Saturday, 24 December 2011

முருகதாஸின் கதை திருட்டு: உஷார் உதவி இயக்குனர்களே!

 
 
தங்கர்பச்சானின் உதவியாளர் கோபியிடம் இருந்து டைட்டிலையும், கதையையும் முருகதாஸ் இயக்குனர் திருட காரணகர்த்தாவாக இருந்த மரிக்கொழுந்து பட இயக்குனர் தற்போது முருகதாசின் வலதுகரமாகவும், ஆஸ்தான கதை கேட்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
 
முருகதாசின் அசிஸ்டென்டுகளில் ஒருவர் எடுத்த "எங்கேயும் எப்போதும்" படத்தில் நடித்த சர்வா எனும் சர்வானந்தத்துக்கும் மேனஜராக இவர் பணியாற்றி வருகிறாராம். சர்வாவுக்காக கதை தேடி அலையும் ஜெகன் சதா சர்வ காலமும் இளம் இயக்குனர்கள் பலரிடம் கதை கேட்டு வருகிறார். ஆகையால், கோலிவுட் உதவி இயக்குனர்களே உஷார்!
 
ஜெகனிடம் கதையை இழந்த கோபியோ தற்போது "கறுப்பர் நகரம்" என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறாராம். அதனால் ஜெகன், முருகதாஸ் மீது போலீசில் புகார் அளிக்காமல் இருப்பதாக கூறுகிறது விவரமறிந்த வட்டாரங்கள்!
 
இதை சாதகமாக்கிக் கொண்டு முருகதாஸ் அண்ட் கோவினர் தொடர்ந்து அடுத்தவர் கதையைத் திருடக் கூடாது என்பதற்காகவே இந்த ஃபாலோ அப் நியூஸ்!



No comments:

Post a Comment