'சகுனி' படத்தில் ராகுல் காந்தியை விமர்சித்து இருப்பதாக காங்கிரசார் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கார்த்தி, சந்தானம் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்து உள்ளனர்.ஈரோட்டில் 'சகுனி' படம் திரையிடப்பட்டுள்ள அபிராமி தியேட்டரில் ரசிகர்களை சந்திக்க வந்த கார்த்தியிடம் காங்கிரசார் எதிர்ப்பு பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து கார்த்தி கூறியத ாவது:-சகுனி படத்தில் அரசியல் உள்ளது. ஆனால் நான் அரசியல்வாதி கிடையாது. அந்த எண்ணமும் எனக்கு இல்லை. சகுனி படத்தில் ராகுல் காந்தியை நாங்கள் விமர்சிக்கவில்லை. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு கிடையாது.ராகுல் காந்தியின் குடும்பத்துக்கு நல்ல மரியாதை இருக்கிறது. கதைபடி அரசியல்வாதியாக நடித்துள்ளேன். அவ்வளவு தான். திருட்டு வி.சி.டியால் தயாரிப்பாளர்களுக்கும், தியேட்� ��ர் உரிமையாளர் களுக்கும் நஷ்டம் ஏற்படு கிறது. இப்போதும் 100 சதவீதம் திருட்டு வி.சி.டி. உள்ளது.தியேட்டருக்கு வந்து மக்கள் படம் பார்க்க ஆசைபடுகிறார்கள். ஆனால் ரூ.20-க்கு சுலபமாக திருட்டு வி.சி.டி கிடைத்தால் என்ன செய்வார்கள்? இதனை தடுக்க கடுமையான சட்ட திட்டங்களை அமல்படுத்த வேண்டும். திருட்டு வி.சி.டி. என்பது அடுத்தவன் சொத்தை அபகரிப்பதற்கு சமம். நடிகர்களுக்கு தகுதியை மீறிய சம்பளம் யாரும் தருவதில்லை.சகுனி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறுத்தை படத்தின் ஒட்டு மொத்த வசூலை சகுனி படம் 3 நாளில் முறியடித்து விட்டது. எனது படத்தை குழந்தைகள், பெண்கள் விரும்பி பார்க்கிறார்கள். இந்த படத்துக்கு இன்னும் அதிகமாக பெண்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.தற்போது நான் 'அலெக்ஸ் பாண்டியன்', 'பிரியாணி', 'ஆல் இன் ஆல் அழகுரா� ��ா' போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறேன். கமர்சியல் படத்தையும் தாண்டி பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் மாதிரியான கதைகள் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்.சூர்யாவுக்கு நான் எந்த விதத்திலும் போட்டி கிடையாது. அவர் பாணியும், என் பாணியும் வேறு வேறு.இவ்வாறு கார்த்தி கூறினார்.
விறுவிறுப்பு தமிழ்செய்திகள் | Latest Tamil News Online | Tamilnadu News | TamilNadu Politics Latest Tamil Movies Tamil Film news, Tamil Cinema Reviews, Hot Tamil Film Actress, Kollywood Film Actor Actress Specials.
Monday, 2 July 2012
சகுனியில் ராகுலை விமர்சிக்கவில்லை: நடிகர் கார்த்தி
திரிணாமுல் கட்சியின் நிலைகுறித்து ஜனாதிபதி தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும்: மம்தா
கொல்கத்தாவில் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் ஜனாதிபதி தேர்தலில் தங்களது நிலைகுறித்து ஆலோசனை கூட்டம் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கல் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு, ஜனாதிபதி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கலந்துகொள்ளுமா? என மம்தா பான ர்ஜியிடம் கேட்டபோது, இருக்கலாம். ஆனால், ஜனாதிபதி தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தலில் தங்களின் நிலை என்ன என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.,வரும் ஜூலை 19 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தனது கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை கொல்கத்தாவில் இருக்குமாறு மம்தா பானர� ��ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.திரிணாமுல் கட்சி நூற்றுக்குநூறு ஒழுங்கும் கட்டுப்பாடும் நிறைந்த கட்சி எனவும் ஒரு சிலர் குறை கூறுவது குறித்து கவலை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். திரிணாமுல் கட்சியின் எம்.பி.சோமன் மித்ராவும் அவரது மனைவியும் அக்கட்சியின் எம்.எல்.ஏ.யுமான சிக்ஹா மித்ரா இருவரும் தனது கட்சியின் தலைமை குறித்து முரண்பாடான கருத்துக்களை கூறிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழக மீனவர்கள் பத்து பேர் சிறை பிடிப்பு: இலங்கை இராணுவம் அட்டூழியம்
ராமேஸ்வரத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு 5 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கரை திரும்பாததால் குடும்பத்தினர் கவலையடைந்தனர்.இதனையடுத்து அவர்களை தேடி மற்றொரு விசைப்படகில் 5 மீனவர்கள் நேற்று மீன்துறை அனுமதி பெற்று கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் முதலில் சென்ற 5 மீனவர்களுடைய படகு பழுதானதால் நடுக்கடலில் தவித்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற ்படையினர் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.இதனிடையே இவர்களை தேடிச்சென்ற 5 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றுவிட்டனர். பிறகு அவர்களுடைய படகுகளை கைபற்றியதுடன் அவர்களை தலைமன்னார் சிறையில் அடைத்துள்ளனர்.இந்த 10 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் இன்று இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே தனுஷ்க ொடியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களையும் கடத்தல் காரர்கள் என்றும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தற்போது மொத்தம் 13 பேர் இலங்கை கடற்படை வசம் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
'பில்லா 2' இரண்டாவது டிரெய்லர் இன்று ரிலீஸானது
அஜித் குமாரின் நடிப்பில் ஆக்ஷன் திரில்லராக தயாராகி இருக்கும் பில்லா 2 படம் வரும் ஜூலை 13-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் இப்படத்தின் இரண்டாவது டிரெய்லரை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட ஏற்பாடுகள் நடந்தன. இந்த இரண்டாவது டிரெய்லரை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட ஏற்பாடுகளும் நடைபெற்றன. இந்த விழா இன்றைய தினம் சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் இந்த விழா நடக்க இருந்தது. இதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்க இருந்தார்கள். ஆனால் நிர்வாக பிரச்சினைகள் காரணமாக இந்த விழா தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பில்லா 2 படத்தின் தயாரிப்பாளரான சுனிர் கேடர்பால், இப்படத்தின் இரண்டாவது டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு ஆன்லைன் மூலம் வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறார். இந்த டிரெய்லர் தீம் மியூசிக்குடன், 105 வினாடிகள் ஓடக்கூடியதாக தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
அப்துல் கலாம் ஒரு போலி வேஷக்காரர்: பால் தாக்கரே கடும் தாக்கு
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதி வெளிவந்துள்ள 'டர்னிங் பாயிண்ட்ஸ்' என்ற புத்தகத்தில், 'கடந்த 2004-ம் ஆண்டு சோனியா காந்தியை பிரதமராக்குவதில் எனக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது அவரை பெரும் சர்ச்சைக்கு ஆளாக்கியுள்ளது. இதனை கண்டிக்கும் வகையில் சிவசேனா கட்சியின் தலைவ� ��் பால் தாக்கரே கூறியதாவது: இத்தாலிய நாட்டை சேர்ந்தவரான சோனியா காந்தியை இந்தியாவின் பிரதமராக்குவதில் ஆட்சேபனை இல்லை என கலாம் கூறியிருப்பது அவரை கேலிக்கு ஆளாக்கியுள்ளது. அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவர் மீது அனைவரும் மரியாதை வைத்திருந்தனர். அவரது பதவி காலம் முடிவடைந்தாலும் அவர்மீதான மதிப்பும் மரியாதையும் குறையாமல் இருந்தது. மேலும், கலாமின் அனுமதி கி� �ைக்காததால்தான் சோனியா பிரதமராகவில்லை என மக்கள் நினைத்திருந்தனர். ஆனால் அவரது புத்தகத்தில் இதுகுறித்து அவர் எழுதியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பத்து வருடங்களாக அவர் இதனை வெளியிடாதது அவர் சுயநலமிக்கவர் மற்றும் போலி வேஷக்காரர் என்பதை காட்டுகிறது என கூறியுள்ளார்.
ராவா சரக்கடிச்சு... சகட்டுமேனிக்கு கற்பை வேட்டையாடிய நித்தியானந்தா: ஆர்த்திராவ்
மது அருந்திவிட்டு கடவுளின் பெயரால் தமது கற்பை எப்படியெல்லாம் நித்தியானந்தா சூறையாடினார் என்று கர்நாடக போலீசிடம் அவர்து முன்னாள் சீடர் ஆர்த்திராவ் அதிரவைக்கும் வாக்குமூலத்தை அளித்துள்ளார். மொத்தம் 43 பக்கங்களைக் கொண்ட அந்த வாக்குமூலத்தில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள் என்பது குறித்து ஒரு வாரப் பத்திரிக்கையில் வந்துள்ள விவரம்: 2004-ம் ஆண்டு தொடக்கத்திலேயே நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சேர்ந்துவிட்டேன். சன்னியாசி வாழ்க்கையில் இருந்தபோது குடும்ப வாழ்க்கையின் மீது பிடிப்பு ஏற்பட்டது. அப்போது சென்னையில் கணவருடன் சிறிதுகாலம் இருந்தேன். நான் கர்ப்பமாகவும் இருந்தேன். அப்போது 2005-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பிடதி ஆசிரமத்துக்கு சென்று நித்தியானந்தாவை சந்தித்தேன். "குடும்ப வாழ்க்கை வாழ்கிறவர்களா� ��் ஜீவன் முக்தி அடைய முடியாது.. முதலில் கர்ப்பத்தை கலைத்துவிடு" என்று அவர் என்னிடம் கூறினார். கர்ப்பத்தைக் கலைப்பது குற்றம் இல்லையா என்ற கேள்விக்கும் கூட, "குழந்தை பிறப்பதற்கு சில மணித் துளிகளுக்கு முன்னர்தான் உடலோடு ஆன்மா இணைகிறது. அதனால் உடலைக் கொல்தல் பாவம் அன்று. ஆன்மாவைக் கொல்வதுதான் பாவம். நீ உடலைத்தானே கொல்லப் போகிறாய்" என்று கூறி கருவைக் கலைக்க வைத்தார். நானும் கணவரிடம் கரு கலைந்து போய்விட்டது என்று பொய் சொன்னேன். பின்னர் சேலத்துக்கு என்னை வருமாறு அழைத்தார். ஜெய்ராம் என்ற பக்தரின் வீட்டில் அவர் தங்கியிருந்தபோது அவரது செயலாளராக இருந்த ராகினி என்னை "பெர்சனல் சேவை செய்ய" போகுமாறு கூறினார். அப்போது என்னை இறுக்கமாக அவர் அணைத்து முத்தமிட்ட போது கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தேன். அதற்கு, இப்போது உன்னையும் ஜீவன் முக்தி அடையச் செய்யப் போகிறேன். அதற்காக நான் எப்படி வேண்டுமானலும் ந� ��ந்து கொள்வேன். நீ அதனை முழு சம்மதத்தோடு அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் ஜீவன் முக்தி அடைய இதுதான் ஒரே வழி. இது வேத காலம் தொட்டு கடைப்பிடிக்கும் வழக்கம்" என்று கூறி அனுபவித்தார். தேவி...தாசி... மேலும் "இப்போதுதான் நீ முழுமையான தேவியாக மாறி இருக்கிறாய். என்னிடம் இருக்கும் சிவன் சக்தி உன்னிடம் வந்திருக்கிறது. இனி நீ ஜீவன் முக்தி அடைவாய். நீ குருவுக்குச் செய்திருக்கும் இந்த மஹா சேவைக்கு நன்றி. இனி நீ தான் எந்தன் தேவி" என்று கூறினார்.இதேபோல் ஏற்காடு கிராண்ட் பேலஸ் ஹோட்டலில் தங்கியிருந்தபோதும் 'நான் ஆனந்தேஷ்வரன்... நீ ஆனந்தேஷ்வரி" என்று கூறி அனுபவித்தார். ராவா சரக்கு.... 2006-ம் ஆண்டில் பிடதி ஆசிரமத்தில் இருந்தபோது அவர் தனது காவி உடைகளுக்கு கீழே மதுபாட்டில் வைத்திருப்பதை எடுத்து வரச் சொன்னார். நான் எடுத்துக் கொடுத்ததுதான் மாயம்.. கடகடவென "ரா"வாகவே ஊற்றிய கையோடு என் வாயிலும் ராவாக ஊற்றிவிட்டார். ஆனால் கட்டாயப் படுத்தி வாயில் ஊற்றிவிட நான் மயங்கிப் போனேன். காலையில் எழுந்து பார்த்தபோது நிர்வாணமாகவே கிடந்தேன்.2006-ம் ஆண்டு வாரணாசிக்கு சென ்றபோது அவர் விஷ்வம் ஹோட்டலில் தங்கியிருந்தார். நாங்கள் ஹோட்டல் பிளாசாவில் தங்கினோம். நள்ளிரவு 2 மணிக்கு அழைத்து விருப்பம் இல்லாமலேயே அனுபவித்தார். வாரணசாமியில் "தாசி" பட்டம் கொடுத்து அதற்கு ஒரு விளக்கம் கூறி அனுபவித்தார். 2006-ம் ஆண்டு மே மாதம் லாஸ் ஏஞ்சல்ஸுக்குப் போனது ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட் போட்டுக் கொண்டு நைட் கிளப்புக்கு அழைத்துச் சென்று குத்தாட்டம் போட்டார். அங்கேயும் ஜீவன் முக்தி என்ற பெயரில் அனுபவித்தார். இதே கதைதான் அமெரிக்காவிலும் நடந்தது. கும்பமேளாவில் கும்மாளம் 2007 ஜனவரியில் அலகாபாத்தில் கும்பமேளா நடைபெற்ற போதும் கூட என்னை சும்மா இருக்கவிடவில்லை. புனிதமான இடத்தில் உடலுறவு கொள்வதால் சக்தி கிடைக்கும் என்று கூறி டெண்ட்டில் வைத்தே அனுபவித்தார். அமெரிக்காவுக்கு சென்ற போது நான் உடன்பட மறுத்த நாட்களில் ஒரு மனநோயாளி போல் சாடிஸ்டாக நடந்து கொண்டு அடித்திருக்கிறார். அமெரிக்க சீடரான விநய் பரத்வாஜையும் இப்படித்தான் கெடுத்திருப்பதை அறிந்து கொண்டேன். அதன் பின்னர்தான் லெனினுடன் சேர்ந்து நித்தியானந்தாவின் பெட்ரூமில் கேமராவை வைத்தோம் என்று ஆர்த்திராவ் கூறியுள்ளார்.
பிரணாப் ஜனாதிபதி ஆவாரா ! 'பிரணாப்'க்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் சட்ட சிக்கல்
குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய திருப்பமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியின் மனுவை ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வேட்பு மனு பரிசீலனை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் முடிந்து இன்று வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக, பிஜூ ஜனதாதளம் மற்றும் பாஜக ஆதரவு வேட்பாளரான சங்மா திடீரென ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதாவது மத்திய அரசின் இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு (Indian Statistical Institute) தலைவராக இன்னமும் பிரணாப் முகர்ஜிதான் பதவி வகித்து வருகிறார். குடியரசுத் தலைவர் தேர்தல் விதிமுறைகளின்படிப் பார்த்தால் பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு செல்லாது என்று ஒரு போடு போட்டார். இதைக் கேட்ட தேர்தல் அதிகாரியான மாநிலங்களவைச் செயலர் ஒரு கணம் ஷாக்கிப் போனார். வேறுவழியின்றி பிரணாப்பிடம் விளக்க ம் கேட்கிறோம் என்று கூறி வேட்பு மனு பரிசீலனையை நாளைக்கு ஒத்திவைத்துவிட்டனர். சுப்பிரமணியசாமி அதிரடி இதனிடையே டிவிட்டரில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி, "பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு நிராகரிக்கப்படும்? வேட்புமனு பரிசீலனை திடீரென நாளைக்கு ஒத்திவைப்பு...ரகசியமாக பல்வேறு அரசுப் பொறுப்புகளை வகித்து வருகிறார்" என்று தட்டிவிட்டிருக்கிறார். ஒருவேளை சங்மாவுக்கு போட்டுக் கொடுத்ததே சுப்பிரமணியசாமியாகவும் இருக்கலாம். அதே நேரத்தில் எப்படியும் தேர்தலில் அதிசயம் நிகழ்ந்து வெற்றி பெறுவேன் என்று சங்மா கூறிவந்தார். பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு நிராகரிக்கப்படும் நிலையில் சங்மாவின் ஆருடம் பலித்துவிடும்! நாட்டின் அரசியலில் பெரும்பரபரப்பும் ஏற்பட்டுவிடும்!