Thursday, 24 October 2013

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு Mettur dam water open for Cauvery Delta Irrigation

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு Mettur dam water open for Cauvery Delta Irrigation

மேட்டூர், அக். 24–

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. தற்போது மழை இல்லாததால் அங்கு பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்து உள்ளது.

இதனால் மீண்டும் இன்று காலை 9 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 350 கன அடியாக இருந்தது. அணையின் நீர் மட்டம் 84.41 அடியாக உள்ளது.

...

shared via

No comments:

Post a Comment