அனுமதிக்கப்பட்ட தொகையை விட கூடுதல் தொகை வசூலிக்கும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுமதிக்கப்பட்ட தொகையான ரூ. 70ஐ விட அதிகம் வசூலிக்கும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திற்கான அட்வான்ஸ் மற்றும் சந்தா தொகையை விரைவில் செலுத்துமாறும், தாமதமானால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment