Sunday, 9 October 2011

மருத்துவமனையை வாங்க பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா

 
 
 
திருவண்ணாமலை நகரை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் வெளிநாட்டு நிதி உதவியுடன் நடத்தப்படும் ரங்கம்மாள் மருத்துவமனை உள்ளது.
 
இந்த மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெரும் வசதி உள்ளது. வெளிநோயாளிகள் பிரிவு, அவசர பிரிவு என செயல்படும் இம்மருத்துவமனையை ரஞ்சிதா புகழ் நித்யானந்தா சொந்தமாக வாங்க விலை பேசிவருவதாக கூறப்படுகிறது.
 
 
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தா, அவரது சொந்த ஊரான திருவண்ணாமலையில் புதியதாக மருத்துவமனை துவங்க ஆலோசனை நடத்தினார். இதற்காக வெளிநாடுகளில் நிதி பெறவும் முயற்சி செய்துகொண்டிருந்தார்.
 
அப்போதுதான் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானது. இதிலிருந்து தப்பினால் போதும் என அத்திட்டத்தை அப்போதுகைவிட்டிருந்தார்.
 
தற்போது அவர் மருத்துவமனையை வாங்க நேற்றும் இன்றும் திருவண்ணாமலையில் தங்கி நேரிடையாக பேரம் வருகிறார் என்று கூறப்படுகிறது.
 
 
 
 


No comments:

Post a Comment