Saturday, 30 June 2012

சீனாவில் கடும் நிலநடுக்கம்: 24 பேர் படுகாயம்

சீனாவின் வடமேற்கில் அமைந்துள்ள சிஞ்சியாங் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. சிஞ்சியாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் உரும்கியில் காலை ஐந்து மணிக்கு ஏற்ப்பட்ட இந்த நிலநடுக்கம்  6 .6 ரிக்டர் அளவில் என பதிவானது.  இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் தூங்கிகொண்டிருந்தவர்கள் மீது வீடுகள் சரிந்து விழுந்� �தில் 24 பேர் படுகாயமடைந்தனர். பெரும்பான்மையான வீடுகள் சேதமடைந்து விழுந்ததில் நிறைய கால்நடைகள் இறந்துபோயின. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து கடுமையான பாதிப்புக்குள்ளானது.இந்த நிலநடுக்கம் மையம் கடல் மட்டத்திலிருந்து 3500 கி.மீ. உயர மலைப்பகுதியில் ஏற்பட்டது என்றும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உடனடியாக மீட்புக் குழுவினர் அனுப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வர� �ம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment