பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மொபைல் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் சட்டமன்றத்தில் இந்த தீர்மானம் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் வேளைகளில் அதில் கவனம் செலுத்தாமல் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதிலேயே நேரத்தை செலவிடுவதாக ரஹீலா காதீம், சட்டமன்றத்தில் நேற்று இந்த விவாதத்தை எழுப்பினார். இதன் தொடர்ச்சியாக இன்று சட்டசபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment