Monday, 30 January 2012

18 வயதிலேயே திருமணத்திற்கு தயாரானபோதும் இன்னமும் மாப்பிளை கிடைக்காத வருத்தத்தில் பத்மபிரியா!

நான் காதலித்து திருமணம் செய்துகொள்ள வாய்ப்பில்லை. ஆனால் நான் நிச்சயம்
திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்வேன். 18 வயதிலேயே
திருமணத்திற்கு தயாராகிவிட்டேன். ஆனால் இன்று வரை நல்ல மாப்பிள்ளை தான்
கிடைக்கவில்லை.
முதன் முதலாக என்னை பெண் பார்க்க வந்தவர் எனது வங்கிக் கணக்கில் எவ்வளவு
பணம் இருக்கிறது என்று கேட்டார். அடுத்து வந்தவர் தனது 2
குழந்தைகளுக்கும் தாயாக இருக்க வேண்டும் என்றார். அதனால் அவர்கள்
இருவரையும் நிராகரித்துவிட்டேன்.
திருமணம் என்பது ஒரு அற்புதமான வரம். திருமணம் செய்து அதை
அனுபவிக்காவிட்டால் பெண்ணாய் பிறந்து என்ன பயன் என்றார்.
எம்.பி.ஏ. படித்திருக்கும் பத்மபிரியா தற்போது நியூயார்க்
பல்கலைக்கழகத்தில் பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன் படிக்கவிருக்கிறார் என்பது
குறிப்பிடத்தக்கது. அவருக்கு 50வயது வரை நடிக்க ஆசை உள்ளதாம்.

No comments:

Post a Comment