Tuesday, 23 July 2013

நரேந்திர மோடிக்குத்தான் பிரதமர் ஆகும் தகுதி உள்ளது: காஞ்சி சங்கராச்சாரியார் பேட்டி Prime Minister Narendra Modi has all the qualities Kanchi Sankaracharyar interview

வருகிற பாராளுமன்ற தேர்தலில் குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த பாரதீய ஜனதா திட்டமிட்டு வருகிறது.
இதே போல் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கான வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரில் யாருக்கு பிரதமர் பதவிக்கான தகுதி அதிகம் உள்ளது என்பது பற்றி பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் இதற்கு முன்பு கருத்து தெரிவிக்கையில் சோனியாகாந்தி வெளி நாட்டுகாரர் என்றும், இந்தியாவுக்கு தலைமை தாங்கும் தகுதி அவருக்கு கிடையாது என்றும் ஏற்கனவே கூறி இருந்தார்.
இப்போது மீண்டும் ஜெயேந்திரர் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:–

பா.ஜனதா கூட்டு முறிந்ததால் பீகாரில் நிதிஷ்குமார் செல்வாக்கு சரிந்தது

பாரதீய ஜனதாவின் தேர்தல் பிரசார குழு தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து விலகியது.
பாரதீய ஜனதாவுடனான கூட்டணியை முறித்ததால் பீகார் முதல்– மந்திரி நிதிஷ் குமாரின் செல்வாக்கு சரிந்து உள்ளது. தனியார் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு மூலம் இது தெரியவந்தது.
2011–ம் ஆண்டு ஜூலை மாதம் பீகாரில் நிதிஷ்குமாரின் அரசு மீது 90 சதவீதம் பேர் திருப்தி தெரிவித்தனர். ஆனால் கடந்த ஜூன் மற்றும் இந்த மாதம் நடத்திய கருத்து கணிப்பின்படி 69 சதவீதம் பேரே நிதிஷ்குமார் அரசு மீது திருப்தி தெரிவித்து உள்ளனர்.