Saturday, 14 January 2012

ஏரல் அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம் : போலீசார் விசாரணை

ஏரல் அருகே வண்ணியநல்லூரில் கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார்
தேடி வருகின்றனர்.
ஏரல் அருகேயுள்ள வண்ணியநல்லூர்நடுத்தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ்(27).
இவருக்கு திருமணம்மாகி சுதாஜெபகனி(23) என்ற மனைவியும் இரண்டரை வயதில் ஆண்
குழந்தையும் உள்ளது. இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று அந்தோணிராஜ் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது
மனைவி மற்றும் குழந்தை வீட்டில் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார். அவர்களை
பல இடங்களில் தேடியும் இதுவரை எந்த தகவலும் இல்லை. இதனால் அந்தோணிராஜ்
ஏரல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பால்ஐசக் வழக்குப்பதிவு
செய்து காணாமல் போன இளம்பெண் மற்றும் கைக்குழந்தையை தேடி வருகிறார்.

No comments:

Post a Comment