Monday, 14 May 2012

தாவூத் இப்ராகீமைவிட ஜெகன்மோகன் ரெட்டி ஆபத்தானவர்: சந்திரபாபுநாயுடு



ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

ஆந்திராவில் அடுத்த மாதம் நடைபெறும் இடைத்தேர்தல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும். 

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோக� �் ரெட்டி பிரசாரத்திற்கு அதிக கூட்டம் வருவதாகவும், அவரது கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஆந்திர மக்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் எப்போதும் தெளிவான முடிவையே எடுப்பார்கள். பிரபல தீவிரவாதி தாவூத் இப்ராகீமைவிட ஆபத்தானவர். இடைத்தேர்தலில� � அவரது கட்சி வெற்றி பெறுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. 

ஜெகன்மோகன் ரெட்டியின் மைத்துனர் அனில் கிறிஸ்தவ போதகராக உள்ளார். அவர் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களுக்கு சென்று போதனை செய்து வருகிறார். அப்போது அவர் கிறிஸ்தவர்களிடம் ஆதரவு திரட்டுகிறார். 

தன்னை மதசார்பற்றவர் என்று கூறிக்கொள்ளும் ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்தவர்களிடம் மறைமுகமாக மைத்துனர் மூலம் ஆதரவு திரட்டுகிறார். ஜெகன்மோகன் ரெட்டி கட்சி வெற்றி பெற்றால் ஆந்திராவில் ஜனநாயகத்தை வேரறுத்துவிடுவார். 

இவ்வாறு ச ந்திரபாபு நாயுடு கூறினார்.





No comments:

Post a Comment