Tuesday, 14 February 2012

பிரியாமணி மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வருகிறார்!!

 


நீண்ட இடைவெளிக்கு பின்பு கொலிவுட்டில் நடிக்க பிரியாமணி வருகிறார்.
கொலிவுட்டில் விஜய் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரன் இருவருக்குமே செய்தித்தொடர்பாளராக பி.டி.செல்வக்குமார் பணியாற்றி வருகிறார்.

நீண்ட காலமாக சினிமா உலகில் பணியாற்றி வரும் செல்வக்குமார் புதிதாக படம் ஒன்றை இயக்கஉள்ளார்.
செல்வகுமாரின் புதியபடத்தின் நாயகனாக நகுல் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் மூலம் நாயகி பிரியாமணி மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வருகிறார்.

நாயகன் ஜீவா இப்படத்தில் கௌரவ வேடத்தில் வருவதாகவும், படத்திற்கான திரைக்கதை அமைப்பதில் தான் ஈடுபட்டுவருவதாகவும் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றி விரைவில் அறிக்கை வெளியிடப்படஉள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


CICK HERE TO SEE THE VIDEO

No comments:

Post a Comment