தமிழக அரசு ஊழியர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போனஸ் வழங்க
முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். புத்தாண்டுதினத்தன்று முதல்வர்
பிறப்பித்துள்ள இந்த உத்தரவுக்கு, அனைத்து ஊழியர் சங்கங்களும் பாராட்டு
தெரிவித்துள்ளன. இதன் மூலம், அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 3,000
ரூபாய் கிடைக்கும். அரசுக்கு கூடுதலாக,264 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
அ.தி.மு.க., அரசு அமைந்த பின், அரசு ஊழியர்களுக்கு சலுகைகள்
நிறுத்தப்படுமென பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், தீபாவளியின் போதே,
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு அதிகபட்சம் 20 சதவீதம் வரை போனஸ் வழங்க,
முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டார். அதையடுத்து, சிறப்பாக பணியாற்றும் அரசு
ஊழியர்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை
சமீபத்தில் வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக, நேற்று புத்தாண்டு
பிறந்ததும், அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில், பொங்கல் போனஸ்
வழங்குவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால், அரசு ஊழியர்கள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலான அரசு ஊழியர்
சங்கங்கள், இந்த உத்தரவுக்கு பாராட்டு தெரிவித்து, மகிழ்ச்சியை
வெளிப்படுத்தியுள்ளன.
முதல்வரின் உத்தரவுப்படி, 2010-11ம் ஆண்டிற்கு, "சி' மற்றும் "டி' பிரிவை
சேர்ந்த அலுவலர்கள் அனைவருக்கும், 30 நாட்கள் ஊதியத்துக்கு இணையாக, 3,000
ரூபாய் உச்சவரம்புக்கு உட்பட்டு, போனசும், "ஏ' மற்றும்"பி' பிரிவைச்
சேர்ந்த அலுவலர்கள் அனைவருக்கும், 1,000 ரூபாய் சிறப்பு போனஸ்
வழங்கப்படும். ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் முன்னாள்
கிராம அலுவலர்களுக்கு தலா 500 ரூபாய்பொங்கல் பரிசு வழங்க, முதல்வர்
உத்தரவிட்டுள்ளார். நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது
அதற்கு மேலாக பணிபுரிந்து, மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெறும், முழு
நேர மற்றும் பகுதி நேர சில்லரைச் செலவின பணியாளர்கள், தொகுப்பூதியம்
பெறும் பணியாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு திட்டம்,
அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோருக்கு, 1,000 ரூபாய்
வழங்க முதல்வர் உ த்தரவிட்டுள்ளார்.
ரூ.264 கோடி செலவு: இதேபோல, ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் ஊராட்சி
உதவியாளர்கள்,
மக்கள் நலப்பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான
தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுவோருக்கும்,
சிறப்பு ஊதியமாக 1,000 ரூபாய் வழங்கப்படும்.
உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள்
ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்
குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம், இந்திய வேளாண்
ஆராய்ச்சிக் கழகத்தின் சம்பள விகிதம் பெறும் அனைவருக்கும் இந்த போனஸ்
வழங்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 264 கோடி ரூபாய் செலவாகும்.
No comments:
Post a Comment