Sunday, 20 October 2013

டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. போட்டி வேட்பாளரை தேர்வு செய்ய விஜயகாந்த் பயணம் DMDK in the Assembly elections in Delhi Vijayakanth to select candidate to contest trip

டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. போட்டி வேட்பாளரை தேர்வு செய்ய விஜயகாந்த் பயணம் DMDK in the Assembly elections in Delhi Vijayakanth to select candidate to contest trip

சென்னை, அக். 21–

டெல்லி பிரதேச தே.மு. தி.க. நிர்வாகிகள் கூட்டம் அவைத்தலைவர் கணேஷ் தலைமையில் நடந்தது.

கூட்டம் முடிந்ததும் கணேஷ் கூறியதாவது:–

டெல்லியில் வாழும் தமிழர்களில் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும். ரேஷன் அட்டை வழங்க வேண்டும்.

அடிப்படைவசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27–ந் தேதி ஜந்தர்மந்தரில் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிட முடிவு செய்துள்ளது. அதற்காக விருப்பமனு பெறப்பட்டு வருகிறது.

இதுவரை 22 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். 27–ந் தேதி டெல்லி வரும் விஜயகாந்த் வேட்பாளர்களை தேர்வு செய்கிறார். அன்றைய தினமே போட்டியிடும் வேட்பாளர் பெயரை விஜயகாந்த் அறிவிப்பார்.

இவ்வாறு கணேஷ் கூறினார்.

கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் தட்சிணா மூர்த்தி, பொருளாளர் தாணப்பன், மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

27–ந் தேதி டெல்லி செல்லும் விஜயகாந்துக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

...

shared via

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு: சென்னையில் 3 இடங்களில் ரெயில் மறியல் 140 பேர் கைது commonwealth conference india participate oppose chennai 3 place siege 140 people arrested

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு: சென்னையில் 3 இடங்களில் ரெயில் மறியல் 140 பேர் கைது commonwealth conference india participate oppose chennai 3 place siege 140 people arrested

தாம்பரம், அக். 20–

இலங்கையில் நடைபெறும் காமல்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழகம், ஒருங்கிணைந்த அம்பேத்கர் இயக்கம் சார்பில் இன்று சென்னையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு பெரியார் திராவிடர் கழக காஞ்சி மாவட்ட அமைப்பாளர் கண்ணதாசன் தலைமையில் பெண்கள் உள்பட 50 பேர் தாம்பரத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் ரெயிலை மறித்து நின்றபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.

ஒருங்கிணைந்த அம்பேத்கர் மன்ற காஞ்சி மாவட்ட பொருளாளர் கோபிநாத் தலைமையில் 40 பேர் இன்று காலை 11 மணியளவில் குரோம் பேட்டையில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை குரோம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

பெரியார் திராவிடர் கழக மாநில தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் 50 பேர் காலை 11.15 மணியளவில் பல்லாவரத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பல்லாவரம் போலீசார் கைது செய்தனர்.

...

shared via