Wednesday, 10 July 2013

பெருந்தலைவர் காமராஜர் போல மீண்டும் ஒரு தலைவர் வர வேண்டும்

பெருந்தலைவர் காமராஜர் போல மீண்டும் ஒரு தலைவர் வர வேண்டும். அவர் தந்தது போல பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா
முழுமைக்கும் வர வேண்டும் என்ற ஏக்கம் அவரது வாழ்க்கை வரலாற்றை படித்தவர்களுக்கும் கேள்விப்பட்டவர்களுக்கும் இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் காமராஜரின் வாழ்க்கை, இன்றைய இளம் தலைமுறையினரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் திரண்டிருந்த மாணவ – மாணவிகளின் கூட்டமே சாட்சி.

லீனாவை பேஸ்புக் கில் பழகி ஏமாற்றினேன்

சென்னை கொண்டு வரப்பட்ட காதலன் சுகாஷ் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:–
எனது சொந்த ஊர் பெங்களூர். அப்பா பெயர் சந்திரசேகர். அம்மா பெயர் மாலா. பெங்களூர் நாகா பாவி கிராமத்தில் சிவா அபார்ட்மெண்ட்டில் வசித்து வந்தேன். பெங்களூர் கிரிஸ்ட் காலேஜில் படித்த நான் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டேன்.
எனது பெற்றோர் ரப்பர் கம்பெனி நடத்தி வருகிறார்கள். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும், சினிமா தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. இதற்காக மோசடியில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க தொடங்கினேன்.
லேப்–டாப்பில் என்னைப் பற்றிய விவரங்களை பதிவு செய்து கொண்டேன்.