' மாப்பிள்ளை ' படத்தின் மூலம் தனுஷுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகிற்கு
அறிமுகமானவர் ஹன்சிகா. அப்படத்திற்கு பிறகு பல்வேறு படங்களில் நாயகியாக
நடித்து வருகிறார்.
' சின்ன குஷ்பு ' என அவரது ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். தற்போது அவர்
ஒப்பந்தமாகி இருக்கும் படங்கள்யாவும் இரண்டு நாயகிகள் கதையாக இருக்கிறது.
' வேலாயுதம் ' படத்தில் விஜய் ஜோடியாக நடித்தாலும் , ஜெனிலியா இன்னொரு
நாயகியாக நடித்து இருந்தார். தற்போது சிம்புவுடன் ' வேட்டை மன்னன் '
படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சிம்புவிற்கு நாயகியாக அல்லாமல் ஒரு கேங்ஸ்டர் பாத்திரத்தில் நடிக்க
இருக்கிறார் ஹன்சிகா. நாயகியாக தீக்ஷா சேத் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இவர் இல்லாமல் , மற்றொரு நாயகியும் இப்படத்தில்நடிக்கிறார். ஆக , மூன்று
நாயகிகளில் ஒருவராக ஷன்சிகா இருப்பார். இருப்பினும் , அது தனக்கு
வித்தியாசமான பாத்திரம்என்பதால் நடிக்க ஒப்புக்க்கொண்டாராம்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து
நடிக்க இருக்கிறார். "அனுஷ்கா நாயகியாக இருந்தாலும் எனக்கும்படத்தில்
நடிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இயக்குனர் என்னுடைய பாத்திரத்தை
அழகாக வடிவமைத்து இருக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.
சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதால் , தனக்கான ரசிகர் வட்டம் இன்னும்
அதிகமாகும் என்று நம்புகிறார்.
இரண்டு நாயகிகள் படமாக இருந்தால் என்ன... மூன்று நாயகிகள் படமாக
இருந்தால் என்ன.. ? மக்கள் மனதில் இடம் பிடிப்பது தான் முக்கியம்.. என
தோழிகளிடம் சொல்லி வருகிறார் ஹன்சிகா.
No comments:
Post a Comment