வன்னியர் கல்லூரி விவகாரம் பெரிதாகி வருகிறது. டாக்டர் ராமதாஸ் மீது
போலீஸில் புகார் கொடுத்த கல்லூரியின் பேராசிரியர் மாயகிருஷ்ணன்
மீதுகல்லூரி நிர்வாகம் புகார் கொடுத்த நிலையில் தற்போது ஒரு மாணவரும்
புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பச்சைக் கவுண்டர் என்கிற அந்த மாணவர் ஒலக்கூர் காவல்
நிலையத்தில் கொடுத்துள்ளபுகாரில்,
டாக்டர் ராமதாஸுக்கு எதிராக புகார் கொடுத்த உதவிப் பேராசிரியர்
மாயக்கிருஷ்ணன், கல்லூரி மாணவர்களிடையே பிரிவினையைத் தூண்டும்
வகையில்பேசுவார்.
கட்டணம் செலுத்த வேண்டாம், சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகளுக்கு வர
வேண்டும் என்று கூறுவார். இதை எதிர்த்துக் கேட்டதால் என்னை கொலை
செய்துவிடுவேன் என்று கொலைமிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மாணவர்களிடையே வன்முறையைத் தூண்டினார், தட்டிக் கேட்டபோது மிரட்டினார்
என்று மாயகிருஷ்ணன் மீது ஏற்கனவே கல்லூரி அலுவலர் மாமல்லனும் ஒரு புகார்
கொடுத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
முன்னதாக மாயகிருஷ்ணன் ஒலக்கூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில்
தன்னை டாக்டர் ராமதாஸ் தூண்டுதலின் பேரில் கல்லூரி இயக்குநர்
ஹரிகிருஷ்ணன் அவரது உதவியாளர் வெங்கடேசன் தாக்கினர் என்று
கூறியிருந்தார். இதன் பேரில் ராமதாஸ் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீஸார்
வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மாறி மாறி
புகார்களாக வந்தவண்ணம் உள்ளன.
No comments:
Post a Comment