை கோமதி நகரை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2
வகுப்பில் படிக்கும் மாணவி, கங்காதரன் லே-அவுட்டில் வசிக்கும் மினி ஆட்டோ
டிரைவர் லோகநாதன் (26) இந்த ஜோடியும் திருமணம் முடித்து ஸ்டேஷனில்
தஞ்சமடைந்தனர்.
இதில், மாணவியின் வயது குறித்த சர்ச்சையால் போலீசார் பல மணி நேர
பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில், பெற்றோருடன் செல்ல இருவரும்
மறுத்ததால் அவர்களை மாலை 5.00 மணிக்கு மேல் போலீசார் திருப்பி
அனுப்பினர்.

No comments:

Post a Comment