Saturday, 7 July 2012

பிரணாப்முகர்ஜிக்கு எதிராக மேலும் 2 புகார்கள்: தேர்தல் ஆணையரிடம் சுப்பிரமணியசாமி மனு


ஐக்கிய முற்போக்கு கூட்டணி  ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி,   ஆதாயம் தரும் பதவியான, இந்திய புள்ளியல் நிறுவன தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து அளிக்கப்பட்ட கடிதம் போலி என்ற  குற்றச்சாட்டு உள்ளது. 

அந்த கடிதத்தில் உள்ள பிரணாப் முகர்ஜியின் கையெழுத்து சர்ச்சையை ஏற்படுத் தி இருக்கிறது. இந்த சர்ச்சை ஓயாத நிலையில்,  பிரணாப்முகர்ஜிக்கு எதிராக புதிய குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. 

பிரணாப்முகர்ஜி, மேலும் 2 ஆதாயம் தரும் பதவிகளில் உள்ளார். அந்தப் பதவிகளை அவர் ராஜினாமா செய்ய வில்லை என்று புகார் கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர்  பி.ஏ. சங்மா சார்பாக  ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி உள்� �ட 3 பேர் கொண்ட குழு,  தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து  ஜனாதிபதி தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலர் மீது அதிருப்தி தெரிவித்து மனு அளித்தனர். 

மேலும், பிரணாப் முகர்ஜி ஆதாயம் தரும் 2 பதவிகளில் இன்னும் தொடர்வதாக இரண்டு தனித்தனி புகார் மனுக்களையும் அளித்தனர்.அந்த  மனுக்களில், ஜனாதிபதி வேட்பாளரான பிரணாப்முகர்ஜி, பிர்பும் என்ஜினீயரி� �்  மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி துணைத் தலைவரகாவும், ரவீந்திரநாத் பாரதி பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்ட  ரவீந்திர பாரதி சொசைட்டியின்  தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவை இரண்டும் ஆதாயம் தரும்  பதவிகள் ஆகும். 

இந்த பதவிகளை இன்னும் அவர் ராஜினாமா செய்ய வில்லை. இதன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கு றிப்பிடப்பட்டுள்ளது. 

இதுபற்றி, சுப்பிரமணிய சாமி கூறியதாவது:- 
பிரணாப் முகர்ஜி ஆதாயம் தரும் இரண்டு பதவிகளில் இருந்து வருகிறார்.  தேர்தல் நடத்தும் அதிகாரியின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. எனவே, தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து எங்களின் அதிருப்தியை தெரிவித்தோம். நாங்கள்  எ� �ுப்பியுள்ள பிரச்சினை மோசடி சம்பந்தப்பட்டது. அதாவது, மோசடி கையெழுத்து தொடர்பானது. வேட்பு மனுவில் மோசடி நடைபெற்றுள்ளதா? என்று தேர்தல் கமிஷன்  விசாரணை நடத்தி முடிவு செய்ய வேண்டும். நாங்கள் இப்போது அளித்துள்ள புதிய புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார். 

 

No comments:

Post a Comment