Thursday, 22 December 2011

ராஜாவின் முன்னாள் உதவி செயலர் தமக்கு கொலை மிரட்டல்

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சாட்சியம் அளித்து வரும் மாஜி அமைச்சர் ராஜாவின் முன்னாள் உதவி செயலர் தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது என இன்று கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.,சைனி முன்பாக தெரிவித்தார். இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நபர் கோர்ட் அறையிலேயே இருந்தார். இதனையடுத்து தப்பி ஓட முயற்சித்த போது போலீசார் பிடித்து கோர்ட்டில் ஒப்படைந்தனர். தொடர்ந்து அவரிடம் முழு அளவில் விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டில்லி பாட்டியாலா சிறப்பு கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் சாட்சியமளித்தவர்களிடம் எதிர்தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜாவின் உதவிச்செயலர் ஆசீர்வாதம் ஆச்சாரியாவிடம் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. நேற்று கனிமொழி வக்கீல் ராம்ஜெத்மலானி குறுக்கு விசாரணை நடத்தினார். இன்றும் தொடர்ந்தது .விசாரிக்க மாட்டேன் என்று பல மாதங்களாக சொல்லிக்கொண்டிருந்த ராஜாவின் வக்கீல் சுனீல் குமார், இவரை குறுக்கு விசாரணை செய்யவுள்ளார். இந்நிலையில் ஆச்சாரியா கோர்ட்டில் கூறுகையில்
நான் கோர்ட்டில் அமர்ந்திருந்தபோது எனக்கு கொலை அடையாளம் தெரியாத ஒரு நபர் என்னை கொன்று விடுவதாக மிரட்டினார் என்றார். இதனால் பரபரப்பு நிலவியது. அந்த நபர் கோர்ட் வளாகத்திலேயே இருப்பதாக கூறினார். இதனையடுத்து போலீசார் ஒருவரை கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது. இவரிடம் யார், என்ன காரணம் என முழு அளவில் விசாரிக்க டில்லி போலீசாருக்கு நீதிபதி ஆணை பிறப்பித்தார். இந்த விவகாரத்தினால் இன்று கோர்ட் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.போலீஸ் விசாரணையில் அந்த நபர் பெயர் ஜெயப்பிரகாஷ் என்றும், அவர் ரிலையன்ஸ் அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கும் கிளார்க் என்றும் கூறப்படுகிறது. இவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment